Discover and read the best of Twitter Threads about #நற்றிணை

Most recents (12)

சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 5). #நறவு, #நறா, #நனை

சங்க இலக்கியத்தில் #நறவு எனும் சொல் 47 இடங்களில் வந்துள்ளது.

பெரிய மலைகளில் விளைந்த மூங்கில் குப்பிகளில் நிரப்பி முற்ற வைத்த நறவினைக் குறிஞ்சி மக்கள் உண்டதை,

‘வாங்கமை பழுனிய நறவு உண்டு' என்கிறது #நற்றிணை (276:9).
தேறலையும், புளித்த கள்ளையும் உண்டதால் மக்கள் மயங்கி இன்புற்றிருந்தனர் என்பதை,

‘தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல்' என்கிறது #கலித்தொகை (147: 2).
#ஆநிரை கவர்ந்து வரும் களைப்புற்ற தலைவனின் களைப்பினைப் போக்க;

'நறவைப் பிழியுங்கள்,
கடா வெட்டுங்கள், பந்தர்க்கீழ் இளமணல் பரப்புங்கள்'

- என்று முழக்கமிடும் சூழலை #புறநானூறு பின்வருமாறு பதிவிடுகிறது.
Read 6 tweets
மக்கள் வாழ்வியலில் #புடவை...!

பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.

விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.

அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.

#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.

'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
Read 31 tweets
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Read 31 tweets
சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!

சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.

#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.

அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9

இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.

அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்... Image
Read 20 tweets
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 25 tweets
உப்பு விளைவித்தல்...!

சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.

▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.

▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.

சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 8 tweets
சங்க கால வேட்டைத் தொழிலில் கூட்டுழைப்பு!

#வேடர் சமூகத்தில் ஆண், பெண், சிறார் ஆகியோரிடையே #தொழிற்பகுப்பு காணப்படுவது இயல்பு.

எனினும் அவர்களிடம் கூட்டுழைப்பும், அதனையடுத்து உழைப்பால் ஈட்டியவற்றைக் கூட்டாகப் பாதீடு செய்துகொள்வதும் சிறப்பான பண்புகளாக விளங்கின.
#வேடுவர்கள் கூட்டு வேட்டையில் ஈடுபடுபவர்கள்.

#கெண்டி எறிந்தும், #அம்பு எய்தியும், #கண்ணி வைத்தும் விலங்குகளை வேட்டையாடினர். #வலை விரித்துப் பறவையினங்களைப் பிடித்தனர்.

புறநானூற்றுப் பாடல் (322) மூலம் வேட்டுவச் சிறுவர்கள்...
... வரகின் அரிகாலில் மேயவரும் எலிகளைப் பிடிப்பதற்கு, ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர் என அறியலாம்.

சிறுவர்கள் ஒன்று கூடி, எலி பிடித்த கூட்டுழைப்பை, 'புன் தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்' என்கிறது #புறநானூறு (322: 3-4).
Read 28 tweets
சங்ககால கைவினைக் கலன்கள்!

குயவர்கள் 'கலம்செய் கோவே' என அழைக்கப்பெற்றனர்.
கலத்தினை வனைவதற்குத் #திகிரி (மலைபடு.474) பயன்படுத்தினர்.

#குயவர்கள் சமைத்த கலன்களைச் சூளையில் சுட்டு உருவாக்கினார்கள். Image
▪︎ #தாழி:

இறந்தோரை அடக்கம் செய்யும் 'தாழி'யினையும் இக்குயவர்களே செய்து கொடுத்தனர்.

'முதுமக்கள் தாழி' எனப்பட்ட இக்கலம் பெரிய வாயகன்ற பானை போன்று இருந்தது.

உயிர் நீந்த மன்னர்களையும், நிலக்கிழார்களையும், தலைவனையும் இத்தாழிக்குள் வைத்துப் புதைந்தனர். Image
இதனை #பதிற்றுப்பத்து பின்வருமாறு உணர்த்துகிறது.

சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை நில மக்கள் #ஈசல் பிடித்து உண்டனர்.

அவ்வீயலைப் பிடிக்கத் #தாழி பயன்பட்டது என்பதை

‘நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி' எனும் #நற்றிணை (59: 2) அடி குறிப்பிடுகிறது. Image
Read 23 tweets
சங்க கால உண்கலன்கள்...!

சங்க காலத்தில் உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும், சேமித்து வைக்கவும், சமைப்பதற்கும், உண்பதற்கும் பல்வேறு புழங்கு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலை, ஓலை, மூங்கில், மண் பாத்திரங்கள் முதலான சாதாரண கலன்களும்... Image
இரும்பு, வெள்ளி, செம்பு, பொன் பாத்திரங்கள் முதலான விலையுயர்ந்த கலன்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

புழங்கு பொருள்கள் பண்பாட்டின் காலக் கண்ணாடியாகவும், அதன் வளர்ச்சியைக் காட்டும் அளவு கோலாகவும் உள்ளன.
அறிதிறன், தொழில்நுட்பத் திறன், உலகப் பார்வை முதலானவற்றைப் பூடகமாகக் காட்டும் தன்மையையும் இவை கொண்டுள்ளன.

தொழிற் பாகுபாடுகள், வேலைப் பிரிவினை, சமூகப் படிநிலை, வாழ்வியல் வேறுபாடுகள் முதலானவற்றையும் புழங்கு பொருள்கள் காட்டுகின்றன.
Read 16 tweets
சங்க கால இனக்குழு சமூகத்தின் வேட்டை வாழ்க்கை முறை...!

இனக்குழு வாழ்வில் குழு வேட்டையே முதன்மையானது. மிகச்சில தருணங்களில் தனிநபர்களும் வேட்டைக்குச் சென்றார்கள் (நற். 59).

சங்க காலத்தில் உடும்பு, நுணல், ஈயல், முயல் போன்ற சிறு விலங்குகளைத் தனிநபர்கள் வேட்டையாடினார்கள்.
இதற்கு மாறாக #கானவர், #வேட்டுவர், #குறவர் முதலானோர் காடுகளிலும் மலைகளிலும் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடினார்கள்.

இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடி உணவு சேகரித்தல் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்ததால், விலங்கினப் புரதமும் தாவரவினப் புரதமும் ஏறக்குறைய சம அளவு இருந்தன.
இது உலகளாவிய நிலையில் இனவரைவியல் கண்டுள்ள உண்மையாகும்.

சங்க கால இனக்குழுச் சமூகத்தினரும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

சங்க கால #வேட்டுவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே #விற்பயிற்சி மேற்கொண்டனர்.

ஊகம்புல்லின் நுண்ணிய குச்சியில் புழையையுடைய வெள்ளிய முள்ளைச் செருகி, அம்புகளாக்கி...
Read 20 tweets
சங்ககாலத்தில் பயிர்த்தொழிற் கருவிகள்!

நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.

▪︎ கொழு:

உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.

புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
Read 13 tweets
சங்ககாலத்தில் கண்ணாடி தொழில்நுட்பம்...!

#கண்ணாடி இரு வகையது. ஒன்று ஒளி ஊடுருவும் தன்மையது, மற்றொன்றோ ஒளியை எதிரொளிப்பது. பின்னதை முகம் பார்க்கும் கண்ணாடி என்பர்.

இவ்விருவகைக் கண்ணாடிகளுமே சங்ககால மாந்தர் அறிந்தவை, பயன்படுத்தியவை என்பனவற்றைச் சங்கப் பாடல்கள்வழி அறிகிறோம்.
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.

ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.

தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!