திவாண்ணா Profile picture
Feb 2, 2021 16 tweets 3 min read
English Translation of Shri.Vimal Jain’s tweet:
For several years we have been consuming imported pulses. 2 years back Modi ji started stopping it and now it has been completely stopped. this protest against farmers laws is just a Sham. the real reason and story are here.
1/n
Let us read. In 2005 Manmohan stopped the subsidies for pulses. after 2 years Netherland, Australia and Canada entered into understanding with the government which was importing the pulses. several big pulses farms came up in Canada. they were handed over to the Punjabi sikhs
2/n
Oct 11, 2020 8 tweets 2 min read
#நான்யார்? - 16
அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?
நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மாபத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும்
1/8
இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!
பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?
முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு
2/8
Oct 10, 2020 7 tweets 1 min read
#நான்யார்? - 15
நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?
சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல்
1/7
முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும்
2/7
Oct 9, 2020 4 tweets 1 min read
#நான்யார்? - 14

அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம், சீவன், கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ
1 போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியும்.
அது போலத்தான்
2
Oct 8, 2020 5 tweets 1 min read
#நான்யார்? - 13

ம்ம்ம்... ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?
எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி
1/5
செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்லா நசுக்கி
2/5
Oct 3, 2020 12 tweets 2 min read
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12 அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
Oct 1, 2020 6 tweets 1 min read
#நான்_யார்? - 6

ஏன், உலகம் இருக்கிறப்பவே, தெரியறப்பவே சொரூப தரிசனம் கிடைக்காதா?
கிடைக்காது.
ஏன்?
நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கவில்லை என்கிறதே அடிப்படையில் பிரச்சினை.
சயன்ஸ்படியே பார்க்கலாம். பல வருஷங்களுக்கு முன்னால (atom) ஆட்டம் ந்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தமே
1/6
பிளக்க முடியாதது என்பது. அப்புறமா அதை பிளந்தாங்க. ந்யூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரானு சொன்னாங்க. அப்புறம் இன்னும் மாறித்து… க்வார்க்ஸ் ந்னாங்க. இப்படியே போய் அது எனர்ஜியா இல்லை பருப்பொருளான்னே சந்தேகம் வந்துகிட்டு இருக்கு.
வெளிப்புறமா பார்க்க பல ஆட்டம்கள் சேர்து ஒரு
2/6
Sep 29, 2020 11 tweets 2 min read
#நான்_யார்? - 4
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!
யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

ம்ம்ம்! தெரியறதான்னு பாத்துடலாமே!
நான் இந்த உடம்பா? சர்வ சாதாரணமா என் கை, என் கால், என் உடம்பு வலிக்கறது ந்னு எல்லாம் சொல்லறோமே? அப்ப உடம்பும் நானும் வேற
1/11 வேறத்தானே? ரொம்ப ரொம்ப சிம்பிளா நான் செத்துப்போனப்பறமும் இருக்கற இந்த உடம்பை நான்ன்னு எப்படி சொல்லறது? அப்படியேவிட்டா சில நாட்கள், பதப்படுத்தி வெச்சா இன்னும் பல நாட்கள் இருக்கிற இந்த உடம்பு நானா? இதயம் துடிச்சு கொண்டிருந்தாலும் மூச்சு லேசா விட்டுக்கொண்டு இருந்தாலும் கூட சில
2/11
Sep 28, 2020 12 tweets 2 min read
#நான்_யார்? - 3

