Discover and read the best of Twitter Threads about #makkalneedhimaiam

Most recents (7)

தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் 'சென்னை தினம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.
நகரின் முக்கிய நீர்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அதை இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்.
அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள்தான் நிரம்பியுள்ளன. நீர்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீர்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய்களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல்,
Read 4 tweets
"குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது" என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.(1/4)
மேலும், "அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?" என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குற்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.(2/4)
இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது. சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும்.(3/4)
Read 4 tweets
2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. Image
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து,
அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும்.
Read 4 tweets
புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் Image
குலைப்பதாக உள்ளது. தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்குப் பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்குக் கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே
இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர்,
Read 6 tweets
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால்,மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது Image
பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது( தமிழகத்தின் மரபுசார் எரிசக்தி ஆதாரத்தின் 16652 மெகாவாட் மின் நிறுவுதிறனில் 4335மெகாவாட் தனியார் மின் உற்பத்தியிலிருந்தும், 6972மெகாவாட் மத்திய அரசின் மின் நிலையங்களின் பங்காகவும் பெறப்படுகிறது)
வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை,தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்தத் தொகையினை
Read 4 tweets
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 🔦

திரு ஆர். ரங்கராஜன் Ex IAS

சென்னை தெற்கு பாராளுமன்ற தொகுதி

#MNMCandidates #batterytorch #MakkalNeedhiMaiam #டார்ச்லைட்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 🔦

திரு. A G மௌர்யா., IPS, RETD. IG

சென்னை வடக்கு பாராளுமன்ற தொகுதி.

#MNMCandidates #batterytorch #MakkalNeedhiMaiam #டார்ச்லைட்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 🔦

திருமதி கமீலா நாசர்

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி

#MNMCandidates #batterytorch #MakkalNeedhiMaiam #டார்ச்லைட்
Read 38 tweets
Read 934 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!