Discover and read the best of Twitter Threads about #hbdperiyar143

Most recents (4)

"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."

இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!

"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" Image
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"

"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"

"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"

"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
Read 10 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar
பெரியார் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம் எந்த அரசு பதவியிலும் இல்லாதவருக்கு அரசு மரியாதை எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த கலைஞர் , ''மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதே என்றார். அதற்கு பதில் அளித்த சபாநாயகம் காந்தி ''Father of the Nation'' என்று கூறினார்.
Read 6 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

தமிழ் நினைத்து இதயத்தைத் தமிழால் நனைத்து

இமை கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம் தமிழர்

உமிழ்நீரை வாயில் தேக்கி
ஊத்தைப் பல் துலக்கிவிட்டு

மீண்டும் உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல்போல்
அமிழ்தான இனப்பண்பு, கலை மான்பு, இலக்கியங்கள் மாய்ப்பதற்கு

தமிழர்களே ஒப்புவிட்டார்

கெட்ட உமிழ்நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்

அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திடவேண்டும்

அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத்தொழிலாளி வேண்டும்

உடல் தூய்மை ஔடதத்தால் அமையும்

உளத்தூய்மை வாய்மையாலே ஆகும்
அந்த வாய்மைக்கு வழிவைத்து

வஞ்சகக்கோட்டைக்கு வெடிவைத்து

அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார்

நம் அண்ணாவின் தலைவர் பெரியார்

அந்த பெரியாரை

‘பயிர் போன்றார் உழவருக்கு

பால்போன்றார் குழந்தைகட்கு

பசும்பால் கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்கு
Read 10 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

#இழை

வள்ளுவருக்கு வைதிகச் சாயம் பூசும் வக்கிரம்!

எதையும் நன்கு ஆராய்ந்து கொண்டு அதைப் புரிந்து கொண்டால் ஏன் புதிய சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்ற அந்த ரகசியம் புரிந்து விடும். Image
குறளை இது வரையில் சமஸ்கிருத உலகம் ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்படி ஏற்றுக் கொண்டால் குறளை
குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க முன் வந்திருப்பார்கள்.குறள் சமஸ்கிருதமயமாக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் விரும்பவும் இல்லை 20 ஆம் நூற்றாண்டு வரையில்.
இன்னும் சொல்லப் போனால் நீதிசாரம் என்பதின் மொழியாக்கம் தான் குறள் என்று சொல்கின்ற சமஸ்கிருத ஆர்வலர்களும் உண்டு.இந்து தர்மத்தைத் தான் குறள் கூறுகிறது என்று சொல்லும் புதிய குறளாலர்களும் உண்டு. இந்த சூழலில் இந்த புதிய ஆர்வம் குறித்த விவாதம் அவசியம்.
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!