Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்

Most recents (24)

#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் Image
புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில
தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர
Read 12 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளோம்.
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் சுவாசிக்கக் காற்று, பார்க்க வெளிச்சம், பருக நீர் என நம் எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்
பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இதர உயிர்வாழ் இனங்களுக்குக் கடன்பட்டுள்ளோம். பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு கடன்பட்டுள்ளோம்.
விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.
நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
ஐந்தாவதாக குடும்ப
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #சாபமும்_வரமே சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார். அவற்றின் பின்னால் ஓடினார
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன. பிறகு முனிவர் அதை தேடி பிடித்து,
மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன் என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.
பிறகு சிறிது யோசித்து விட்டு, ஏ குரங்குகளே இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார். அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின.
Read 6 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியுகத்தில் முக்திக்கு ஒரே வழி பகவானின் ரூப லாவண்யங்களின் மகிமை கேட்டால் போதும் ஜென்மாந்திர பாவங்கள் தீயினில் தூசாகும். அதேபோல பகவானின் நாம சங்கீர்த்தனம் பஜனை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு நாம் உட்கார்ந்து அதை பக்தியோடு கேட்டாலே போதும். பாட்டு பாடத் தெரியவில்ல
என்ற கவலை வேண்டாம். பஜனை பண்ணத் தெரியவில்லை என்கிற வருத்தம் வேண்டாம். சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழை இல்லாமல் உச்சரிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் வேண்டாம். பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை பீஷ்மாச்சாரியார் நமக்கு மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கியுள்ளார். மனதார, பக்தியுடன்
விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை சொன்னாலே போதும் முக்தி அடைந்து விடலாம். முழுவதும் சொல்ல முடியாதவர்கள் #இலகு_பாராயணமாக
ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்பதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ரநாமத்தை முழுவதும் சொன்ன பலன் கிடைத்து விடும்.
Read 4 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன்
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
Read 12 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கொடியில் உணர்த்தியிருந்த புதிய புடவையை ஆசையோடு பார்த்தாள் கமலாபாய். இதுவரை ஒரே ஒருமுறை தான் அதை உடுத்தி இருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். சற்று விலைமதிப்புடையது. #துக்காராமின் மனைவ
நல்ல சேலைகளையும் கட்டுவாள் என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே! துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லா விட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! உத்யோகம் புருஷ லட்சணமாம்? ஆனால் துக்காராம்
எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள் தான் வாங்கிக் கொடுத்தாள்.
Read 22 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குருவாயூர் அருகில் பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு சமையல் வேலை செய்வதற்காக 4 முதியவர்கள் சென்றிருந்தனர். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா? நாளை ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு,
பொறியல் என எல்லாம் செய்யணுமே. வயதான உங்களால் முடியுமா இத்தனை வயதாகியும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் வேலை செய்ய வந்து இருக்கிறீர்களே என்றார் ஆணவத்தோடு! கிருஷ்ண பக்தர்களான அம்முதியவர்களோ, பள்ளிவேட்டை உற்சவத்தின் போது, குருவாயூரப்பன் சன்னிதியில் நின்று, குருவாயூரப்பா உன் அருளை அடைய
முடியாத எங்களை, இக்கர்வம் பிடித்தவர் முன் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்து, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர். மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, நாகோரி
Read 9 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும். குயவன் மீண்டும் அவற்றை பயன்
படுத்த முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது. ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப் படுத்துவான். அதே
போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும். நன்றாக வேக வைக்கப்பட்ட விதை அல்லது வறுத்த பயறு மீண்டும் முளைக்காது. அதே போலத் தான், ஸ்ரீ கிருஷ்ணன் மீது கொண்ட பக்தித் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும்
Read 4 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் இளங்கோவன் வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு, தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரத்தைச் சொன்னர். நமசிவாய என்றார
ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் இளங்கோவன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம்
ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்
Read 17 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.
