Discover and read the best of Twitter Threads about #BharathVruksh

Most recents (21)

🌺ஆகாயப் பதிவுகள்... / Akashic Records of Chitra Guptan....🌺

#BharathVruksh

வணக்கம் நண்பர்களே…. இந்த தலைப்பைப் படித்தவுடன் எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதா?

ஆம்… நாம் தவறு செய்கையிலெல்லாம் நமது முன்னோர்கள்,
“நீ பண்ணற ஒவ்வொன்னையும் சித்ரகுப்தன் கணக்கு எழுதி வச்சிண்டிருப்பான்… தப்பு பண்ணினா, அதைப் பார்த்து தண்டனை தருவான்…”

என நமது சிறு வயதில் காதில் ஓதியது நினைவுக்கு வருகிறது அல்லவா? ஆம்… அன்று நம் முன்னோர் கூறியது உண்மை என்பதை இன்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அவர்கள் அதனை அறிவியல் ரீதியாக மட்டுமே விளக்கிக் கூறியுள்ளனர். ஆனால், அது எவ்வாறு நம் வாழ்வில் தொடர்புடையதாகிறது என்பதை, வேத ஸ்லோகங்கள் மற்றும் விஞ்ஞானத் தரவுகளோடு இங்கே பார்ப்போம்.

மேலும், இது ஒரு ஆன்மாவின் முடிவு தொடர்புடைய விஷயம். அதனால், அதற்குக் கடவுளாக நாம் போற்றும்
Read 46 tweets
🌺Bhartha Varsham and Sanathana Dharmam🌺

#BharathVruksh

🌿வைஸ்ய தர்மம் 🌿

வைஸ்யர்கள் என்பவர்கள் வாணிபம் செய்பவர்கள் என்பதைப் பார்த்தோம். இவர்களது வாழ்க்கைக்கான தர்மமும் வரைமுறைப் படுத்தப்பட்டதே. Image
வைஸ்யர்கள் அநேகமாக ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்ந்தனர். இவ்வர்ணத்தில் வாணிபம் செய்வோர், விவசாயிகள், பண்ணைகள் வைத்து ஆநிரை வளர்ப்போர், குதிரை, ஆடு, எருமை போன்றவை வளர்த்து விற்கும் வியாபாரிகள், கலைவாணர்கள் போன்றோர் அடங்குவர்.

இவர்கள் அரசன் மற்றும் மக்களுக்குத் தேவையான பொருட்களை
வியாபாரம் செய்வதற்காக, அனைவரும் எளிதில் வந்து செல்ல வசதியாகவும், பொருட்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், இவர்களது வாணிபத் தலங்களை ஊரின் மத்தியில் வைத்தனர். வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களைப் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைக்க, கிடங்கினை ஏற்படுத்தினார்கள்.
Read 19 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿க்ஷத்ரிய தர்மம் 🌿

க்ஷத்ரியர்களில் நாட்டை ஆளும் மன்னர், மந்திரிகள், போர் வீர்ர்கள், சேவகர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அரசின் கீழ் வேலைகள் செய்வோர், நிஷாதர்களின் அரசன், நிஷாதர்கள் ((காடுகளில் வாழும் வேடர்கள்), Image
ஆற்றங்கரைகளில் குடியிருந்து நாட்டைக் காக்கும் வீர்ர்கள், என அனைவருமே அடங்குவர்.

ஆரம்பத்தில், க்ஷத்ரிய தர்மம் என ஒன்று பொதுவானதாக இருந்தது. பின் அவ்வகை மனிதர்களை வழிநடத்த, முதல் க்ஷத்ரியன் என்று ஒரு தலைவன் உருவாக்கப்பட்டான். இந்த க்ஷத்ரிய தர்மத்திற்கும் வாழ்க்கைக்கான விதி முறைகள்
உருவாக்கப்பட்டன. அதில் முதல் க்ஷத்ரியனுக்கு, அவனது வாழ்வின் விதிமுறைகள் கடினமானதாக மாற்றப்பட்டது.

மக்களைக் காக்க அரசாங்கம் என ஒன்று அமைக்கப்பட்டது. அவனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களின் முடிவில் அரசாங்கத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டன.
Read 32 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4 : 5🌿

🌱வர்ணங்களும்….. பிரிவுகளும்…..🌱

வர்ணங்கள் என்னும் வகையில், நான்கு வித தொழில்கள் அடிப்படையில் வந்ததால், அவற்றின் இயல்புகளை ஒட்டி, அவ்வர்ணங்களை ஏற்று வாழ்வோருக்கும் சில நியதிகள் விதிக்கப்பட்டன.
இவ்விடத்தில் முக்கியமாக ஒன்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸத்ய யுகம் எனப்படும் க்ருத யுகம் முதல், ஒருவர் தான் சார்ந்த வாழ்வுமுறைக்கு ஏற்றவாறு எப்படி தனது உணவு, உடை, நித்யகர்மா, பழக்க வழக்கம், கல்வி, தனிமனித ஒழுக்கம், வசிப்பிடம், தொழில், குடும்பம், ஆன்மீகம், சமூகம் போன்றவற்றை
அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை, அவர்களது வாழ்க்கை வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், கருத்துச் சிதறல்கள் இல்லாமல் ஒருமித்த எண்ணத்தோடு தன் வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே அவர் அவருக்கானவற்றை மட்டும் கற்றுத் தந்து வாழ வைத்தார்கள்.
Read 35 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

வெளி நாடுகளில் ராமனின் பெயர்த் தடங்களா?? எனும் ஆஸ்சர்யத்தின் பதிலைப் பார்ப்போமா...

🌿38) ராமரின் பெயர்த்தடங்கள் 🌿

உலகமெங்கும் ராமரின் பெயரில் இடங்கள் மற்றும் மக்கள் பெயர்கள் உள்ளதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.
அவற்றில் நாம் சில இடங்களில் உள்ளதை மட்டும் தற்போது பார்ப்போம்... இவை IRAQ, LEBANON, SYRIA, EGYPT, SOUTH AMERICA ஆகிய இடங்களில் உள்ளவை.

இவை அனைத்தும் ”ராம்” எனும் வார்த்தையில் ஆரம்பிப்பதைக் காணலாம்!!

1) Ra-allah – Place at Palastein now under Israel ;

🌞ரா–அல்லாஹ்
2) Ramathiam – Place in Israel called Ramathiam, which is nothing but a corruption of ‘Ramadhaam’, means - place of Ram, like Akshaydhaam.

Dental ‘th’ can become ‘dh’, and in transliterating sounds, ‘a’ can become 'I’ or ‘ai’ ;

🌞ராமாதியம் – இஸ்ரேலில் உள்ள பகுதி.
(Ref : Wiki)
Read 37 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

13) ராவண கோடா – Ravan Goda

ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை. ஸீதா தேவியை இங்கும் சிறையிட்டிருந்தான். ஹனுமன் தீக்கிரையாக்கிய ராவணனின் மாளிகைக்கோட்டை.

Ravan Goda which was burt by Hanuman. Image
அவன் பெயராலேயே அது *ராவண் கோடா* என அழைக்கப்படுகின்றது.

14) ஸீதா வாகா – Sitawaka in Avissawella

ஸீதா தேவியை பல இடங்களில் ராவணன் மறைத்து வைத்திருந்தானாம். அதில் முக்கியமாகக் கருதப்படுவது ஸீதா வாகா எனும் பகுதி. Image
ஸீதா தேவி சிறை வைக்கப்பட்ட வேறு சில இடங்கள், நுவரேலியா அருகிலுள்ள ஸீத்த எலியா மற்றும் இஸ்திரீபுரா.

15) இஸ்திரீபுரா – Ishtripura

100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. ஸீதைக்குக் காவலாக அரக்கியர் பலரை ராவணன் நியமித்த, காவல் காத்த அரக்கியர்கள் தங்கிருந்த இடம் இது. ImageImage
Read 42 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dhrmam🌺

#BharathVruksh

🌿வானரங்களின் வாழ்க்கை 🌿

இதில் வாலி, ஸுக்ரீவன் இருவரின் வாழ்க்கையையும் பார்க்கும் போது, காட்டில் வசிக்கும் குரங்குகள் இத்தனை புத்தியுடன் இருந்ததா? எனக் கேட்கத் தோன்றும்.

