Discover and read the best of Twitter Threads about #திருக்கண்ணமங்கை

Most recents (3)

#பக்தவத்சலபெருமாள்_திருக்கோவில் #திருக்கண்ணமங்கை திருவாரூர்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற 7 லட்சணங்களும் அமைய பெற்றதால், #ஸப்த_புண்_ஷேத்திரம் #ஸப்தாம்ரு_ஷேத்ரம் என்ற பெயர் Image
பெற்ற தலம் இது. பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றின. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயம் அறிந்த Image
பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் Image
Read 13 tweets
#பஞ்சகிருஷ்ண_தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன இவை கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகளும்
அடியவர்கள் திருமாலின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர் என்றும் தல புராணங்கள் கூறுகின்றன.
#திருக்கண்ணங்குடி #திருக்கண்ணபுரம் #திருக்கண்ணமங்கை #கபிஸ்தலம #திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்.

#லோகநாதபபெருமாள்_கோவில் திருக்கண்ணங்குடி
நாகபட்டிணம்- திருவையாறு சாலையில்
நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசஷ்ட முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். அவரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு
Read 30 tweets
#திருச்சிறுபுலியூர் #தலசயனப்பெருமாள் கோயில்,
நாகப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது திருச்சிறுபுலியூர். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் Image
(அருள்மாகடல்)
உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும். Image
பகவான் ஸ்ரீநாராயணனை சயனத்தில் தான் தாங்குவதாக #ஆதிசேஷனும், அவரை எல்லா இடங்களுக்கும் தாமே சுமந்து செல்வதாக #கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இப்பகை விலக எண்ணம் கொண்டு தவம் இருந்தார். அத்தவத்திற்கு இரங்கி Image
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!