Discover and read the best of Twitter Threads about #standwitharputhamammal

Most recents (6)

காவல்துறை சித்திரவதைகள் - 6

"சி.பி.ஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாக கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னைக்
கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் ஒரு அதிகாரி, திடீரென்று என் இடது பக்க முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைத்துச் சொன்னார். 'ஏண்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? 'என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகிலௌ அமர்ந்திருந்த ஆய்வாளர்
மாதவன் சிரித்தபடியே 'இவன் சிலோன்காரன் இல்லை. தமிழ்நாட்டுக்காரன்தான் 'என்றார்.

- பேரறிவாளன்

#releaseperarivalan
#StandWithArputhamAmmal
#JusticeForJayarajandBennicks
Read 3 tweets
காவல்துறை சித்திரவதைகள் - 3

"ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் என்னை முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டிவாறு நிற்கச் சொல்வார்கள். அவ்வாறு நின்றுகொண்டே இருக்க வேண்டும். அப்போது என் பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர் செல்லத்துரை என் கரங்களை நீட்டச் சொல்லி
சிமென்ட் அடைத்த ஒரு பிவிசி பைப்பால் கை முட்டிகளிலேயே அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர், மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவதுண்டு என்றாலும் இவ்விருவரும் அதிக உயரத்தில் நின்றனர் என்றே
கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

- பேரறிவாளன்

#releaseperarivalan
#StandWithArputhamAmmal
#JusticeForJayarajandBennicks
Read 3 tweets
காவல்துறை சித்திரவதைகள் - 1

"நான் கீழ்த் தளத்திற்கு கொண்டு வரப்பட்டேன். அங்கே ஒரு அறையில் எனது சட்டை பேண்ட் கழற்றப்பட்டு ஜட்டியுடன் நிற்க வைக்கப்பட்டேன். அப்போது ஆய்வாளர் சுந்தரராசன் மற்றும் இருவர் எனது வெற்றுடம்பில் உள்ளங்கையால் அடித்தனர். ஒருவர் ஷூ காலால் என் கால் விரல்களை
மிதித்தார். ஆய்வாளர் சுந்தரராசன் என் கால் விரல்களை மிதித்தார். ஆய்வாளர் சுந்தரராசன் திடீரென்று தன் முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டுத் துன்புறுத்தினார் "
Read 3 tweets
#ShockingTruth

11ம்தேதி கைது செய்யப்பட்ட பேரறிவாளனும், 10ம்தேதி கைது செய்யப்பட்ட ராபர்ட் பயசும் 19.06.91 அன்று செங்கை CJM நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

முதலில் 15 நாள் - 03.07.91 வரை - CBI காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
(1/3)

#StandwithArputhamAmmal
பின்னர் CBI கேட்டதால் அப்போதே மீண்டும் 30 நாட்கள் என வேறு ஒரு உத்தரவிட்டார்.

03.07க்கு பிறகு காவலில் வைத்தது சட்டவிரோதம், இரண்டாவது உத்தரவு செல்லாது என அப்போதே வழக்கு போட்டார் அறிவு.

சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

(2/3)
பின்னர் உச்சநீதிமன்றம் அடலாட் பிரசாத் வழக்கில் 25.8.2004ல் அவ்வாறு நீதித்துறைநடுவர் தனது முந்தைய உத்தரவுக்கு மாறாக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது.மேல்முறையீட்டில்தான் தீர்வுபெற முடியுமென தீர்ப்பளித்தது

03.07 முதலான சட்டவிரோத காவலுக்கு இழப்பீடு என்ன? அப்பட்டமான சட்ட மீறல்?
(3/3)
Read 3 tweets
பதின் பருவத்தின் கடைசியில் இருந்த தனது ஒரே மகனை 30 வருடங்களுக்கு முன்பு இது போல ஒரு நாளில்தான் ’விசாரணைக்குதானே’ என்று நம்பி அற்புதம் அம்மாள் அனுப்பி வைத்தார். இப்போது வரை பேரறிவாளன் வீடு திரும்பவில்லை.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழுவர் தம் வாழ்க்கையை பலிகொடுத்து இன்றோடு 30
வருடங்கள்.30 நிமிடங்கள் கூட மின்சாரம் இல்லாமல் வாழ பொறுமை இல்லாத நாம்தான் 30 வருடங்கள் சிறை கம்பிகளின் இருளுக்குள் ஏதோவொரு நம்பிக்கையை பிடித்தபடி, காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள் அப்படியே சாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அவர்களின் நம்பிக்கையின் பின்னாலிருப்பது
உண்மை என்னும் ஒளி மட்டுமே.அதை மட்டுமேஏந்தி தமது இளமை,வாழ்க்கை எல்லாவற்றையும் பலியிட்டு காத்துக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன்.19 வயது பையனாக இரண்டு 9வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்ததுதான் அவர் செய்த குற்றம்,சிறையின் இருள் அவரை விழுங்க பேறிவாளன் அனுமதிக்கவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.
Read 6 tweets
செய்தியாளர்: இராஜிவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா..?

இரகோத்தமன்: ஒரு விஷயம் இருக்கிறது. தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட்டைச் செய்து கொடுத்த நபர் யார் என்கிற விஷயம்தான் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவே இல்லை..!

#StandWithArputhamAmmal
👇 Image
இப்படி யார் செய்தாரென்றே கண்டுபிடிக்க முடியாத நபருக்கு 9 வோல்ட் பேட்டரியை ஒரு பெட்டிக் கடையில் பில் போட்டு வாங்கி கொடுத்ததாக குற்றம்சாட்டி தான் அந்த 19 வயது பாலகனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு எழுதினார்கள்

விடுதலைக்கான தீர்ப்பெழுதப்பட்ட பின்னும் இன்றுவரை அவர்சிறையினில் 👇
தான் இருக்கிறார். அந்த பெல்ட்பாமை யார் செய்திருப்பார்கள் என்கிற விசாரணையும் இன்றுவரை நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

சிறு சந்தேகத்தின் பலனும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும். 👇
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!