என் குழந்தையை பிடிக்கும். ஏன்? ஏன்னா இது என் குழந்தை. என் மனைவியை பிடிக்கும். ஏன்னா இது என் மனைவி. என் மதத்தை பிடிக்கும்.; ஏன்னா இது நான் சார்ந்து இருக்கிற மதம். என் நாட்டை பிடிக்கும்; ஏன்னா இது என்னோட நாடு.
இது எல்லாத்துலேயும் ஒரு பொதுவான சமாசாரம் இருக்கு
1/12 இல்லே? ’என்!’ அந்த என் இல்லைன்னா அவ்வளோ ருசிக்கிறதில்லை. என் குழந்தை என்கறதால் இந்த குழந்தையை எனக்கு பிடிக்கிறது. என் ஜாதி என்கிறதால என் ஜாதியை எனக்கு பிடிக்கிறது, என் நாடு என்கிறதால் என் நாட்டை எனக்குப்பிடிக்கிறது!
ஸ்வீட் எனக்கு பிடிக்காது. ஜிகிர்தண்டா எனக்குப் பிடிக்காது.
2/12
Sep 27, 2020 8 tweets 2 min read
#நான்யார்? - 2

சகல ஜீவர்களுக்கும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் ஸ்வபாவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும்.
1/8
அதற்கு 'நான் யார்?' என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
--
எல்லோருக்கும் சுகமாக இருப்பதிலேயே விருப்பம் இருக்கு. துக்கத்தை விரும்பறவங்க யாரும் இல்லை! யாரானா டாக்டர்கிட்ட போய் “எப்பவும் சந்தோஷமாவே இருக்கேன்; கொஞ்சம் துக்கமா இருந்தா பரவாயில்லை. ஏதாவது மருந்து உண்டா?” ன்னு
2/8
Sep 26, 2020 6 tweets 1 min read
ஐயே அதி சுலபம்!
பல்லவி:

ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை
ஐயே! அதி சுலபம்
அனுபல்லவி:

நொய்யார் தமக்கும் உளங்கை ஆமலகக் கனி
பொய்யாய் ஒழிய மிகு மெய்யாய் உளது ஆன்மா (ஐயே!)
சரணம் 1

மெய்யாய் நிரந்தரம்தான் ஐயாது இருந்திடவும்
பொய்யாம் உடம்பு உலகம் மெய்யா(ய்) முளைத்தெழும் பொய்-
1/6
மை ஆர் நினைவு அணுவும் உய்யாது ஒடுக்கிடவே
மெய் ஆர் இதயவெளி வெய்யோன் சுயம் ஆன்மா ---
விளங்குமே; இருள் அடங்குமே; இடர் ஒடுங்குமே;
இன்பம் பொங்குமே (ஐயே!)
சரணம் 2

ஊன் ஆர் உடல் இதுவே நான் ஆம் எனு(ம்) நினைவே
நானா நினைவுகள் சேர்ஓர் நார்எனும் அதனால்
2/6
Sep 26, 2020 9 tweets 2 min read
#நான்_யார்? - 1

ஞான விசாரம்ன்னாலே பலரும் “ஓ அது நமக்கு ஒத்து வராது" ன்னு நினைப்பாங்க. “நமக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும்? ஞானம்ன்னா என்ன விசாரம்ன்னா என்ன? ஆள விடப்பா!”
இப்படித்தான் ஒருத்தர் ஆத்ம வித்தை மிகக்கடினம் ந்னு ஒரு பாட்டே எழுதினார்.
கோபாலகிருஷ்ணபாரதியார்
1/8
‘நந்தன் சரித்திரம்’ எழுதினார். அதில், "ஐயே மெத்தக்கடினம்” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையே சதா நினைந்து உருகி, சிதம்பரத்தில் அவனது பொன்னம்பல தரிசனத்தைக் காண ஏங்கி நின்ற, நந்தன் பாடுவதாக அது அமைந்தது.
பகவான் ரமண மகரிஷி அதுக்கு பதிலா ”ஐயே அதி சுலபம்; ஆத்ம வித்தை ஐயே
2/8
Sep 25, 2020 8 tweets 2 min read
#தினசரி_பூஜை -29

12. அக்‌ஷதை தூவுதல்:
அக்‌ஷதான் சந்த்ரவர்ணாபா4ன் ஶாலேயான் தண்டு3லான் ஶுபான்
அலங்காரார்த்த2மானீதான் தா4ரயஸ்ய மஹா ப்ரபோ4
அக்‌ஷதை தூவ வேன்டும்.
13. அர்ச்சனம்:
பின் வசதி போல அர்ச்சனை. ஒவ்வொரு மூர்த்திக்கும் இருக்கும் அஷ்டோத்திர ஶத (அல்லது ஸஹஸ்ர) நாமாக்களை சொல்லி
1/7
அர்ச்சனை. வசதி நேரம் இல்லாதவர் அந்தந்த மூர்த்தியின் பெயரையே சொல்லி 8 முறை அர்ச்சிக்கலாம்.
14. தூபம் காட்டுதல்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.
2/7
Sep 24, 2020 8 tweets 2 min read
#தினசரி_பூஜை -28

எல்லோருக்கும் பொதுவான பூஜை :
முன்னே பஞ்சாயதன பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.
1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து
1/8
அருந்தவும்.
மங்களாக்‌ஷதை + நீர் எடுத்துக்கொண்டு…
2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம்…ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். உ-ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி
2/8
Sep 24, 2020 4 tweets 1 min read

“பதவி உயர்வுக்கு ஏன் என்னை புறக்கணிச்சீங்க?” அதிகார பூர்வமா அறிவிக்கும் முன்னே, சுசித்ரா, மாலதிகிட்ட பேசும் முன்னே யாரோ விஷயத்தை கசியவிட்டாங்க போலிருக்கு. இப்ப மாலதி கண்ணை கசக்கிகிட்டு வந்து நிக்கறாங்க. குரல்ல ஒரு சின்ன நடுக்கம். மனசு புண் பட்டா
1/4
மாதிரி ஒரு பாவனை. மாலதி நல்லா வேலை செய்யறவர்தான். ஆனா பதவி உயர்வுக்கு இன்னும் தயார் ஆகலை. இதை அவங்ககிட்ட சொல்லறதுதான் இப்ப பிரச்சினை. இதால ஏற்படும் விளைவை அப்புறம் பாத்துக்கலாம். இப்ப நாம பங்கெடுக்க வேண்டிய உரையாடல் சிக்கலா இருக்கப்போறது! இந்த சிக்கலான உரையாடல்கள்
2/4
Sep 23, 2020 7 tweets 1 min read
#தினசரி_பூஜை -27
பஞ்சாயதன பூஜையில் ஆவாஹனம் ஆரம்பிக்கும் முன்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கரஆகச்சத்வம் மஹாதேவ ஸர்வாவரணை ஸஹ

என வரவேற்பதுண்டு, பூஜை முடிந்த இந்த தருணத்தில்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ ஶங்கர பிரவிஶத்வம் மஹாதேவ ஸர்வைராவணை: ஸஹ
1/7
{ஹ்ருத தாமரையின் மத்தியில் உமையுடன் வீற்றிருக்கும் ஶங்கரா, நீ எல்லா ஆவரணங்களுடன் மீண்டு செல்வாயாக.}

என சொல்லி நிர்யாண முத்திரையால் பூக்களை எடுத்து நுகர்ந்து, ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு கீழே போடவும். {முத்திரை தெரியாவிட்டால் விட்டுவிடலாம்}
ஶிவ பஞ்சாயதனம் ஆனால் அபிஷேக
2/7
Sep 22, 2020 5 tweets 1 min read
#தினசரி_பூஜை -26

16 உபசாரங்கள் ஏற்கெனெவே முடிந்துவிட்டன. விசேஷ பூஜைகளை பொருத்து இவ்விடத்தில் சத்ரம் (குடை) சாமரம் (விசிறி), கீத (சங்கீதம்), ந்ருத்ய (நாட்டியம்), ஆந்தோளிகாண் (ஊஞ்சலில் ஏற்றி ஆட்டுவது), கஜ, ரதாரோஹணம் (யானை, ரதம் இவற்றில் ஏற்றி வலம் வரச்செய்வது) என்று பலதும்
1 உண்டு. வீட்டு பூஜையில் இதுக்கெல்லாம் எங்கே போக? ! ஆகவே

