இன்றைக்கு அப்பாவின் 89வது பிறந்த நாள்.
அப்பாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், இரண்டு காரணங்களுக்குகாக எனக்கு குற்ற உணர்வு உண்டு.
இந்த குற்ற உணர்வு எனக்கு மட்டுமே பொருந்தும். என்னுடைய சகோதரர்களுக்கு அல்ல!
ஒன்று, அவர் ஆசைப்பட்டபடி அவருடைய இறுதிச்சடங்குகள் நடக்கவில்லை. 1/14
பாரம்பரியமுறைப்படி தனக்கு சடங்குகள் செய்யவேண்டாம் என குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - அவருடைய 60வது மற்றும் 80வது பிறந்த நாட்கள் சமயத்தில் - என்னிடம் கூறியிருந்தார். க.நா.சுவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினர் நடந்துகொண்டவிதம் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.2/14
க.நா.சுவின் இறுதி ஊர்வலம் முடிந்தபிறகு, ஒரு நாள், சிலரை அழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறையை பின்பற்றவேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம்.
இரண்டாவது, 2014-இறுதியில், 2015-ஆரம்பத்தில் நான் எடுத்த முடிவு. அப்போது, என்னுடனுமும் என் மனைவியுடனும் 3/14
பெற்றோர்கள் கிட்டதட்ட 20 வருடங்கள் இருந்து பழகிவிட்டனர். அந்த சமயத்தில் என்னுடைய சகோதரர், தி, நகரில் வீடு வாங்கியபொழுது, பெற்றோர்களை தன்னுடன் வைத்து கொள்ளவேண்டும் என்ற கேட்டுக்கொண்ட பொழுது, நான் அவர்களுடைய - அதாவது மூத்த குடிமகன்களின் மன நிலையை - அறிந்து அந்த வேண்டுகோளை 4/14
நிராகரித்திருக்கவேண்டும். ஆனால், ஏற்றுகொண்டுவிட்டேன்.
அந்த சமயத்தில் நானும் தற்போது இருக்கும் வீட்டை ஒன்று வாங்கி தயார்படுத்தி கொண்டிருந்தேன். இன்னம் சொல்லப்போனால், பெற்றோர்களுக்கு ஒரு அறை தயாராகிக் கொண்டிருந்தது. என்னுடைய சகோதரரின் வேண்டுகோள் கடைசி நேரத்தில்தான் வந்தது. 5/14
இருவரும் ஒரே மாதத்தில்தான் கிரஹபிரவேசமும் செய்தோம்
ஆனால், நான் செய்து கொடுத்திருக்கக்கூடிய வசதிகளை விட பலமடங்கு என்னுடைய சகோதரர் அவரது புதிய வீட்டில் அப்பாவிற்கு செய்து கொடுத்திருந்தார். பல விடயங்களைப்பற்றி யோசித்தும் அவ்வசதிகளை செய்திருந்தார். மன நிலை என்று குறிப்பது 6/14
பெற்றோர்களின் வயதை சம்பந்தப்படுத்தி பார்க்கவேண்டிய ஒன்று. அந்த வயதில் - அப்பாவிற்கு 83 வயது. அம்மாவிற்கு 76-77 வயது - வயதானவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒர் இடம் பழக்கப்பட்டு விட்டால், அந்த இடத்திலிருந்து அவர்களை அகற்றி இன்னொரு இடத்தில் வசிக்கக் கூறுவது மிகவும் தவறானது 7/14
மட்டுமல்ல. கொடுமையானதும் கூட.
அப்பா பன்முகத்தன்மை கொண்டவர் என்பது எனக்கு தெரிந்தாலும் அப்பாவை அப்பா என்று காணும் தன்மையே எனக்கு மேலோங்கிவிட்டது. அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் எழுத்தாளர்களுக்கு "displacement" என்பது மிகப் பெரிய தண்டனை என்பதும் 8/14
என்னுடைய சிந்தனையில் அப்போது இல்லை.
தி நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு வாழ்ந்து விட்டு வேளச்சேரியில் குடி பெயர்ந்தபோது, அப்பாவிற்கு (அம்மாவிற்கும் கூட) முதலில் கடினமாக இருந்தாலும் மிக விரைவில் வேளச்சேரி அவருக்கு (அவர்களுக்கு) பிடித்து விட்டது. அதே மாதிரி, 9/14
"தி நகரில் இரண்டாவது வாசம்" அப்பாவிற்கு பிடித்துவிடும் என்றே நான் நினைத்தேன். ஆனால், அச்சமயத்தில் அவருக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்டது என்பதை நான் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை. அந்த வயதில் அந்த "displacement"-ஐ ஏற்றுகொள்ளும் மன நிலையில் அவர் இல்லை. பதினாறு மாதங்கள் நான் 10/14
மட்டுமே கொழும்புவில் வசித்த கொண்டிருந்த பொழுது. அவரிடமிருந்து ஒரு நாள் காலையில் "போன் கால்." ஒரே வார்த்தைதான். "At this stage of my life, I should not be suffering this kind of displacement." படைப்பு உலகத்தில் உள்ளோருக்கு அவர்கள் வசிக்கின்ற இடம் மிகவும் முக்கியமானது. 11/14
மேற்கத்திய எழுத்தாளர்கள் எவ்வாறேல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பலமுறை என்னிடம் அவர் விவாதித்திருந்தாலும் இதைப்பற்றியெல்லாம் யோசித்து, முடிவு எடுக்கவேண்டிய சமயத்தில் நான் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. என்னுடைய குற்ற உணர்வு நான் இறக்கும் வரையில் இருக்கும். 12/14
அதிலிருந்து நான் மீள முடியாது. வயதான தாய், தந்தையோரை கவனித்து கொள்ளும் எவரும் நான் செய்த தவறை செய்து விடாதீர்கள் என்பதை மட்டுமே நான் கூறமுடியும்.
---------------------------------------------------------
படம்: ஜனவரி 26, 2014-அன்று அன்றைய முதல்வரான ஜெயலலிதாவிடமிருந்து .. 13/14
அப்பா திரு.வி.க. விருதை புனித ஜார்ஜ் கோட்டையில் பெற்ற பொழுது. அன்றைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், சுலோசனா சம்பத் மற்றும் பலருக்கு விருதுகளை வழங்கிய ஜெயலலிதா, அப்பாவிடம் மட்டும்தான் சிரிது நேரம் பேசினார்.
(இப்படத்தை வழங்கியதற்காக தமிழக அரசிற்கு நன்றி) 14/14
*அப்பாவிடம் மட்டும்தான் சிறிது நேரம் பேசினார்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
