Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீராமானுஜர்

Most recents (4)

#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
#ஸ்ரீராமானுஜர் ராமானுஜரை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்குத் தமையன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆண்டாள் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுஜரோ 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனாலும் வாழி திருநாமத்தில்,
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்
வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
என்று போற்றுகிறோம். இது எவ்வாறு ஏற்பட்டது? ஆண்டாள் அரங்கனை மணந்தால் நூறு தடா (அண்டா) அக்கார அடிசில் நிவேதனம் செய்வதாக மனமார வேண்டிக் கொண்டார்.

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு
நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ
(நாச்சியார் திருமொழி)
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள், மாலிருஞ்சோலையில் வாழும் நம்பியே, என்னைக் கோவிந்தனோடு சேர்த்து வைத்தால் உனக்கு 100தடா அக்கார
Read 10 tweets
#ஸ்ரீராமானுஜர் #திருநாராயணபுரம் பெருமாள் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட்பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன.
தெற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜன்.
வடக்கு திருப்பதி திருவேங்கடவவன்.
மேற்கு மேல் கோட்டை திருநாராயணபுரம Image
திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப் Image
படுகிறது. பனிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் ஸ்ரீ இராமானுசர் இங்கு 12 வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் Image
Read 15 tweets
#ஸ்ரீராமானுஜர் #1005பிறந்தநாள் #ஶ்ரீராமானுஜர்ஜெயந்தி 7.5.22
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை போதித்தவர் ஶ்ரீ ராமானுஜர். உபநிஷத்கள், பிரம்மசூத்திரங்கள் ஆகியவற்றின் தத்துவங்களை ஒருங்கிணைத்து, பக்தி பாரம்பரியத்திற்கு வலுவான அறிவுசார் அடிப்படையைக் கொடுத்தார். ஸ்ரீ ராமானுஜர் 1017 ஆம்
ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து தனது உடலை விட்டு வெளியேறி 1137 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பரமபதித்தார். இளைய பெருமாள் என்றும் அழைக்கப்படும் ஶ்ரீராமானுஜரின் மூன்று முக்கிய தத்துவப் படைப்புகள் வேதார்த்த சங்கிரகம் (வேதங்களின் வர்ணனை), ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம
சூத்திரங்கள் பற்றிய வர்ணனை) மற்றும் பகவத் கீதை பாஷ்யம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, பக்தி அல்லது பக்தி மூலம் பிரம்மத்தை அடையும் சுதந்திரம் ஸ்ரீ ராமானுஜரால் போதிக்கப் பட்டது. இந்த ஆன்மீக வழியை நிறைய இந்துக்கள் பின்பற்றுகிறார்கள்.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!