ஆனால் வால்மீகி இவர்களைப் பற்றிக் கூறும் போது,
தேவர்கள் இறைசேவை செய்து பழகியவர்கள். பகவான் பூமியில் அவதரித்து விட்டால், தாங்கள் என்ன செய்வது என்று, தாங்களும் வானரங்களாக, அதாவது மதிக்கக்கூடத் தக்கவையாக இல்லாத போதும், அவ்வாறிருந்தும் இறைசேவை செய்ய முடியும் என்பதைக் காட்டவே வந்தனர் என்கிறார்.
இது ஒரு புறம்.
ஆனாலும் வாலி, தனது தம்பி *ஸுக்ரீவன் மனைவி ருமை*யை அபகரித்ததில் இருந்து, அவர்களிடையேயும் குடும்பம் என்னும் வாழ்க்கை முறை இருந்ததைக் காட்டுகின்றனர் என்றே தோன்றுகின்றது.

🌱அது கூறும் தர்மம்🌱

வானரமே ஆனாலும், அதர்ம வழியில் சென்றால், அவரை வீழ்த்த சில அதர்மங்களைத் திருப்பிச் செய்வது
Read 40 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿வஸிஷ்டரின் வாழ்க்கை 🌿

வஸிஷ்டரை *ப்ரும்மரிஷி* என்கிறது வேதம். இதற்குக் காரணம் அவரது பிறப்பு!!

அவர் ஆதியாக ப்ரும்மாவின் மூச்சிலிருந்து தோன்றிய ப்ரஜாபதிகளில் ஒருவராதலால்,
அவர் ப்ரும்மாவின் மகன் என்கிறார் வால்மீகி தனது ராமாயனத்தில்.

மேலும், அக்னிவழி நுழைந்து, வருணபகவானால் ஸ்வீகரிக்கப்பட்டு, ப்ரஜாபதி மூலம் அகஸ்த்யர், வஸிஷ்டர் எனும் இரு மகன்கள் தோன்றினார்கள் என்கிறது புராணங்கள். இதனால் இவர்கள் மைத்ராவருணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்
என்று கூறுகிறது ரிக் வேதம். இவர் *கர்தம ப்ரஜாபதி – தேவஹூதி* எனும் தம்பதியினரின் மகளும், கபில முனிவரின் சகோதரியுமான அருந்ததியை மணந்து கொண்டார். (இவர் அனஸூயையின் மகள் அருந்ததி அல்ல).

ரிக் வேதத்தில் இவர் கூறியதாக பல ஸ்லோகங்கள் உள்ளன. விஸ்வாமித்ரருடன் போட்டியிட்டாலும்,
Read 38 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱7) பெண்கள் வாழ்க்கை🌱

🌿அருந்ததி🌿

தனது கணவரது குருகுலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு, குருபத்தினி தாயாகவே விளங்கினாள் என்பதற்கு அருந்ததி தேவி உதாரணமாகத் திகழ்ந்தார். Image
அவரது அரவணைப்பினால் தான் அங்கு பயின்ற ராஜகுமாரர்கள் எவரும் மனை பிரிந்த துக்கம் இன்றி கல்வி பயில முடிந்தது.

அவரது தூய்மையான மனதாலும், தபோ பலத்தாலும், கணவருடன் கொண்ட ஒற்றுமையினாலும் மகிழ்ந்து, இறைவன் அவளை சிரஞ்ஜீவியாக வானில் நக்ஷத்ரமாக அருந்ததி வஸிஷ்டரோடு இருக்க ஆஸீர்வதித்தார்.
நாம் திருமணத்தில் பார்க்கும் அருந்ததி நக்ஷத்ரம் இவர் தான்.

Reference : revivaloftrueindia.com/2013/07/twin-s…
Read 58 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dhamram🌺

#BharathVruksh

🌱2) லக்ஷ்மணன் வாழ்க்கை🌱

இவர் ஆதிசேஷனின் அம்ஸம் எனக் கூறுகிறார் வால்மீகி. சிறு வயது முதலே ராமரைப் பிரியாதவர். இவரும் அனைவரையும் மதிக்கும் குணம் உடையவரே. ஆனாலும், சிறிது முன்கோபம் கொண்டவர்.
தமையன் ராமர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர்.

ராமரையும் ஸீதையையும் தாய் – தந்தை ஸ்தானத்தில் வணங்கியவர். ராமரைப் போலவே, தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணின் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்காதவர்.

ஸீதையின் அணிகலன்களைப் பார்க்கச் சொல்லி ராமர் கூறிய போதும்,
தினமும் அவர் பாதம் பணிவதால், காலின் மெட்டியைத் தவிர வேறேதும் தெரியாது எனத் தமையனிடம் கண்ணீர் உகுத்தவர்.

சிவதனுஸை உடைப்போரில்லை என ஜனகன் கூறியபோதும், கானகம் செல்லத் தந்தை கைகேயிக்கு வரமளித்த போதும், அவர்கள் இருவரையும், தனது தமையன் பேரில் கொண்ட பக்தியால் எதிர்த்தவர்.
Read 48 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱இதிஹாஸம் பிறந்தது🌱

வால்மீகிக்கு ராமரின் வரலாறு எப்படித் தெரிந்தது?
அவர் எவ்வாறு அதை லவ – குசர்களுக்குச் சொல்லித் தந்தார்?

அதற்கொரு கதை உள்ளது.

த்ரிலோக ஸஞ்சாரியான நாரதர், *ஸங்க்ஷேப ராமாயணம்* என்னும் பெயரில்
100 ஸ்லோகத்தில் ராம சரிதத்தை வால்மீகி முனிவருக்கு போதித்தார். அது முதல், வால்மீகியின் மனதில் ராமசரிதையே ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் வால்மீகி, தனது சிஷ்யன் பரத்வாஜ முனிவருடன் தமஸா நதியில் ஸ்நானம் செய்ய வருகிறார். பரத்வாஜர் கையில் வல்கலம் (மரவுரி),
மான்தோல் முதலியவற்றுடன் பின்தொடர்கிறார். அப்போது அங்கே இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஆண் க்ரௌஞ்ச பக்ஷியை வேடுவன் ஒருவன் அம்பெய்தி கொன்றுவிட்டான்.

இதுகண்டு மனம் வலித்த வால்மீகியின் வாக்கிலிருந்து அவரையறியாது ஸ்லோகம் போல சில வார்த்தைகள் வெளிப்பட்டுவிட்டன.
Read 43 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.
இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
Read 43 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.
இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
Read 23 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱ராவணன் வருகை🌱

லக்ஷ்மணன் வெளியேறியதும், ராவணன் ஒரு துறவி வேடமிட்டுக் குடிலின் வாசலில் வந்து நின்று, ஸீதையிடம் பிக்ஷை கேட்டான். ஸீதை அவனுக்குக் கால் அலம்ப ஜலம் அளித்து, உள்ளே வரும்படி அழைத்தாள்.
ராவணனும் குடிலுக்குள் நுழையப் பார்த்தான். ஆனால் லக்ஷ்மணன் இட்ட கோடு, அவனை நுழைய விடாமல் சுட்டது. அதனால் அவன் வெளியில் நின்றுகொண்டு, ஸீதையை வந்து பிக்ஷை இடும்படிக் கேட்டான்.

வயதான அந்தனர் என்பதால், ஸீதை தன்னிடம் இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு பிக்ஷையிட வந்தாள்.
அவள் கோட்டுக்குள் நின்று கொண்டு,

“அந்தனரே… பிக்ஷை ஏற்க வாருங்கள்….”

என அழைத்தாள். ஆனால் ராவணனோ,

“நான் மிகவும் களைத்துள்ளதால் எழ முடியவில்லை அம்மா. எனது இந்த பாத்திரத்தில் நீயே வந்து பிக்ஷையை இட்டுவிடு”

என்று வேண்டினான். அவனது ஸூக்ஷ்மம் புரியாத ஸீதை,
Read 47 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱ராமரின் பயணம்🌱

அயோத்தி திரும்பிய பரதன், அண்ணனுக்கு இணையாக அவரது பாதரக்ஷைகளை சிம்ஹாஸனத்தில் இருத்தி, தான் ஒரு சிறு குடிலில் தங்கி, மரவுரி தரித்து, காய், கனிகளை உண்டு, தரையில் படுத்து,
காவி வஸ்த்ரம் மட்டும் உடுத்தி, ஸந்யாஸியாகவே வாழ்ந்தான்.

சித்ரகூடத்தில் ராமர் இருப்பதை அறிந்த, ராவணனுடைய தமையன் கரன் என்பவன், அவர் மேல் கொண்ட வெறுப்பால், அங்கிருந்த முனிவர்களை யக்ஞம் செய்ய விடாது தொந்திரவு செய்து வந்தான். இதனால் கவலை அடைந்த அவர்கள், ராமரிடம் இது பற்றிக் கூறி,
“ராமா! நீயும் இவ்விடம் விட்டு அகன்று போவது நல்லது. நாங்கள் அச்வ மஹரிஷி ஆஸ்ரமத்திற்குப் போகப் போகிறோம். நீயும் பாதுகாப்பான் ஓரிடம் தேடிச் செல்….”

