Discover and read the best of Twitter Threads about #ரமணமகரிஷி

Most recents (4)

#மகாபெரியவா மகா பெரியவா காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அப்போது ஓர் அடியவர் பெரியவாளிடம் உரிமையோடு கேட்டார். "சுவாமி வெளிநாட்டைச் சேர்ந்தவரான #பால்பிரண்டனுக்கு அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது
பெரியவாளின் நிஜமான தோற்றம் தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?”
இந்தக் கேள்விக்குப் பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு
காத்திருந்தனர். அந்த பதில் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை
Read 21 tweets
நமக்கு இப்போ #கோடம்பாக்கம் என்றாலே #கோலிவுட் தான். சிலர் ஆர்காட் நவாபின் குதிரை லாயம் - கோடே-பாக் என்பது தான் மருவி கோடம்பாக்கம் ஆனது என்றும் சொல்வார்கள். ஆனால் கோடம்பாக்கம் #கார்கோடகன் சிவபெருமானை வழிபட்டதால் ஏற்பட்ட பெயர்! கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது
பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் #வேங்கீஸ்வரர் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் #சுனந்தமுனிவர் (மூஞ்சிகேசவ முனிவர்) முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில். (இக்கோவில் எனக்குத்
தெரிந்தே மிகச் சிறியதாகிவிட்டது.
அவ்வளவு ஆக்கிரமிப்பு + 100 அடி ரோட் விரிவாக்கத்தில் கோவில் இடம் கையகப்பட்டது. குளத்தையே காணோம். கீழேயுள்ள படங்கள் குளம் இருந்த இடம்) சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால்
Read 12 tweets
#ரமணமகரிஷி #பகவான்ரமணர்
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.

நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு Image
அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம்
நீயே செய்துகொள் என்பன அவர் உரைத்த உபதேசங்கள்.
மந்திரங்களை நாமே கற்று ஜபிக்கலாமா என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் உரைத்த பதில்: இல்லை. ஒருவர் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி அதை ஒரு கதை மூலம்
Read 9 tweets
பலராம ரெட்டி M.A (1908-95) ஆந்திராவில் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். 1931ல் ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம் சென்ற இவர் 1937ல் ஸ்ரீ ரமணரின் பக்தராக ஆனார். My Reminiscences என்ற புத்தகம் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் இவரது வாழ்வு மற்றும் சாதனை ஆகியவைப் பற்றி விளக்குகிறது.
“ஸ்ரீபகவானின்
அவதாரம் இந்தப் பூமியை ஆசீர்வதிப்பதற்காக நிகழ்ந்தது. “அவரது கால்தடம் பட்டதும் பூமி தான் ஆசீர்வதிக்கப்பட்டதை உணர்ந்தாள்” என்று பாகவதத்தில் ஒரு வரி வரும். என்னைப் பொருத்தவரையில் இந்த பூமிக்கு விஜயம் செய்த அற்புதமான பிறவிகளில் பகவான் ஒருவர். அவருடன் சேர்ந்து வசிக்கும் போது பூர்வ
ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியத்தினால்தான் இப்பிறவியில் பகவானின் சேர்க்கை கிடைத்திருக்கிறது என்பதை உணரலாம். அவருடன் இருப்பது என்பது ஆகாயத்தில் இருப்பது போன்றது. அவருடன் பேச வேண்டாம். பேசி அவரிடமிருந்து எதையும் தெரிந்து கொள்ள முயலவேண்டாம். சூரியக் கதிர்கள் போல நிறுத்தாமல் அவர்
Read 23 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!