Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jul 3, 2020, 5 tweets

#சீமானை இயக்குவது யார்..?????

எனது பதில்:
கோடாரிக்கு பயந்த மரங்கள் அவரை இயக்குகிறது..

வெடி குண்டுகளுக்கு அதிர்ந்த மலைகள் அவரை இயக்குகிறது.

கடலில் வீணாய் கலக்கும் மழை நீர் அவரை இயக்குகிறது..

கதிரியக்கங்களுக்கு இறந்த சிட்டுகுருவிகளும், பறவைகளும் அவரை இயக்குகிறது.. +

வாழ்விடங்களை இழந்த விலங்குகள் அவரை இயக்குகிறது.

சாக துடிக்கும் மொழியும், பண்பாடும், அவரை இயக்குகிறது..

படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களின் அழுகுரல்கள் அவரை இயக்குகிறது...

சாதி, மதம் எனும் தீய நெருப்பினால் பொசுங்கிய சமத்துவம் அவரை இயக்குகிறது.. +

கல்வி வியாபாரம் ஆக்கியதால் ஒசந்த படிப்பை படிக்காத ஏழை குழந்தைகளின் கனவுகள் அவரை இயக்குகிறது....

காசில்லாமல் உயர் வைத்தியம் பார்க்காமல் இறந்தவர்கள் அவரை இயக்குகிறார்கள்..

தூக்கில் தொங்கிய விவசாயி, மன அழுத்தத்தில் இறந்த காவலர்கள், படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் +

தற்கொலை செய்த அனைவரின் கனவுகளும் அவரை இயக்குகிறது.

நீங்கள் அவரை இசுலாமிய, கிருத்துவ மிசினரிகள், ஆர்.எஸ்.எஸ், அதிமுக இயக்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.

என்னை பொறுத்தவரை தமிழ்த்தேசியம் எனும் மாற்று புதிய அரசியலை படைக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் உயிர்த்துடிப்பும் +

தமிழை, தமிழனாக உணர்ந்த நல் உள்ளங்கள்..

மனிதநேயம் கொண்ட அனைத்து உயிர்களும், காடுகளும், மரங்களும், செடிகளும், நீரும், நெருப்பும் அவரை இயக்குவதாகத் தான் நினைக்கிறேன்..

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling