Discover and read the best of Twitter Threads about #SSRThreads

Most recents (24)

#அரிக்கொம்பன் - பகுதி 2

பகுதி 1 க்கு நீங்கள் கொடுத்த வரவேற்ப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது

யானையை எல்லாருக்கும் பிடிக்கும் என்று தெரியும் இவ்வளவு பிடிக்கும் என ஆச்சரியப்பட்டேன்.

முதலில் உங்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

#யானைக்காதலன்_SSR
#SSRThreads

1/25
காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கட்டிடங்களை எழுப்பி யானைகளின் இடத்தை அபகரித்துக் கொண்ட ஆறறிவு மனிதர்களால் வந்த வினை இது,

முதல் பகுதியில் கொம்பன்கள் எப்படி உருவாகிறது உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம்,

இனி திரேட்டின் ஹீரோவான #அரிக்கொம்பன் கதைக்கு வருவோம்,

2/25
மூணாரை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தவன் இந்த #அரிக்கொம்பன் 🐘

அரிக்கொம்பன் யானை 1985 ஆம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள சின்னக்கானல் காப்புக்காடுகளில் பிறந்தவன்,

கணக்குப்படி பார்த்தால் தற்போது அரிக்கொம்பனுக்கு வயது 38.

3/25
Read 25 tweets
#அரிக்கொம்பன் - பகுதி 1

கேரள - தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கும் ஒரு யானை பற்றிய திரேட்,

முன்பே யானை பற்றிய 2, 3 திரேட் போட்டிருக்கேன், அப்பேல்லாம் இந்த மாதிரி ஒரு உணர்வு வந்ததில்லை,

இந்த திரேட் மிகவும் கடினமான மனநிலையில் தான் எழுதுகிறேன்.

#யானைக்காதலன்_SSR
#SSRThreads

1/25 Image
பொதுவாக காட்டு யானைகள் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை,

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும் சில நேரம் மீறும்,

ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்

2/25
வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி,

'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க,
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்,
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, மூனு நொடிக்கு Current Supply இருக்கும், அடுத்த ஐந்து நொடிக்கு சப்ளை வராது.
3/25
Read 25 tweets
#SSRThreads

நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,

தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,

நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,

1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,

நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,

நான் ஆம் என்றேன்,

அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?

வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.

2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?

கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்

3/28
Read 28 tweets
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-2

இறைவன் பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது.

இவ்வகையான கோவில் அமைப்பை
"சாந்தாரக் கட்டடக் கலை" அமைப்பு எனக் கூறுவர்.

#தஞ்சைபெரியகோவில்
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/22 Image
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்

கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,

“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.

108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,

3/22
Read 22 tweets
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1

பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,

எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/25 Image
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.

திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,

இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,

2/25 Image
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.

சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.

3/25 Image
Read 25 tweets
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,

அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்

(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

1/24 Image
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,

எல்லாருக்கும் சிறு வயசு தான்.

2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,

சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை

சரி இதை பற்றி தனியாக பேசுவோம்,

3/24
Read 24 tweets
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

#மூலிகைஅறிவோம்

1/8
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

2/8
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

3/8
Read 8 tweets
வணக்கம்🙏
சிவசொந்தங்களே.!

சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்

#SSRthreads
#நோக்கம்சிவமயம்
1/16 Image
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?

எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?

அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.

2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?

அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.

எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,

3/16
Read 16 tweets
தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?

தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?

1/20
#SSRThreads
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.

ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,

காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க

2/20
வயல்வெளிகளும் தண்ணீரின் சுவையும் அப்பப்பா,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்,

தஞ்சாவூரில் ஓங்கி வளர்ந்த உணவு வரலாற்றில் இன்று இடம் பிடித்திருப்பது லஸ்ஸி.

நல்ல ருசியான தயிர்தான் லஸ்ஸிக்கு மிகமுக்கியமான அடிப்படை பொருள். கறந்த பாலை வாங்கி, ஒன்றுக்கு பாதியாக சுண்டக்காய்ச்சி,

3/20
Read 21 tweets
என்னப்பா மகள் பிறந்திருக்காளா ?

ஆமான்னே, அதான் புது Fan வாங்கிட்டு போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும் பிள்ளை தூங்க கஷ்டபடுவா,

என்னப்பா கோவிலுக்கு போறேம்னு பணம் கேட்டியே எதுக்கு ?

மகளுக்கு காது குத்தி மொட்டை போடத்தான்னே,

கையில காசு இல்ல அதான்,

1/6
#SSRThreads
#FBPost
என்னடா செருப்பு கடைல நிக்கிற ?

மகளை கான்வென்டுல சேர்த்தேன் அதான் புது ஷூ வாங்க வந்தேன்,

என்னடா பத்திரிக்கை ?

மகள் ஆளாயிட்டான்னே,

வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி நீ அவசியம் வந்திருங்கண்ணே.

1/5
என்ன செல்போன் கடை பக்கம் ?

பொண்ணு கூட படிக்கும் பிள்ளைகள் எல்லாம் செல் வச்சிருக்காம், ஆதான் அவளுக்கும் வாங்க வந்தேனே,

என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க ?

மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்கு தூரமாம், வீட்ல போன் பண்ணி ஜூஸ், நாப்கினும் வாங்கிட்டு வர சொன்னா அதான் வந்தேன்.

1/4
Read 7 tweets
கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம்
கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3
Read 10 tweets
தஞ்சை பெரிய கோவில் (Thread)

பெரியகோவிலை கட்ட இராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது.

மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார்.

இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு.

#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
1/1
அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.

1/2
அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரியகோவில்.

வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது.

கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.

1/3
Read 19 tweets
பெண்களும் நிலஉரிமையும் இராஜராஜ சோழனும்:- (Thread)

சொத்துரிமையில் இருந்து பெண்களை விலக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில் சோழர் ஆட்சிக்குப் பின்னர் நேர்ந்த சீரழிவுகளில் ஒன்று என்பது ஆச்சரியம் தரும் உண்மை.

சோழ அரசில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது,

#இராஜேந்திரசோழன்

1/1
அரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

இளவரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

சாமானிய பெண்களும் சொத்து வைத்திருந்தனர்.

தனது சொத்துக்களைப் பாதுகாக்க அடியாட்களை நியமித்த பெண்களும் சோழர்கள் ஆட்சியிலிருந்தனர்.

இது தான் வரலாறு பென்னுரிமை என்பதெல்லாம் சோழர்களால் துவங்கபட்ட ஒன்று.

1/2
தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்க் கல்வெட்டுகளின் முதல் வரி,

‘நாம் கொடுத்தனவும்,
நம் அக்கன் கொடுத்தனவும்,
நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....’
என்று தொடங்குகின்றது.

இதில் அக்கன் என்றால் அக்கா, பெண்டுகள் என்றால் மனைவிகள்,

1/3
Read 15 tweets
மன்னிப்பு:- (Thread)

ரமணா படத்தில் கேப்டன் பேசும் வசனம் மன்னிப்பு தமிழில் பிடிக்காத வாரத்தை என்று,

நேற்று சக்தி நாயனார் குருபூஜை அவரை பற்றி தினமும் இரவு 10.30 மணிக்கு நடக்கும் சைவ சமயம் Spaceல பேசினோம்.

இதை யாராவது கேட்பாங்கனு பார்த்தேன் கேட்கல நல்லதா போச்சு,

1/1
#SSRThreads
அதனால இப்போ இந்த திரேட் மூலமா எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்

செய்த தப்புக்கு தண்டனை தருவதும் மன்னிப்பதும் சைவ சமயத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்,

மன்னித்தல் என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

1/2
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்து உருகி நில்லாப்பிழையும்
நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே"

இது பட்டினத்தார் பாடல் இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம்

1/3
Read 29 tweets
ருத்ராட்சம்:- (Thread)

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.

ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,

ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,

#நோக்கம்சிவமயம் 🙏
#SSRThreads
Read 17 tweets
எண்ணெய் குளியல்:-(திரேட்)

4,5 மாதமாக முதுகுவலி கார்,பைக் ஓட்டுவதால் தான் என்று நினைத்து இரண்டையும் ஓட்டுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன்

இன்று இதை படிக்க நேர்ந்தது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் யாராவது ஒருவர் படித்து பயனடைந்தால் இந்த திரேட்க்கு கிடைத்த வெற்றி
#SSRThreads
ஒரு முறை காஞ்சி மகா பெரியவா தரிசனத்திற்கு முதுகில் தீவிர வலியுடன் ஒரு பக்தர் வந்தார்.

உள்ளே வரும் போதே இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டே வந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுச் சொன்னார்.

பெரியவா.... முதுகு வலி..
அதை விட முதுகோட நடுத்தண்டுல ரொம்ப நாளா பெரும் வலி.

கொஞ்சம் கூட அசைய முடியலை.
ஏன் இருக்கோம்னு பல நேரம் தோண்றது.

என்றவரின் கண்களில் நீர்த்துளிகள் 😢😢

பெரியவா அவரைத் தீர்க்கமாக பார்த்தார். பதில் வரவில்லை,முதுகுவலிக்காரரே மீண்டும் தொடர்கிறார்,
Read 10 tweets
வாழைத்தண்டு:- (திரேட்)

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#மூலிகைஅறிவோம் Image
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Image
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். Image
Read 10 tweets
ஓணம் திருநாள்:- (Thread)

ஏன்டா படுத்திறீங்க...!

இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?

இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.
ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை,

அந்த ஓணம் பண்டிகையின் காரணம் இப்படித்தான் தொடங்குகின்றது,

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது.
அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது.

அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது,

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும்,
Read 40 tweets
சிறுகதை:-

ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

எதிரில் ஒரு தட்டு அதில் சில நாணயங்கள், அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள்.

அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான் இருவரும் நண்பர்கள்.

#SSRThreads

Cont>>
அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான்.

ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான் அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான்.

பாட்டு அரசனை கவர்ந்தது.

நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன் என்ன வேண்டும் கேள் என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.

அரசே, நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை.

அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும்.

இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.

இதென்ன பிரமாதம் நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன் மதியம் உணவுடன் சந்திக்கிறேன்,
Read 18 tweets
இராஜேந்திர சோழன் :- (Thread)

இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இராஜேந்திர சோழன் இல்லையென்றால் அது சாத்தியமேயில்லை,

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள்
இராஜராஜ சோழனும் அவன் மகன்
இராஜேந்திர சோழனும் ஆவார்கள்.

இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே ஆக்கினார்கள்.
பராந்தகனால் முடியவில்லை..
சுந்தரச் சோழனால் முடியவில்லை..
இராஜராஜனாலும் முடியவில்லை..
இராஜேந்திரன் தான் முடித்து வைத்தார்..

கி.பி.910-ம் ஆண்டு,

முதலாம் பராந்தகச்சோழனுக்கும், இராசசிம்ம பாண்டியனுக்கும் வெள்ளூர் என்னும் இடத்தில் கடும்போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்ற பாண்டியன்
Read 23 tweets
இராஜேந்திர சோழன் :- (Thread)

சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.

தோல்வி என்றால் என்ன?

என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.

இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.

தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
Read 24 tweets
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்:- (Thread)

இது 1000 வருட பாரம்பரியம் கொண்ட சிவதலம்.

தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான் இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது.

#நோக்கம்சிவமயம்
#இராஜேந்திரசோழன்
#SSRThreads

Continue>>
லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.

இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.

இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
Read 21 tweets
இராவணனிடம் லட்சுமணன் கேட்ட அறிவுரை :-

இலங்கையை ஆண்ட மாமன்னர் இராவணன் போரின் இறுதியில் ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய் உயிர் பிரியாமல் இருந்தது

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

#SSRThreads
1/n
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் நீ பெற்று வா என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று இராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை.

2/n
சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவிக்க.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்க,

3/n
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!