Discover and read the best of Twitter Threads about #ராமாயணம்

Most recents (5)

#ராமாயணம் #விபீஷண_சரணாகதியின் சிறப்பு.
ராமாயணமே சரணாகதி தத்துவத்தின் சிறப்பை சொல்லும் ஓர் இதிகாசம். அதில் விபீஷண சரணாகதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சரணாகத விதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது விபீஷண சரணாகதி மட்டுமே. #சரணாகதி என்றால் இனி என் வாழ்க்கை முழுவதையும் உன்னிடம் விட்டு Image
விடுகிறேன். நீயே என்னை வழி நடத்து என்பது. இந்த பொறுப்பை யாரிடம் தருகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதற்குத் தகுதி வாயந்தவனிடம் மட்டுமே கொடுக்க முடியும். ராமனின் சிறப்பான குணங்களாக வர்ணிக்கப் படும் ஒரு குணம் அவன் #சரணாகத_வத்சலன் என்பது. அதாவது தன்னைச் சரணடைந்தவர்களிடம் மிகுந்த
வாத்சல்யம் காட்டுபவன் என்று. அவனைச் சரணடைந்தவர் கைவிடப்
படார். ராமாயணம் ஒரு சரணாகதி இதிகாசம் என்பதற்கு சம்பவங்களை பார்ப்போம். ராமாயணம் தொடங்குவதே தேவர்கள் மகாவிஷ்ணுடம் அரக்கர்கள் இம்சையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு வைகுண்டத்தில் அவரிடம் சரணாகதி செய்கின்றனர். அவரும் தான்
Read 32 tweets
#ராமாயணம் #ஜடாயு_சிலை கழுகு பார்வையில் பிரமாண்டமான ஜடாயு சிலை, இறக்கை வெட்டுப்பட்டு ஜடாயு விழுந்த இடத்தில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது. மகா விஷ்ணுவுக்கு வாகனமாக விளங்கும் கருடனின் சகோதரனான அருணனின் மகன் தான் ஜடாயு. வனத்தில் ராமனோடு இருந்த சீதையை, ராவணன் இங்கே ImageImage
நயவஞ்சகமாக தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்தான். அப்போது ஜடாயு, ராவணனோடு போரிட்டார். அப்போது ஏற்பட்ட சண்டையில், ராவணன் தன் வாளால், ஜடாயுவின் இறக்கைகளில் ஒன்றை வெட்டினான். படுகாயம் அடைந்த ஜடாயு, ராமனிடம் சீதையை தூக்கிப் போன திசையை காட்டி விட்டு உயிரிழந்தது. இறக்கை வெட்டுப்
பட்டு ஜடாயு விழுந்த இடம், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தான் பிரமாண்டமான ஜடாயு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மலையேற்ற பயிற்சி எனப்படும் ‘டிரெக்கிங்’ மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த Image
Read 9 tweets
#ராமாயணம் #ராவண_வதம்
(திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ‘அபூர்வ ராமாயணம்’ வரிசையில் 2ஆம் தொகுதியான ‘அனுமன் கதைகள்’ என்ற புத்தகத்திலிருந்து.)
ராம ராவண யுத்தத்தின் அன்றைய போர், சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் நிறுத்தப்பட்டிருந்தது. ராமன் தரப்பு வீரர்கள் அனைவரும் தங்கள் பாசறைகளுக்குத் Image
திரும்பி இருந்தார்கள். அன்று நடைபெற்ற போர் குறித்துப் பேசுவதற்காக ராமனது பாசறையில் அவசர அவசரமாக மந்திராலோசனை சபை கூட்டப்பட்டிருந்து. ராமன், லட்சுமணன், அனுமன், வீடணன், ஜாம்பவான், சுக்கிரீவன், அங்கதன் முதலிய முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்ன
ஆச்சரியம் இது! ராமபிரான் மாறி மாறி எத்தனையோ அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து பார்க்கிறார். ஆனால் எந்த அம்பாலும் ராவணனது உயிரைப் போக்க முடியவில்லையே? இந்த விந்தையின் சூட்சுமம் என்ன? ஏன் இப்படி நிகழ்கிறது? ராமன் கேள்விக் குறியோடு விபீஷணனைப் பார்த்தான். விபீஷணன் அந்த சூட்சுமத்தை
Read 27 tweets
#ராமாயணம் #யுத்தகாண்டம் #மஹிராவணன
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்
#ஜெய்ஸ்ரீராம்
#ஹனுமத்ஜெயந்தி_ஸ்பெஷல்

ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது. யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன், நளன், அங்கதன், நீலன், ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை
துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள், மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணம் அடைந்தனர். ராவணன் மிகுந்த கவலையடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்த போது, பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி, நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது
ஏனோ? உன் முகமும் கவலையில் உள்ளதே என வினவினான். ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் சீதாதேவியை சிறைப் பிடித்தது, ஜடாயு வதம், மாதா சீதாவின் பிடிவாதம், மற்றும் வானர ஹனுமன் வந்தது, இலங்கையை எரித்தது, இப்போது ஶ்ரீராமன் வானரப் படையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும்
Read 24 tweets
#தூயபக்தி #ராமாயணம் #சனாதனதர்மம்
ராமன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டுக்குச் செல்கிறார். அவர் கூட சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூட சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக #குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும்
அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை.
“என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?”என பக்தியோடு கேட்கிறான்.
“கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.”
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட
தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி '”கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” என, படகு நெருங்கி வந்தது.
“கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவரின் வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்.”
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!