Discover and read the best of Twitter Threads about #தாமோதரன்

Most recents (3)

#தாமோதரன் விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வருவது இந்த அதி அற்புதமான திருநாமம். தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக் கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்பது பொதுவான பொருள். வெண்ணெய் திருடுகிறாயா? உன்னைக்
கட்டிப் போடுகிறோன் பார் என்று யசோதை பால கிருஷ்ணனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடப் பார்த்தாள். முடியவில்லை. அவள் எத்தனை கயிறுகளைச் சேர்த்து ஒட்டுப் போட்டுக் கொண்டே போனாலும் தன் சின்ன வயிற்றைச் சுற்றிக் கட்டுவதற்குப் போதாதபடி மாயாஜாலம் செய்தான். பிறகு அவள் வேர்த்து
விருவிருத்துப் போனதைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தானாகவே கயிற்றிலே கட்டுப்பட்டான், அதனால் ‘தாமோதரன்’ என்று பேர் ஏற்பட்டது. உதர என்றால் வயிறு. தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைத்துக்கும் அவனுடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்
Read 13 tweets
#தசகம்_27
பாற்கடலை கடைதலும், கூர்ம அவதாரமும்
1. துர்வாச முனிவர் ஒரு தேவ பெண்மணியிடம் இருந்து தெய்வீகத் தன்மை வாய்ந்த மாலை ஒன்றைப் பெற்றார். அவர் நேரில் சென்று அதை இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரனோ அதை ஐராவதத்திற்கு அணிவிக்கவே, ஐராவதம் (அவன் யானை) அதை மிதித்துப் பாழ் படுத்தியது Image
அதனால் சினமுற்ற துர்வாசர் இந்திரனைச் சபித்தார். உன்னைத் தவிர மற்ற தேவதைகள் அம்சத்தில் தொன்றியவர்களுக்குப் பொறுமை ஏது?
2. மோட்சத்திற்குக் காரணமானவனே! பின், தேவேந்திரன் அந்தச் சாபத்தினால் முதுமையை அடைந்தான். அதனால் தேவர்கள் அசுரர்களால் கொல்லப்பட்டு ஒளிக் குன்றியவர்கள் ஆனார்கள்.
அப்பொழுது சிவன், முதலிய எல்லா தேவர்களும் பிரம்ம தேவனிடம் சென்று அவரையும் அழைத்துக் கொண்டு உன் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
3. வரதனே! பிரம்மதேவன் முதலியவர்கள் வெகு காலம் உன் பெருமைகளைப் புகழ்ந்து துதித்தார்கள். அப்பொழுது நீ மிகுந்த ஒளியோடு அவர்கள் முன்னே தோன்றினாய். 'தேவர்களே
Read 281 tweets
#தசகம்_25
நரசிம்ம அவதாரம்
1. ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாக இருந்தது. இதுவரை எவராலும் கேட்கப் படாத சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் Image
கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.
2. எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான். அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் நீ தோன்றினாய்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன், சிங்க உருவத்துடன் நீ பெரிதாக வளர்ந்தாய்.
3. சுழலும் உன் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன. வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்று
Read 251 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!