என்றனர். முனிவர்களின் வார்த்தை ஒருபுறம் இருக்க, அங்கே பரதனைச் சந்தித்ததால், குடும்ப எண்ணம் அதிகமாவது உணர்ந்த ராமரும்,
Read 39 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱மிதிலையில் ராமன் 🌱

பின்னர், விஸ்வாமித்ரருடன் மிதிலை ராஜ்யம் சென்று, மிதிலை அரசன் ஜனகன், ஸீதையின் ஸ்வயம்வரத்திற்கு சவாலாக வைத்திருந்த சிவதனுஸு தனை, நாண் ஏற்றுகையிலேயே வில்லோடு முறித்தார்.
அவரது பராக்ரமத்தில் மனமகிழ்ந்த ஜனகர், தனது மந்திரிமார்களை தஸரதனிடம் நடந்தது கூறி, சம்மந்தத்திற்குச் சம்மதம் கேட்டுத் தூது அனுப்பினார்.

தஸரதனும் ராமன் பராக்ரமத்தால் மனம் மகிழ்ந்து ஒப்புதல் அளித்தான். ஒரு நல்ல நாள் குறித்து, குடும்பம், பரிவாரங்கள், மரியாதைகளோடு மிதிலை வந்தான்.
அங்கே ஜனகர் - ஸுநைனாவின் மகள் ஸீதையை ராமர் கரம் பற்றினார்.

கதை வால்மீகியின் வழி இருந்தாலும், தமிழில் கம்பன் சில இடங்களின் மிக அழகாக, நம் உள்ளமே கொள்ளை போகும்படி படைக்கிறான்.

Rama breaking Shiva's bow in the Hazare Rama Temple in Hampi. Image
Read 41 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

3 : 4 : 3 : 2

🙏வாஸகர்களுக்கு ஒரு வேண்டுகோள்🙏

ராமர் அவதாரம் ஒரு இதிஹாஸம். இதைப் பற்றிப் பழைய புத்தகங்கள், வால்மீகி ராமாயணம் அறிந்தோர் ஆகியோர் கருத்துக்களோடு, எனது எண்ணங்கள் பெரும்பாலும் ஒத்துப்போயிருப்பது
திரு. சோ. ராமஸ்வாமி அவர்களின் எண்ணங்களோடு என்பதால், அவரது வால்மீகி ராமாயணப் புத்தகத்தையும் சான்றாதாரத்திற்காக எடுத்துக் கொண்டேன்.

இதில் உள்ள வரலாற்று நிகழ்வுகள் தவிர, சில இடங்களில் அவை வரலாற்றில் எதற்காக கூறப்பட்டுள்ளது என்பதற்கான எனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
எனவே, எனது கருத்துக்களை வரலாற்றுக் கருத்துக்கள் எனக்கொள்ளாது, அவர்களின் வாழ்வியலை விளக்கும் ஒரு புரிதலுக்கான கருத்து எனப் பார்க்க வேண்டுகின்றேன்…🙏

"ஹே ராமா! உனது ”ராம” எனும் இரண்டெழுத்தை முப்போதும் ஜபித்தாலே அது
Read 48 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

ஒரு அதர்மம் நடந்தது என்று கூறினால், அது அதர்மமா இல்லையா என்பது அந்த நிகழ்வின் அடிப்படையில் தான் பார்க்கப்படும். இரு புறத்தின் நிகழ்வுகளும் கேட்டறியப்பட்டு, இதில் முதலில் அதர்மச் செயல் நடந்தது எங்கே என்பது கண்டறியப்படும்.
பின்னர் தான், அது மன்னிக்கக் கூடியதா, கண்டிக்கக் கூடியதா, சிறு தண்டனைக்கானதா அல்லது பெரும் தண்டனைக்கு உரியாதா என முடிவெடுக்கப்படும்.

மேற்கூறப்பட்ட அதே பெண்ணின் வழக்கு, தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்பட்டால், அந்த ஆண்கள் குற்றமிழைத்தனர் என ஊர்ஜிதமானவுடன்,
பொதுவெளியில் கழுமரத்தில் ஏற்றி விடுவார்கள். கழுமரம் என்பது, உயரமாகவும், வழவழவெனவும், கீழே அகலமாகவும், மேலே போகப் போகக் குறுகிக் கூர்மையாகவும் முடியும்.

