#தினசரி_பூஜை -26
16 உபசாரங்கள் ஏற்கெனெவே முடிந்துவிட்டன. விசேஷ பூஜைகளை பொருத்து இவ்விடத்தில் சத்ரம் (குடை) சாமரம் (விசிறி), கீத (சங்கீதம்), ந்ருத்ய (நாட்டியம்), ஆந்தோளிகாண் (ஊஞ்சலில் ஏற்றி ஆட்டுவது), கஜ, ரதாரோஹணம் (யானை, ரதம் இவற்றில் ஏற்றி வலம் வரச்செய்வது) என்று பலதும்
1
உண்டு. வீட்டு பூஜையில் இதுக்கெல்லாம் எங்கே போக? ! ஆகவே
ஸமஸ்த ராஜோபசாரான் சமர்ப்பயாமி
என்று சொல்லி பூக்கள் மங்களாக்ஷதை சமர்பித்து விடலாம்.
பூஜையின் பலனை உத்தேசத் த்யாகம் செய்துவிட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.
2
யத் ஸ்ம்ருத்யா நாம ஜப பூஜா கிரியாதிஷுஸர்வம் ஸம்பூர்ணதாம் யாதி சத்யம் வந்தேதமச்யுதம்
{யாரை நினைப்பதால் செய்த ஜபம், பூஜை ஆகியன நிச்சயமாக பூரணமாகுமோ அந்த அச்சுதனை நினைவு கூறுவோம்}
என சொல்லி மங்களாக்ஷதை சிறிதை நீர் ஊற்றி கீழே விடவேண்டும்.
இதனால் பூஜையின் போது விட்டுப்போன
3/5
செயல்கள், கவனமின்மை, பூஜை திரவியங்களின் குறைபாடு ஆகியன நீங்கி பூரணமாகும்.
சங்கை வைத்திருந்தால் அதில் நீர் நிரப்பி பூஜா பலனை க்ரஹிக்க எல்லா ஸ்வாமியையும் மும்முறை சுற்றி தலையில் நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
4/5
ஶங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் ஶங்க்ரயோபரிஅங்கலக்னம் மனுஷ்யானாம் ப்ரம்ஹ ஹத்யாயுதம் தஹேத்
வைணவர்கள் சாளக்ராம தீர்த்தத்தை இதே போல மேலே தெளித்துக்கொள்வதுண்டு.
ஸாளக்ராம சிலாவாரிபாபஹாரி சரீரிணாம்ஆஜன்ம க்ருத பாபானாம்ப்ராயச்சித்தம் தினே தினே
5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
