Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீகிருஷ்ணங்கதைகள்

Most recents (4)

#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் நாரதர் தினமும் லட்சம் தடவையாவது நாராயண நாமத்தை ஜபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்கு தன்னை விட பெரிய நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார். நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன் பதில்
சொல்வீர்களா என்றார்.
"கேள், சொல்கிறேன்" என்றார்.
இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் என சொல்வீர்களா?
"ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்" என்றார் பகவான். நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே
தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு ஹரி நாராயணா என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான், அங்கே காத்திருந்தவர்களிடம், நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்து
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இக்கரையில் நண்பர்கள் சிவாவும் செல்வாவும் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஓடம் ஏதும் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு
ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது. நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் சிவா குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் சிவா. காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.
செல்வா பார்த்தான், நமக்கும் ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று! அப்பொழுது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று செல்வாவும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு
Read 6 tweets
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் காஞ்சிபூர்ணர் (திருக்கச்சி நம்பிகள்-ஸ்ரீஇராமனுஜரின் குரு) வரதராஜப் பெருமாளுடன் சகஜமாக பேசக் கூடியவர் என்பதால் ஊர் மக்கள் அவரை பகவானுக்கு மிகவும் நெருக்கமான பக்தர் என அழைப்பர். மக்கள் அவ்வப்போது அவரிடம் சென்று தாங்கள் எப்போது வைகுண்டம் செல்வோம் என்பதை பெருமாள் Image
கேட்டு சொல்லும்படி வற்புறுத்துவர். அவரும் பெருமாள் சொல்லும் செய்தியை மக்களிடம் தெரிவிப்பார். ஒருநாள் காஞ்சிபூர்ணர் தான் எப்போது வைகுண்டம் அடைவேன் என பெருமாளிடம் வினவினார். அதற்கு வரதராஜப் பெருமாளோ, நீர் எனக்கு பிரியமான பக்தன் என்றபோதிலும், தூய பக்தர்களுக்கு நீங்கள் சேவை செய்யாத Image
காரணத்தினால் இப்பிறவியில் என்னுடைய இடத்தை உங்களால் அடைய முடியாது என்றார். அதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் உடனடியாக திருவரங்கம் சென்று அங்கே திருகோஷ்டியூர் நம்பியின் மாட்டுக் கொட்டகையில் தம்மை பணிவான சேவையில் ஈடுபடுத்தி, வைகுண்ட லோகத்தை அடைவதற்கான முழு தகுதியையும் பெற்றார். இதிலிருந்து
Read 9 tweets
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!