Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Aug 12, 2020, 17 tweets

புலிக்கொடியை உருவாக்கி வடிவமைத்த
மல்லாங்கிணரை சேர்ந்த தமிழன்
சிவகாசி ஓவியர் ., #நடராஜன்

அந்த கொடியிலுள்ள ஒவ்வொன்றுக்கும்
உள்ள அர்த்தத்தை விளக்கும் ஓவியர்,
இரட்டைவாளை போன்று இரண்டு
துப்பாக்கியையும் வைக்க பிரபாகரன்
சொன்னதாக தெரிவித்துள்ளார் - 1/16

#தமிழீழ_விடுதலைப்_புலிகளின்_கொடி
உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு
ஓவியருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிவகாசியில் ஓவியராக ஆக இருந்தவர்
திரு. #நடராஜன். அவருக்குச் சொந்த ஊர்
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

1977-ல் எல்டிடிஇ தலைவர் வே.#பிரபாகரன்
திறமையான சைத்ரிகர் - 2/16

நடராஜனை
சிவகாசியில் சந்தித்து புலிக்கொடி
உருவாக்க எண்ண கருவை கலந்து பேசி உருவானது தான் புலிக்கொடி.

புலிக்கொடியை உருவாக்கி வடிவமைத்த
மல்லாங்கிணரை சேர்ந்த தமிழன்
சிவகாசி ஓவியர் ., #நடராஜன்

அந்த கொடியிலுள்ள ஒவ்வொன்றுக்கும்
உள்ள அர்த்தத்தை விளக்கும் ஓவியர் - 3/16

இரட்டைவாளை போன்று இரண்டு
துப்பாக்கியையும் வைக்க பிரபாகரன்
சொன்னதாக தெரிவித்துள்ளார் .

#தமிழீழ_விடுதலைப்_புலிகளின்_கொடி
உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு
ஓவியருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிவகாசியில் ஓவியராக ஆக இருந்தவர்
திரு. #நடராஜன். அவருக்குச் சொந்த ஊர் - 4/16

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

1977-ல் எல்டிடிஇ தலைவர் வே. #பிரபாகரன்
திறமையான சைத்ரிகர் நடராஜனை
சிவகாசியில் சந்தித்து புலிக்கொடி
உருவாக்க எண்ண கருவை கலந்து பேசி உருவானது தான் புலிக்கொடி.
இளைஞர்களை அழைத்து வந்தார்.

அவர்களின் பெயர் கூட எனக்கு தெரியாது - 5/16

பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி'
என்றும், மற்றொருவரை "பேபி' என்றும்
அழைத்தார்.

ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே
கூப்பிட்டார். இவர்கள் யாராக இருந்தால்
என்ன? இவர்களின் உண்மையான பெயர்
என்னவாக இருக்கும் என்பதிலெல்லாம்
நான் ஆர்வம் காட்டவில்லை .

ஆனாலும் இலங்கைத்-6/16

தமிழர்கள்
மீதான பற்றால், "உங்களுக்கு நான்
என்ன செய்யவேண்டும்' என்று கேட்டேன்.

அதற்கு அந்த தம்பி "நாங்கள் ஒரு
இயக்கம் ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு
"தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று
பெயர் கூட வைத்து விட்டோம் .

இந்த இயக்கமானது சிங்கள இனவெறி
அரசுக்கும், அதன் - 7/16

அடக்குமுறைக்கும்
எதிரானது. பண்டைய காலத்தில் தமிழன்
தான் இலங்கையை ஆண்டான்
என்பதற்குச் சான்றுகள் இருக்கிறது .

அந்த சோழமன்னன் புலிக்கொடி பறக்க
இலங்கையில் ஆட்சி நடத்தியிருக்கிறான்.
அதனால் எங்கள் இயக்கத்தின்
சின்னத்திலும் புலி இடம்பெற வேண்டும்
என்று விரும்புகிறோம் - 8/16

சிவகாசி பட்டாசு லேபிள்களில்
வரையப்பட்டிருந்த புலிப்படங்கள்
சிலவற்றைப் பார்த்தோம். எங்களுக்கு
பிடிக்கவில்லை .

புலி என்றால் சீறவேண்டும். புலியின்
முகத்தில் சீற்றம் பூரணமாக வெளிப்பட
வேண்டும். இப்படி ஒரு படத்துக்காக பல
இடங்களில் பல நாட்கள் அலைந்து
விட்டோம் - 9/16

எதுவும் மன நிறைவாக இல்லை.
பிறகு தான் உங்களைப் பற்றி
கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம்''
என்றார் .

அவர்களின் எண்ணத்து கேற்ப நான்
வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம்
கொண்ட புலியின் முகம் எதிர்
பார்த்தபடியே அமைந்து விட்டது .

அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது - 10/16

அப்போது நான், "வளையத்தைத் தாண்டி
வெளியே வருவது போல் புலிகளின்
நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால்
நன்றாக இருக்குமே' என்று எனது
அபிப்பிராயத்தைச் சொன்னேன் .

உடனே தம்பி அப்படியே வரையுங்கள்
அண்ணா' என்றார் ஆர்வத்தோடு.
பிறகு தான் வளைவை மூன்றாக பிரித்து
ஒவ்வொன்றிலும்-11/16

11 தோட்டாக்கள்
என 33 தோட்டாக்களை வரைந்தேன் .

அவர்களின் விருப்பப்படியே நுனியில்
குத்துக்கத்தி உள்ள இரண்டு
துப்பாக்கிகள் ஒன்றுக்கொன்று
குறுக்காக வளைவின் பின்புறம்
இருக்கும் படி வரைந்தேன் .

இப்படித்தான் அந்த இயக்கத்துக்கு
புலிச்சின்னம் உருவாயிற்று .

இந்தச் - 12/16

சின்னத்துக்கு பிளாக் எடுத்து
தரும்படி என்னிடம் கேட்டார் தம்பி.
நானும் செய்து கொடுத்தேன்.

அந்த மூலப்படம் மற்றும் ஃபிலிம்
நெகட்டிவ்கள் இப்போதும் என்னிடம்
இருக்கின்றன .

பிறகு புலிச்சின்னம் பொறித்த
லெட்டர்பேடு, அடையாள அட்டைகள்
அச்சடித்துத் தர வேண்டுமென்றார் - 13/16

அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன் .

விடுதலைப் புலிகளின் கொடி சின்னத்தில்
புலி தலையை சுற்றி 33 குண்டு
வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம்
மலர்ந்து விடும் என்பதாக நம்பிக்கை .

நக்கீரன் பத்திரிகை வெளியிட்டுள்ள
புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள் - 14/16

ஓவியர் நடராசா,
தம்பி, முதற்பதிப்பு: 2009.

கேடயமும் குறுக்கே இரண்டு வாளும்
வைத்து சைத்ரிகர் ஒருவர் 1960 களில்
படம் வரைந்தார் .

அதனை அடிப்படையாய் கொண்டு,
புலிக்கொடி உருவாக்க எண்ணம்
திரு. பிரபாகரனுக்கு உதித்தது .

வாளை எடுத்து விட்டு மாற்றாக,
கத்திமுனை கொண்ட - 15/16

இரண்டு
ரைபிளாகவும், கேடயம் வட்டமாகவும் .,

புலிக்கொடியில் வரைந்தளித்தவர்
ஓவியர் நடராஜன் .
அதில் பாயும் புலி சீறி
உறுமுவதாக வடிவமைத்தவர் அவரே - 16/16

“Un roll” @threadreaderapp

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling