Discover and read the best of Twitter Threads about #மார்கழி_ஸ்பெஷல்

Most recents (5)

Dec 24th 2022
#மார்கழி_ஸ்பெஷல்
மார்கழியில் ஏன் சுபகாரியம் செய்யக்கூடாது?
மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை. பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகலாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும். அந்த வகையில் அதிகாலை பிரம்ம Image
முகூர்த்தம் மார்கழி மாதம். தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்த நேரத்தில் மனிதர்கள் இறைவனை வழிபட வேண்டியது அவசியம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கிருஷ்ணபகவான். மார்கழி தனுர் மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் குருவின் வீட்டில் குடியேறுகிறார்.
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை துயில்
எழுந்து மனமுருகி இறைவனை பிரார்த்திக்க, மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது புராணங்கள் கூற்று. மார்கழி மாதம் முழுவதும் பற்றற்ற வாழ்வை வாழ இறைவனின் திருவடியையே நினைத்து இருக்க வேண்டும். அதனாலாயே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்
Read 7 tweets
Dec 20th 2022
#மார்கழி_ஸ்பெஷல் #திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்
1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .
5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு -
திருக் கடிகை.

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.

13. புள்ளின்வாய் - பள்ளிக்
Read 8 tweets
Dec 19th 2022
#மார்கழி_ஸ்பெஷல் #ஶ்ரீஆண்டாள்_நாச்சியார் #திருப்பாவை

1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்').
2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்').
3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.

1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
Read 8 tweets
Dec 16th 2022
#மார்கழி_ஸ்பெஷல் 16.12.2022 மார்கழி மாத பிறப்பு. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை நேரமானதால் மாதம் முழுவதும் இறை வழி பாட்டிற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வணங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில்
மேற்கொள்ளப்படுகிறது. அதிகாலை வழிபாட்டைப் பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
Read 18 tweets
Dec 16th 2022
#மார்கழி_ஸ்பெஷல்
#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி

ஆண்டாள் குரு பரம்பரைப்படி ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் வந்துதித்த பெண் குழந்தை கோதா
பெரியாழ்வார் இக்குழந்தையை எடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை, வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என
எண்ணி தினமும் கொடுத்து அனுப்புவாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு இது தகாத காரியம் என்று கோபித்துக் கொண்டார். உடனே புது மாலை தொடுத்து கோதை சூடாத மாலையை எடுத்துக் கொண்டு சென்ற போது பெருமாள் அந்தப் பெண் சூடிய மாலை தான் எனக்கு உகப்பானது அதை எடுத்து வாரும் என்றார்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!