Discover and read the best of Twitter Threads about #தருமபுரி

Most recents (4)

மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை...!

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும், சிறப்புகளும் அதிகமாக அழிந்துவிடாமல்,

இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும். Image
அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு, சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்துவரும் ஓர் அறிய பண்டிகையாகும்.

இப்பண்டிகை, உழவர் திருநாளை உவகையுடன் தை மாதம் கொண்டாடி முடித்து உடன் நடக்கும் ஓர் பண்டிகை.

தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும்.
அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்.

தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கிவிடுவர்.

இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்.
Read 13 tweets
பண்டைய பெருவழிகளும், வைகைப் பெருவழியும்...!

வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.

முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.

தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Read 28 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets
மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை!

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும் சிறப்புகளும் அதிகமாக அழிந்து விடாமல், இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும்.
அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்து வரும் ஓர் அரிய பண்டிகை. இப்பண்டிகை உழவர் திருநாளை உவகையுடன் தைமாதம் கொண்டாடி முடித்துஉடன் நடக்கும். தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும். அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்!
தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கி விடுவர்!

இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்!
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!