Discover and read the best of Twitter Threads about #ராமநாம_மகிமை

Most recents (6)

#ராமநாம_மகிமை
ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி சார்பில் பேட்டி கண்டவர்
ஷங்கர் திருவேதி
#ராமர்_பாதம்_பட்ட_குடிசை
அம்மா! அம்மா!
குழந்தைகளின் அலறல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்னு கத்தறீங்க உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா Image
பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு. உங்களை ஒன்றும் செய்யாது. வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பி துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம். நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும். காலையில் கண் விழிக்கும்
Read 23 tweets
#ராமநாம_மகிமை
காசியில் வாழ்ந்து வந்த பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி , குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லா விட்டால் என்ன பலன்’ என்று வருந்தினார். ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் Image
அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்’என்றார். முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
குமரனை துாக்கிப் போய், அவர் தலையிலும்
கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர். அந்த நேரத்தில், #கபீர்தாசரின் சீடரான #பத்மநாபர், அங்கு வந்து, விவரம் அறிந்தார். என்ன அக்கிரமம் இது! புல்- பூண்டு என பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை Image
Read 8 tweets
#ஆன்மீகத்_தகவல் #ராமநாம_மகிமை

ஸ்ரீராம_ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற ஸ்லோகத்தை மூன்று தடவை
சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதாக சொன்ன பலன் கிடைக்கும்.

வில்வ மரத்தடியில் சொன்னால்1000 தடவை சஹஸ்ரநாமம் சொன்ன பலன்.

பசு நிறைந்து இருக்கும் Image
இடத்தில் சொன்னால் பலகோடி முறை சொன்ன பலன்.

ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது.

ராம நாமம் சொல்வது மகா விஷ்ணுவின் மற்ற 1000 நாமங்களை சொல்வதற்குச் சமம். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும்
சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.

ஆலயங்களில், ஸ்ரீராம நாமம் சொன்னால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருள் வாக்கு.

ஸ்ரீராம ஜெய ராம
ஜெய ஜெய ராம
Read 4 tweets
#ராமநாம_மகிமை
1. நமக்கு நன்மை வர வேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயச்சித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் Image
தண்டனையை ஏற்பதும், பிராயச்சித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கில் இருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்தில் Image
இருந்து விலகி செல்கிறோம்.

4. ‘ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.'
Read 24 tweets
#ராமநாம_மகிமை
இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாமம், ராம நாமம் ஆகும். ஸ்ரீமன் நாராயணன் இந்த பூவுலகில் ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழிகாட்டினான். ராம நாமமே தலைசிறந்த நாமம் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
#முக்திக்கு_வழிகாட்டி
ராம
நாமம் ஒன்றுக்கே #தாரகமந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால் இது தாரக மந்திரம் என்று அழைக்கப் படுகிறது. அனைத்து நாமங்களையும்
உள்ளடக்கியது. ராம நாமத்தை ஜபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே)
Read 12 tweets
#ராமநாம_மகிமை
வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் செய்தபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்றது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, அவனை அழைத்து ராம நாமத்தை உபதேசித்த ஒரு ஞானி, இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில்
இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.
அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவது
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!