தண்டனைக்குரிய குற்றவாளிகளை இருபுறமும், கைகள் மற்றும் கால்களில் தனித்தனிக் கயிற்றைக் கட்டி,
Read 32 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4 : 3🌿

🌱பாரதவாசிகளின் வாழ்க்கை – இரண்டாம் நிலை🌱

இவ்வாறான வாழ்க்கை முறை அமைக்கப்பட்டு, அதுவும் வளர்ந்து நாகரிகம் பெற ஆரம்பிக்கின்றது. இதில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்… அதான் ப்ராமணர்களுக்கு எல்லாம் தெரியுமே;
ஆரம்பம் முதலேயே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கற்றுக் கொடுத்திருக்கலாமே... என்று. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீகத் தேடலில் இறங்கி, இறையைக் கண்டவர்கள் எல்லாம் அறிவர்.

ஆனால், நம் போன்ற சாதாரன மக்களுக்கு அவை புரியுமா என்பதை எண்ண வேண்டும்.
மேலும், ஒரு மனிதன் தன்னை மாற்றிக் கொள்வதற்கும், ஒரு சமுதாயமே தன்னை மாற்றி அமைத்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

சமுதாயம் என்னும் மக்கள் கூட்டம் மொத்தமாக மாற, காலங்கள் அதிகம் ஆகும். அதுவும் மனிதன், தான் என்பதற்கான வளர்ச்சியில் வர ஆரம்பிக்கும் நேரம்
Read 49 tweets
🌺Bharatha Varsham and Sanadhan Dharmam🌺

#BharathVruksh

🌱வைஷ்யர்களுக்கான படிப்பும் வாழ்வும் (வைஷ்ய தர்மம்)🌱

வைஷ்யர்கள் வாழ்க்கை முறை சற்று அழகானது. சிறு வயதில் எல்லோருடனும் பால பாடம். அதிலும் இவர்களுக்கு நித்ய கர்மா என்பது, காலை மற்றும் மாலை இறைவனை வணங்குதல்.
பின்னர் காலையில் சிறிதே ஆகாரம். ஏனெனில் இவர்கள் செயல்முறையை விட, கற்பதற்கு அதிகம் ஆரம்பத்தில் உண்டு. அதனால், கற்கையில் ஆசுவாசம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இவர்கள் பொதுவாக முக்கியமாகக் கற்க வேண்டியது, வேளாண்மை மற்றும் அதன் நுணுக்கங்கள், வர்த்தகம், பொருளாதாரம், நிலவியல், வானிலை,
ஜோதிடம், பூகோள வரைமுறைகள், பிற தேசத்தவர்களது ராஜ்ய சட்டங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தேசங்களுக்கு இடைப்பட்ட தூரம் மற்றும் அவற்றைக் கடக்க ஆகும் காலம், எந்த இடங்களை எந்த வாகனங்கள் மூலம் கடக்க வேண்டும் என்ற தெளிவு, பொருளாதாரத்தில் அன்றாட நிலை மாற்றம், பிற தேசங்களின்
Read 36 tweets
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱க்ஷத்ரியருக்கான படிப்பும் வாழ்வும் (க்ஷத்ரிய தர்மம்)🌱

க்ஷத்ரியருக்கான வாழ்க்கை முறை என்பது பிறரை விட வேறு விதத்தில் கடினமானது. அரசன் என்பவன் *முதல் க்ஷத்ரியன்* என்று கொண்டாடப்பட்டான்.
ஆரம்ப காலங்களில், குருகுலத்தில் இருந்து வரும் மாணவர்களில் குருவின் மூலம் தகுந்தவனாகக் கூறப்பட்ட மாணவர்களின் திறமையை, முதல் க்ஷத்ரியனாக இருந்த மன்னன் கனிப்பான். அவர்களின் தோள் திறன், உயரம், உடல் வாகு, தேக பலம், புஜ பலம், குரல், தீக்ஷண்யமான பார்வை, அழகு, கம்பீரத் தோற்றம்,
புத்தி கூர்மை, சமயோஜித யுக்தி, பிறரிடம் பழகும் விதம், அவன் தர்மத்தைக் கடைபிடிக்கும் விதம், நாட்டு மக்கள் மேல் கொண்ட அக்கறை, அஸ்த்ரப் ப்ரயோகத் திறன் என எல்லாவற்றையும் கவனிப்பான்.

இதனை யதார்த்த வாழ்க்கையில் இருந்து கொண்டே செய்ய, அவர்களைத் தன்னிடம் அருகே உடனிருத்தி, நடவடிக்கை முதல்
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!