Discover and read the best of Twitter Threads about #திருவள்ளுவர்

Most recents (12)

அரசரும், தூதுவரும்...!

ஒற்றரைப் போலவே அரசர்க்கு இன்றியமையாத உதவியாளர் #தூதுவர் எனப்பட்டனர். தூதுவரைப் பற்றியும் #திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்.

நற்குடிப் பிறப்பும், அரச பக்தியும், ஆவன அறியும் அறிவுடமையையும், ஆராய்ந்த சொல்வன்மையும், நீதி நூல் அறிவும் தூதர்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #ஒளவையார் என்ற பெண்பாற்புலவர் அதியமானிடமிருந்து காஞ்சி அரசனான தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்றார்.

தமது பேச்சுத் திறமையால் அதியமானது போர்த்திறனை விளக்கினார். நடக்க இருந்த போரைத் தடுத்தார் என்பன புறநானூற்றுப் பாடல் ஒன்றால் தெரிகின்றன.

சேரன் செங்குட்டுவன்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #பாண்டியன், உரோமப் பேரரசனான #அகஸ்டஸ் என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பினான்.

#பல்லவர் காலத்தில் 'இராசசிம்ம பல்லவன்' ஒரு தூதுவனை சீனத்திற்கு அனுப்பினான். சீனப் பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான். அவனை மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.… twitter.com/i/web/status/1…
Read 4 tweets
1/10
சில நாட்களுக்கு முன் #திருவள்ளுவர் பாறைக்கும் #விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்றோம். திருவள்ளுவரின் 7000 டன் எடை கொண்ட, 133 அடி உயரச் சிலை (மண்டபம் + சிலை) மிக முக்கியமான, அழகான மிகச்சரியான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. எல்லா சிலைகளும் பண்பாடு, அரசியல் நோக்கங்கள் கொண்டவை. ImageImage
2/10
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்ததாக கருதபட்ட பாறையில் RSS ன் ஏக்நாத் ரானடே 1971ல் #கலைஞர் அரசிடம் அனுமதி பெற்று சிலை எழுப்பிய சில வருடங்களிலேயே அங்கு வள்ளுவருக்கு தக்கதொரு சிலை எழுப்பவேண்டியதை கலைஞர் உணர்ந்து 1973ல் அப்பணியைத் தொடங்கியிருக்கிறார். ImageImage
3/10
அப்பாறைக்கு வருகிற ஒவ்வொரு வடநாட்டுப்பயணியும் திருவள்ளுவர் என்கிற சனாதனம் தீண்டாத பெயரை உச்சரிக்கின்றனர். படகில் என் அருகில் இருந்த பதின்பருவப் பெண் போனில் திருவள்ளுவரை விக்கியில் படித்துக்கொண்டு வந்தார். எப்படி அரசுப் பேருந்துகளில் கலைஞரால் எழுதபட்டு திருக்குறள் ImageImage
Read 11 tweets
உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய #திருவள்ளுவர்.
ஒரே ஒரு #ஜீவனுக்காக மட்டும் #நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் #தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.
இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
Read 13 tweets
#மயிலாப்பூர் #திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.
ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், மயிலாப்பூரில் 
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது.
வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
Read 26 tweets
#சனாதன_தர்மம்
சனாதன தர்மம் என்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் தொடர்புடைய நியதிகள் (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு, நாம் பிறவி பயனை அடைய வேண்டும் என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தான் இந்த
வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் #சனாதன_தர்மம் என்கிறோம்.
உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது வகையாக நிர்மாணித்து, அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தனர் நம் முன்னோர்கள். நவதானியங்களை 9 என்ற
அவர்கள், திசைகளை எட்டாக பிரித்தனர்.
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

இசையை ஏழாக கொடுத்தனர்.
ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த அவர்கள் சுவையை ஆறாக பிரித்தனர்.
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

நிலத்தை 5ஆக பிரித்தனர்
Read 18 tweets
#நற்சிந்தனை
#திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
என்று கூறுகிறார்.
காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடனேயே வெளியிட்டால் சில நேரம் காயாக கசக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி
பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது. புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தை சரி செய்யவே நம் ஆன்ம சக்தி செலவழிக்கப் படுகிறது. இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவது தான். எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல. ஒரு எண்ணத்துக்கும்
அடுத்த எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது. மனத்தில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும். ஆனால் புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது. புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு
Read 6 tweets
#சிவராத்திரிஸ்பெஷல் #சிவானந்தலஹரி ஸ்லோகம்26ல்
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
பரமேஸ்வரனின்
திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
Read 13 tweets
பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
Read 6 tweets
கடந்த இரண்டு ஆண்டுகள்..

#வைரமுத்து வின் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய் படம்
இந்துக்களை புண்படுத்தியதால்
பிஜேபி போராட்டம்!

நெல்லை #கண்ணன் பேச்சு
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
#சுகிசிவம் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #சிவகுமார் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய்சேதுபதி கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
நடிகை #ஜோதிகா கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#திருவள்ளுவர் க்கு காவி உடை
உடுத்தும் போராட்டம்!

#எம்ஜிஆர் சிலைக்கு
காவி உடை அணிவித்து சர்ச்சை!

பெரியான் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

பெரியான் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

ஆனால்??
Read 5 tweets
வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (1)
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றார் பாரதி. வள்ளுவம் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்பதற்கு அப்பால் உலகப் பொது மறை எனும் நிலையை எட்டிய ஒரு அறநூல் என்பதை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொன்னார் பாரதி
அவரை இன்று பூணூலிஸ்டுகள் இந்துத்துவச் சிழுக்குள் அடக்க முயல்வது அபத்தம். ஆனால் அதை அவர்கள் இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே செய்து வருகின்றனர். முதலில் அதைச் செய்தவர் பரிமேலழகர் எனலாம். பார்ப்பனரான அவர் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் எனும் பெயரில் வேண்டுமென்றே இடையிடையே பார்ப்பனக்
கருத்துக்களைப் புகுத்தினார். நவீன சிந்தனையாளர்கள் சொல்வதுபோல எந்த உரையுமே இன்னொரு தனி நூல்தான் என்பதற்கு பரிமேலழகரின் உரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சமீப காலத்தில் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசி நிறுத்த முயன்றவர் பா.ஜ.க எம்.பியாக இருந்த தாருண் விஜய். இந்த ஆள் ஆர்.எஸ்.எஸ்சின்
Read 46 tweets
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
தமிழக அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! -மே 17 இயக்கம்

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள #திருவள்ளுவர் சிலை மீது மர்ம கும்பல் கருப்பு மையையும், சாணத்தையும் வீசி அவமதித்து சென்றிருக்கிறது.

#Thiruvalluvar

1/5 Image
தமிழ்நாட்டின் மிகப்பெரும் அடையாளமாக இருக்கக் கூடிய திருவள்ளுவரை அவமதித்திருப்பது தமிழர்களிடையே பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. உலகத்திற்கே மானுடத்தை போதிக்கிற அற நூலாக திருக்குறள் இருக்கிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த செயல் என்பது யாரோ தூண்டுதலின்...

2/5
பெயரால் நடைபெற்ற செயலாகவே இருக்க முடியும்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள பிரிவினர் மதச்சார்பற்ற தமிழரின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடையும், பட்டையும் அணிவித்து எடிட் செய்து ஒரு படத்தை வெளியிட்டு அவமதித்ததற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

3/5
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!