Discover and read the best of Twitter Threads about #freeEbooks

Most recents (4)

#freeEbooks
இன்றைய புத்தகம்

லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை. இக் கட்டுரைகள் மதம், அரசாங்கம், பொருளாதாரம், சமூக அமைப்பு.
ஒழுக்கம் முதலிய பல விஷயங்களையும் பற்றியவை. இவைகளில் ரஷ்ய மேதையான டால்ஸ்டாயின் ஆணித்தாரமான அபிப்பிராயங்களைக் காணலாம். ஆனால், கதைகளைப் படிப்பதுபோல் இவைகளை இலேசாகப் படித்துத் தள்ளிவிட முடியாது. இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ‘வாழ்க்கை’, இது மிகவும் விரிவானது. உலகம், உயிர், உடல், வாழ்வு, மரணம், இன்பம், துன்பம் முதலிய விஷயங்களைப் பற்றி இந்நூலில் விரிவாக ஆராய்ச்சிசெய்யப் பெற்றிருக்கிறது.

டால்ஸ்டாயின் 81-வருட வாழ்க்கை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.
Read 11 tweets
#freeEbooks

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது.
Read 5 tweets
#freeEbooks
இன்றைய புத்தகம்

கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய பல் துறைகளிலும் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாசகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆசிரியர் திருரகுநாதன்.

அவர் எழுதிய 'பஞ்சும் பசியும்' என்ற இந்நாவல் இலக்கியச் சாதனை வரலாற்றில் ஒரு மைல்கல்,
தமிழ் நாவல் இலக்கியப் பாதையில் ஒரு திருப்புமுனை; தமிழில் முற்போக்கு எதார்த்தவாதநாவல் இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி

மேலும், அயல்நாட்டு மொழியொன்றில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்ட முதல் தற்காலத் தமிழ் நாவல் என்ற சிறப்பையும் பெற்றது.
செக்கோஸ்லாவக்கியா அகடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்.

இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற் பதிப்பை 1957ல் வெளியிட்டது;
Read 4 tweets
#freeEbooks
இன்றைய புத்தகம்

இந்த வாழ்க்கையில் இருப்பதிலேயே ஆக விருப்பமானதென்றால் சினிமா பார்ப்பது மட்டுந்தான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே தினமும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவன் நான். ஒரு சிறுநகர இளைஞனுக்கு சினிமா கொடுக்கும் கனவுகள் அசாதாரணமானவை.
அந்தக் கனவுகள் தான் சினிமாவைத் தேடி இத்தனை தூரம் ஓடிவர வைத்துள்ளது. சினிமாவை ஒரு பார்வையாளனாக இருந்து அணுகுவதற்கும் எழுத்தாளனாய் அணுகுவதற்குமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு வயதில் எதையெல்லாம் ரசிகனாய் ரசித்துக் கொண்டாடினேனோ அதையெல்லாம் மறுதலிக்க வேண்டிய யதார்த்தம் உரைத்தது.
வெகுஜன ரசனையின் வாயிலாகத்தான் தமிழ் சமூகம் பெரும்பாலான விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புக்கிறது. தமிழ் சமூகத்திலிருந்து தமிழ் சினிமாவை ஒருபோதும் நம்மால் பிரித்தெடுக்க முடியாது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!