Discover and read the best of Twitter Threads about #தை_அமாவாசை

Most recents (4)

இன்று ஜனவரி 21 #தை_அமாவாசை
அமாவாசை அன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடவும், கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என Image
எதிர்பார்க்கப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், Image
ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். தை அமாவாைசயை ஒட்டி காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும். இன்று நீத்தோர்க்கு திதி கொடுக்க மறக்க வேண்டாம். Image
Read 4 tweets
#தை_அமாவாசை !....

புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள் !

அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன.
காசி, கயா போன்ற திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நமது ஊருக்கு அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும் பித்ரு தோஷத்தை நீங்கும். புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
Read 54 tweets
பகவான் கண்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மார்கழிக்கு அடுத்த மாதமான #தை மாதமும் புண்ணிய மாதம் தான். தை மாத‌ சிறப்புகள் பல! சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' Image
என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌த்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
#தை_கிருத்திகை
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி Image
வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் மிக முக்கியமானவை. அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
Read 18 tweets
*#தை_மாத‌_சிறப்புகள்

*தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.*
நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Read 38 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!