Solo சோழன் 😎 Profile picture
Life is not a distination,It is a travel itself. Make every moment alive. Due to busy life/travel, I will visit social media occasionally for a while 😀

Sep 24, 2020, 14 tweets

வணக்கம்.நீங்கள் கொடுத்த முழுமையாக வீடியோவைப் பார்த்தேன்‌. வீடியோவில் ஒவ்வொரு Fact மே தவறாக சித்தரித்தரிக்கப் பட்டுள்ளது. கேட்பது நான் மதிக்கும் சேரன் என்பதால் விரிவாக விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்🙏 1/12

ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இப்போது பால் கொள் முதலும் இதே திட்ட விதத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அரசின் ஆவின், கார்பரேட்கள் ஆரோக்கியா, ஹட்சன் உட்பட பல உள்ளன.

பால் உற்பத்தியாளர் அரசுக்கும் குறைந்தபட்ச நிர்ணய விலைக்கு கொடுக்கலாம், இல்லை அதிக விலை மற்றும் 2/12

தானே வந்து கலெட் செய்யும் வசதியுள்ள ஏதேனும் கார்பரேட்டிடம் முன்பே விலை வைத்து ஒப்பந்தமும் போடலாம். கட்டாயமில்லை.. ( குறைந்தபட்ச நிர்ணய விலை முறை அரசின் கொள்முதலில் தொடரும். மாற்றம் இல்லை என அரசு தெளிவுபடுத்தி விட்டது. எதுவுமே நீக்கப்பட வில்லை. புதிய வசதிதான் சேர்ந்துள்ளது. 3/12

இஷ்டப்பட்டவர், பலன் புரிந்தவர் தேர்ந்தெடுக்கலாம். அரசு கொள்முதலே செய்யாது எனக்கூறும் வீடியோ செய்தி பொய்யாகி விட்டது),

முன்பே விலை நிர்ணயம் செய்வதால் , பொருள் உற்பத்தியானதும் விலை கிடைக்கவில்லை என தெருவில் கொட்டி வீணாக்குவது தவிர்க்கப்படும். அரசும் கொள்முதல் செய்வதால், 4/12

நிறுவனங்கள் அதைவிட அதிக சலுகை விலை & சர்வீஸ் கொடுக்கும். இன்று கிராம பால் உற்பத்தியாளர் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நம் விவசாயிகளும் நலம் பெறுவர்.

விவசாயி பொருளை கொண்டுபோய் காத்திருந்து வீணாகும் முன்னே கிடைக்கும் விலைக்கு தள்ளும் அவலம் மாறும். 5/12

விளைவிக்கும் முன் லாபத்தை முடிவு செய்து விளைந்ததும் ஒப்பந்ததாரர் விளைச்சலை நிலத்திற்க்கே வந்து வாங்கிச் செல்வார். லாபம் மற்றும் எளிமையால் விவசாயி அடுத்த விளைச்சலுக்கு அதே ஒப்பந்ததாரருடன் புது ஒப்பந்தம் தொடருவார் அல்லது வேறு அல்லது அரசு கொள்முதலுக்கு போவார். 6/12

எதுவுமே கட்டாயமில்லை. நல்லது தானே
.

மேலும் பயிருக்கு ஒப்பந்ததாரரும் பொறுப்பாவதால்..
பால் உற்பத்திக்கு மருத்த உதவி , அதிகரிக்க ஆலோசனை போன்றவை நிறுவனங்களிடமிருந்து கிடைப்பதைப்போல... விவசாயிகளுக்கும் விவசாய விஞ்ஞானிகளின் ஆலோசனை உதவி கிடைக்கிறது‌. 7/12

பயிர் காப்பீடும் நிறுவனங்களால் உறுதி செய்யப்படுகிறது.

இதே முறை உலகெங்கும் முன்னேறிய நாடுகளிலுமே உள்ளது..விவசாயிகள் சாவதில்லை...

வீடியோவின் ஒவ்வொரு லாஜிக்குமே வெற்றாகவே உள்ளது‌.தேவை என்றால் பாயிண்டுகளாக சொல்லவே முடியும்.

விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வசதி இது.

8/12

இன்னும் எத்தனைக்காலம்தான் கடன் தள்ளுபடி இலவச மின்சாரம் இலவச ஆதரவு தொகை என கொடுத்து சோறு போடும் விவசாயிகளை பரிதாபத்துக்குரியவர்களாகவே வைத்திருப்பது?

இன்று உள்ள சிஸ்டம் நம் நாட்டு விவசாயிகள் தற்கொலையையும் , விளைந்த பொருளுக்கு 9/12

எதிர்பார்த்த விலை கிடைக்காமல் ரோட்டில் கொட்டுவதையும் வழக்கமான காட்சியாக்கிவிட்டது. விலை கிடைப்பது விளைச்சல் சமய அதிர்ஷ்டத்தைப் பொருத்தது என்றாகிவிட்டது . மாற்றம் வேண்டாமா? இப்போது கொண்டுவந்துள்ள திட்டம் , இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் வரப்பிரசாதம். 10/12

விவசாயப் புரட்சி இது. குழு விவசாயமும் இனி செழிக்கும். பல மாநிலங்களில் விவசாய சங்கங்கள் பாரட்டுவதை தமிழக பத்திரிக்கைகளும் தாமதமாக வெளியிடும் என நம்புகிறேன்.

காலத்திற்க்கேற்ப மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளாவிடில் இன்றைய அவலங்களே தொடரும். 11/12

ஏற்கனவே பால் துறையில் புகுத்தி மாபெரும் வெற்றி கண்டு மாடு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வில் பால்வார்த்துக்கொண்டிருக்கும் முறையின் விரிவாக்கமே இது.

12/12

தமிழில் மூத்த ஊடகவியளாலர் திரு @RangarajPandeyR திட்டத்தின் சாதக & வாய்ப்புள்ள பாதகம் குறித்தும்கூட தனது நடுநிலையான ஆய்வை வெளியிட்டுள்ளார். அதையும் உங்கள் சிந்தனைக்கு உணவாக ஏற்க வேண்டுகிறேன் 👍



P.S. 12+1 thread.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling