Discover and read the best of Twitter Threads about #அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்

Most recents (3)

#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்

தொடர்கிறது...2

சளி பிடிச்சிருக்கா?

*மதியம், கொத்தமல்லி ரசத்தில் கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க*

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?

*ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்து வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க*
*சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கணகணனு பசி எடுத்துச் சாப்பிடும்*
*வாய் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க*

*பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்*

*மூட்டு வலிக்க முடக்கத்தான் அடை*

*மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி*

*குழந்தை கால்வலிக்கு ராகிப்புட்டு*
Read 9 tweets
#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்.

தொடர்கிறது....1

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும்
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

*மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்* எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
*'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’* என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், *'க்ரீன் சட்னின்னா என்ன தெரியுமா?’* எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், *சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை.
Read 13 tweets
#அனுபவத்தை_மறந்து_புதுமை_தேடுகிறோம்

இது நீள்பதிவு. தொடராக வரும்

*ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

*'வானம் வடக்கே கருக்கலா இருக்கு,
மழை வர மாதிரி இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’* என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

*ஆடிப் பட்டம் தேடி விதை* என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை
*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய *தேரன் சித்தர்* எந்த *மைக்ரோபயாலஜி* தேர்வுகளில் தேறியது இல்லை.

*செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும்
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!