ஸமஸ்த ராஜோபசாரான் சமர்ப்பயாமி

என்று சொல்லி பூக்கள் மங்களாக்ஷதை சமர்பித்து விடலாம்.
பூஜையின் பலனை உத்தேசத் த்யாகம் செய்துவிட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.
2
Sep 22, 2020 4 tweets 1 min read
#அந்தோனி_டி_மெல்லோ 113
ஒரு யாத்ரிகர் குழுவினர் தம் பயணத்திட்டத்தில் மாஸ்டரை சந்திப்பதை சேர்த்துக்கொண்டனர்.
மாஸ்டர் முன் வந்து சேர்ந்த பிறகு தங்களுக்கு ஏதேனும் சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
மாஸ்டருக்கு அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஆன்மீக நாட்டம் ஒன்றுமில்லை;
1/4
மாஸ்டரை தரிசிப்பது ஃபேஷன் ஆகிவிட்டதால் அங்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்துச்சொன்னார்: நீங்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
மூக்கில் குத்தப்பட்டதைபோல உணர்ந்த அவர்கள் விளக்குமாறு கேட்டார்கள்.
2/4
Sep 21, 2020 7 tweets 1 min read
#தினசரி_பூஜை -25
அடுத்து தாம்பூலம் சமர்பிப்பது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. சும்மா அக்கறையில்லாமல் வைக்கக்கூடாது. நாம் போட்டுக்கொள்வதானால் எப்படி அது இருக்குமோ அப்படி இருக்க வேண்டும்.
மந்திரம்:
பூகீ3 ப2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம்
1/7
ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி
அடுத்து கர்ப்பூர ஹாரத்தி - மும்முறை சுற்றி, கண்களில் ஒத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
மந்திரம்:
ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம் ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர
வேத மந்திரம்:
2/7
Sep 20, 2020 6 tweets 1 min read
#தினசரி_பூஜை -24
ரைட் , அர்ச்சனை முடிந்தது. அடுத்து தூபம். தசாங்கத்தை தணலில் தூவி புகை போடுவது நல்லது. தணலுக்கு இந்த காலத்தில் எங்கே போவது? விசேஷ பூஜைக்கே ஒரு துண்டு கரியை காஸ் அடுப்பில் வத்து தணலாக்கித்தான் கொண்டு வருகிறார்கள்! அதனால ஊதுவத்திதான் புழக்கத்தில் இருக்கிறது.
1/6
மந்திரம்:

வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

தீபம் என்னது? எப்பவுமே அது ஏத்திதானே இருக்கும்ன்னா, ஆமாம், தீபம் ஒன்று எரியாமல் ஸ்வாமியை வெளியே எடுப்பதில்லை. ஆனாலும் இங்கே சொல்வது நெய் தீபம். சிலர் ஒரு டப்பாவில்
2/6
Sep 19, 2020 10 tweets 2 min read
அடுத்து புஷ்பைஹி பூஜயாமி என்று மலர்களால் அர்ச்சனை.
எந்த வாசனையுள்ள மலரையும் அன்புடன் சமர்பிக்க இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் சாஸ்திர ரீதியில் சில விலக்கத்தக்கன.
அருகம்புல் பிள்ளையாருக்கு வெகு இஷ்டம் என்றாலும் அதை அம்பாளுக்கு
1/10 அர்ச்சிக்கக்கூடாது. பிள்ளையாருக்கு துளசி, விஷ்ணுவுக்கு வெறும் அக்‌ஷதை, சிவனாருக்கு செம்பருத்தி, இப்படி சில விஷயங்களை பார்த்து செய்ய வேண்டும்.
நான் செய்வது சூரியனுக்கு நந்தியாவட்டை, பிள்ளையாருக்கு அருகு, கிடைக்காவிட்டால் சிவப்பு பூ ஏதேனும்; அம்பாளுக்கு மல்லிகை, விஷ்ணுவுக்கு
2/10