Discover and read the best of Twitter Threads about #வள்ளலார்

Most recents (5)

#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,

புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.

ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.

2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.

புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.

இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
Read 7 tweets
#வள்ளலார்
இராமலிங்க வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதி. இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர். Image
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று, பயிர்களுக்கு தேவையான நீர் பசியையே பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தவர் வள்ளலார். அவரால் மனிதர்களின் பசியை நிச்சயமாக பொறுத்துக் கொண்டிருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் வடலூர் தருமசாலை ஒன்றை நிறுவி, பசித்த நிலையில் வாடுபவர்களுக்கு
உணவு வழங்கும் வசதியை தொடங்கிவைத்தார். வள்ளலாரின் வழியில் நின்றவர்களும், அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்த செல்வந்தவர்களும், தங்களால் இயன்ற உதவியை அரிசியாகவோ, மற்ற தானியங்களாகவோ தருமசாலைக்கு வழங்கி வந்தனர். அதனால் தான் அந்த தருமசாலையில் உள்ள உணவு சமைக்கும் அடுப்பானது, ‘அணையா
Read 17 tweets
சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்
#தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
#திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்
Read 16 tweets
#அறிவோம்_மகான்கள் #இராமலிங்க_அடிகளார் #சத்திய_தருமசாலை #வடலூர் #வள்ளலார் #அணையா_அடுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் 156 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்த அன்னதானம் இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் ஒரு சிறப்பு, அவ்வடுப்பு இன்றுவரை அணையாமல் (அணையா அடுப்பு) இருக்கிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’
இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும்.
வள்ளலார் பிறந்த ஊர் மருதூர். 1823ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம். தந்தை இவரின் 6வது வயதில் இறந்து விட்டதால்
இவர் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கோ கல்வியில் நாட்டமில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகா
Read 15 tweets
#ஒளவையார் #வள்ளலார் இவர்களுக்குள் அதிசயமாக பல ஒற்றுமைகளும் ஒரே ஒரு வேற்றுமையும் உள்ளது. அது என்ன?
ஔவையார் இயற்றிய #உலகநீதிசெய்யுள்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல்
வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!