Discover and read the best of Twitter Threads about #சொர்க்கவாசல்

Most recents (5)

#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின் Image
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா Image
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம் Image
Read 21 tweets
#சொர்க்கவாசல்

*சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?*

அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி

பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,

தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.

அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
Read 4 tweets
#வைகுண்ட_ஏகாதசி

*#சொர்க்கவாசல்* இல்லாத திவ்ய தேச கோவில்கள் :

108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம
பத வாசல் இருக்கும்.

ஆனால்,  கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில்  சொர்க்கவாசல்
எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்கு காரணம் இருக்கிறது. 
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.

மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால்  தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.
எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும்
என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. 

மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
Read 13 tweets
#சொர்க்கவாசல் 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் #ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் கிடையாது. இதற்கு காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்து மகாலட்சுமியின் அவதாரமான
கோமளவல்லியை மணமுடிப்பதற்காக திருமால், தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து விடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயண வாசலைக்
கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டு இருக்கும். பெருமாள் தேரில் வந்து மணமுடித்ததால் கோவில்
Read 6 tweets
#சொர்க்கவாசல் #வைகுண்ட_ஏகாதசி
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் மஹாவிஷ்ணுவின்
சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால்
எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். எம்பெருமானே,
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!