Discover and read the best of Twitter Threads about #பொன்

Most recents (3)

#கர்மா
#தானம்

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
Read 34 tweets
#AkshayaTritiya2022 #அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது.
2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
Read 32 tweets
சங்க காலத்தில் #பொற்றொழில்!

உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலம் முதலே அறியப்பட்ட உலோகம் #பொன்.
இவ்வுலோகம் #பொன் என்றும் #பொலம் என்றும் இரு சொற்களால் சங்க இலக்கியங்களில் பயிலப்படுகிறது.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (அகம் 149:9,10)

▪︎ கறி - மிளகு

#யவனர் செய்த அழகு மிகு மரக்கலங்கள் #பொன் கொணர்ந்து இறக்கி, #மிளகு ஏற்றிச் செல்லும்.
'ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன' (அகம்- 364:4)

(சிவந்த பொன்னினால் ஆகிய அணிகலன்களைத் தொங்க விட்டாற் போல)

மேற்கண்ட அடிகளில் #பொன் என்னும் சொல் ஆட்சி பெற்றுள்ளது.

பொதுவாக #இரும்பு போன்ற உலோகங்களையும் #பொன் என்ற சொல்லால் குறிப்பிடுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
Read 20 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!