1) மத்ஸ்ய
2) கூர்ம
3) வராஹ
4) நரசிம்ம
5) வாமன
6) பரசுராம
7) ஸ்ரீராம
8) பலராம
9) கிருஷ்ண
10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள
Read 14 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #மகாபாரதம்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். நகுலன்,
சகாதேவனுக்குத் தாய் மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருட்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த போது விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது
துர்யோதனன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கௌரவர் சேனைக்கு ஆதரவு கேட்கிறான். தனது தவறை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கண்ணனுக்குச் சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மன
Read 13 tweets
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஆச்சார்யர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம், ஒரு மாணவன், குருவே! நல்லதை படைத்த இறைவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். நல்லதை நம் மனம் அப்படியே ஏற்கிறது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், எதற்காக கெட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கேட்டான். ஸ்ரீ ஆதிசங்கரர்
சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொன்னார். இரவு உணவு அருந்தும் நேரம் வந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் தன் சிஷ்யனுக்கு உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனிடம் ஸ்ரீ ஆதிசங்கரர்,
“பசுவிடமிருந்து தான் பால் வருகிறது. சாணமும் அதே பசுவிடமிருந்து தான் வருகிறது. பாலை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?” என்று கேட்டார். “பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கிறோம். சாணத்தை
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும்
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
Read 8 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள். அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார். அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளதில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார். அவர் மூன்றாம்
முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தை காட்டி மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார். அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள். அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது
அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும் போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள். ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். ராஜாங்க சொத்துகளை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள். எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது
Read 14 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
பிரகாஷ் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் எந்த வேலையை முடித்தாலும் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறுவது வழக்கம். ஒரு முறை தனது விலையுயர்ந்த காரை தன் வீட்டின்‌ முன்பாக வீதியில்‌
நிறுத்தியிருந்தான். அந்த வழியாகச்‌ சென்ற தெரு நாய்‌ ஒன்று அதன் மீது
மஇயற்கை உபாதையை கழித்தது. இதைப்‌ பார்த்த பிரகாஷ் சிரித்தான். இதனைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த நண்பன் சிவா, நண்பா ஏன்‌ நாயைப்‌ பார்த்து சிரித்துக்‌ கொண்டிருக்கிறாய் என்று ஆச்சரியத்துடன்‌ கேட்டான். பிரகாஷ் மிகவும்‌ சாந்தமாக, நாய்‌ அதன்‌ அறிவிற்கு எட்டியதைச்‌ செய்கிறது. அதற்கு
இக்காரின்‌ மதிப்பைப்‌ பற்றித்‌ தெரியாது. சொன்னாலும்‌ அதற்குப்‌ புரியாது என்று சிரித்துக்‌ கொண்டே சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறினான். கேள்வி கேட்ட நண்பன் சிவா இப்படி ஒரு பதிலை சற்றும்‌ எதிர்பார்க்கவில்லை. இது போலத்‌ தான்‌ நம் வாழ்விலும்‌ நமது மதிப்பை அறியாதவர்கள்‌ நம்மை
Read 4 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து, இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற வினாவினை எழுப்பினார்.
"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?"
"அரிசி!"
"அரிசியில் என்னென்ன
பாதார்தங்கள் செய்யலாம்?"
"சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?"
"இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்?
அதற்காக கேட்டேன்"
"எப்படி சாமி வெறும் அரிசியை ஊரவைத்து திண்பது? நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணன், சிவன், அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு
Read 5 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கோதாவரி நதிக்கரையில் சின்னபாப் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் சஞ்சதப்பா என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார். கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். அவர் தன் புலன்கள்
அனைத்தையும் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார். பிரம்மதேவர் தினமும் சஞ்சத்தப்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். சஞ்சத்தப்பாவும் விளக்கமளிப்பார். இதை
கவனித்துக் கொண்டிருந்த இந்திரனுக்கு, சஞ்சத்தப்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு சஞ்சதப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயமும் வந்தது. உடனே தேவலோகத்து அப்சரசுகள் இருவரை அழைத்து சஞ்சத்தப்பாவின் தவத்தை கலைக்க உத்தரவிட்டார். இந்திரனின் ஆணையை ஏற்று இருவரும
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம். அத்தனை முயற்சிகளும் உழைப்புகளும் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம். தோல்வியை வேறு கோணத்தில் பார்ப்போமா? ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய
நமக்கு வழிகாட்ட நினைத்திருக்கலாம். ஒரு நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வி அடைந்தவனாக பார்த்தார்கள். ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100
பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை. யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப்
Read 5 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்ற போதிலும், கோழையாக இருக்கக் கூடாது. உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் இராம ராஜ்ஜியம் புகழப்படுகிறது. ஆனால் இராமர் ஒரு போதும் கோழையாக
இருந்ததில்லை. சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்த போது தேவையான பாடத்தை அவனுக்கு நன்கு கற்பித்தார். அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள் வித்தியாசமானவர்கள்! சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர் அவனுக்குத் தீங்கிழைத்தனர்
அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்பட அர்ஜுனனால் முடியவில்லை. மேலும் சாதுக்கள், மன்னிப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தை, தர்மத்தை அடிப்படையாகக்
Read 6 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்தக் குடுவையை ருசித்துக் கொண்டு இருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம்
கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக் கொண்டது. அதே போல் பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு பக்தர்கள், சிறிது ஆன்மீக புத்தகங்களை படித்து விட்டு பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர் என கூறுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தைக்
கூட அவர்கள் ஆராய்ந்து கண்டு பிடிக்கவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது
இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து
Read 5 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இளைஞன் மாரி ஒரு வெள்ளிக் கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்க ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை
ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன. அய்யா, இந்த வெள்ளியை
எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும் என்று கொல்லனிடம் கேட்டான் மாரி. இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும், வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும் என்று அதிலிருந்து பார்வையை
Read 8 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் புருஷோத்தமன், தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் #ஹரிஹரி என்று 7 தடவை சொல்லுவார். அரண்மனையை விட்டு கிளம்பும் முன் #கேசவாகேசவா என்பார். சாப்பிடும் முன் #கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் #மாதவா என்பான்.
இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் 11 திருநாமங்களையும் 7 தடவை சொல்வது அவனது வழக்கம். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும், முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். மன்னன் புருஷோத்தமனுக்கும் அந்த நேரம்
வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை. கிருஷ்ணா கிருஷ்ணா என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு
Read 10 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும் நாரதர் அதை பார்த்தார். நன்றாக உள்ளது ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது என்றார். இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பத்தை கொண்டார். அவர் அதை
படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை கண்டார். அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவ்வளவு மோசமா என்று அனுமன் கேட்டான். இல்லை, மிகவும் அருமையாக உள்ளது என்றார் வால்மீகி. அப்புறம் ஏன்
அழுகிறாய் என்று அனுமன் கேட்டான். ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதிலளித்தார் வால்மீகி. இதைக் கேட்ட அனுமன், என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாழை இலைகளைக் கிழித்தார். ஏன் கிழித்தீர்கள் என்றார்
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தெற்காழ்வான் என்பவர் ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜரின் ஆசார்யராகிய ஸ்வாமி திருக்கோட்டியூர் நம்பியின் திருக்குமாரர். கோளரியாழ்வான் என்பவர் திருக்கோட்டியூரிலே வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர். தெற்காழ்வான் கோளரியாழ்வான் இருவருமே திருக்கோட்டியூர் நம்பியின் சிஷ்யர்கள்.
இவர்களில் கோளரியாழ்வான் மிகவும் ஆசாரம் உடையவர். ஆனால் தெற்காழ்வான் அவ்வளவு ஆசாரம் உடையவர் அல்லர். ஒரு புண்ணிய தினத்தன்று கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி, 'இன்றைய புண்ணிய தினத்தில் ஸங்கல்ப பூர்வமாகத் திருப்பாற்கடல் புஷ்கரணியில் தீர்த்தமாடினால் நம்முடைய பாபங்கள் தொலையுமே,
தோழரே புண்ணிய தினமாகிய இன்றாவது நீங்கள் ஒரு முழுக்கிடக் கூடாதா? (குளிக்கக் கூடாதா?) என்று அறிவுறுத்தினார். அதற்குத் தெற்காழ்வான், நாம் செய்துள்ள பாபங்கள் ஒன்றிரண்டு முழுக்கால் போய் விடுமோ?உள்ளே ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள தெற்காழ்வார் (நரசிங்கப் பெருமாள் திருநாமம்) திருக்கைகளில்
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!