தற்போது சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தான்.
#அலோபதி மருத்துவ மரணம்.
ஒரு பார்வை.
லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவு இருந்தாலே போதுமானது.
மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போனால் இவ்வுலகில் இல்லாமல் செய்து விடுவார்கள்.
2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்து கூட்டிபோய்
15 கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல லட்சங்களை கறந்து பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்.
யாரும் கேள்வி கேட்க கூடாது.
ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது.
இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்.
அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது.
யாரையும், ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.
எந்த ஊடகமும் வாயை திறக்காது.
ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ
செய்திருந்தால் இன்று உலகமே பொங்கி எழுந்து இருக்கும்.
ஒரு மாதத்துக்கு அதுதான் மீடியாவில் டிரண்டிங்காக இருந்திருக்கும்.
அதுக்கு அப்புறம் அந்த #சித்தவைத்தியர் வாழ்க்கை அவ்வளவுதான்.
ஒரு மாநில முதல்வரையே சாகடித்து விட்டவர்களிடம் நாமெல்லாம் எம்மாத்திரம்.
பண முதலைகளின் நிலையே இப்படி இருக்கும் போது, சாதாரண மக்களின் நிலை??
இந்த அலோபதி மருத்துவர்களால் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது.
அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது.
#பணவெறி பிடித்தவர்கள்.
சரி போகட்டும்.
உங்ககிட்ட ஒரு #சந்தேகம்
நம் பாரம்பரிய சித்த வைத்தியரிடம், சித்த வைத்தியம் பார்த்து இதுவரை எத்தனை மரணங்கள் நீங்கள் கண்ணால் பார்த்திருக்கீங்க??
இல்லையென்றால் உறுதியான ஆதாரத்தோட ஏதாவது கேள்வி பட்டிருக்கீங்களா??
அதுபோல் ஆங்கில அலோபதி மருத்துவம் பார்த்து ஒவ்வொரு நாளும் மரணம் இல்லாத
உங்கள் ஊர் அரசு/தனியார் பெரிய மருத்துவமனைகளை காண்பிக்க முடியுமா??
கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், நேர்மையான ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சித்த வைத்தியம் பார்த்து இறந்தவர்களை கணக்கு எடுக்கவேண்டும்.
அதே போல் அலோபதி ஆங்கில மருத்துவம் பார்த்து கடந்த
50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிகழ்ந்த மரணங்களை கணக்கு எடுக்கவேண்டும்.
அப்புறம் தெரியும் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் #கோரமுகம்.
இதுவரை அலோபதி ஆங்கில மருத்துவத்தால் முழுவதும் குணப்படுத்திய அல்லது
இனி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு வியாதியைச் சொல்ல முடியுமா??
ஒரு சித்த வைத்தியரிடம் வந்து இந்த கசாயத்தை குடித்தால் பக்க விளைவு வருமா என்று கேட்கும் தைரியமும், ஆம்பளைத்தனமும், எந்த ஆங்கில மருத்துவரிடமும் கேட்கத்துணிவு வருமா??
ஏன் அங்கே கேள்விகேட்க ஆண்மை வருவதில்லை??
முதலில் நாம் திருந்துவோம்.
குவாட்டருக்கும், பிரியாணிக்கும், 500ரூ பணத்துக்கும், நம் மதிப்பில்லா வாக்கை விற்காமல், நல்ல ஆட்சியைத் தேர்ந்தெடுப்போம்.
அடுத்து நம் அனைத்து வியாதிகளுக்கும் சித்தவைத்தியத்தை நாடிச்சென்றால் என்ன கெட்டுவிடும்??
குறைந்த செலவில் அனைவரும் நலமோடு இருப்போம் தானே.
அலோபதி மருத்துவத்தை விபத்து நேரத்தில் மட்டும் ஊறுகாயைப் போல பயன்படுத்திக் கொண்டு மற்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சித்த வைத்தியம் பார்க்க ஆரம்பித்தால் நம்மை யார் தடுக்க முடியும்??
நம் ஆரோக்கியம் நம் கையில்.
நாமே சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்வது மாதிரி நாமே அவர்களிடம் காசையும் கொடுத்து வேதனையையும் வாங்கி ஏன் சாக வேண்டும்??
நன்றாக யோசியுங்கள்.
2,000ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சித்த வைத்தியத்தை தான் இனி பார்ப்போம் என்றால், இன்று அலோபதி மருத்துவமனையாக இருக்கும்
அனைத்து மருத்துவமனைகளும் 6வருடத்தில் சித்த மருத்துவமனையாக தானாக மாறிவிடும்.
எப்படி என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் செக்குல ஆட்டின எண்ணெய் கிடைக்காது.
ஆனால் இன்றைக்கு ஊர் ஊருக்கு செக்கு இருக்கு, இயற்கை முறையில் ஆட்டிய எண்ணெய் கிடைக்குது.
அதேபோல் நாம் சித்த வைத்தியத்தை நாடினால் மட்டுமே, ஊர் முழுக்க உள்ள மல்டி ஷஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், இனி சித்த மருத்துவமனைகளாக மாறிவிடும் சூழல் அமையும்.
இல்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாட்டுக்கு பிணவரவு அதிகமாகிவிடும். அவ்வளவுதான்.
முடிவு உங்கள் கைகளில்!!
பாடும் நிலா பாலு மற்றும் முன்னாள் முதல்வர் கதிகள்
நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடமாக இருக்கட்டும்.
இனி இப்படி ஒரு சாவு
எவர் வீட்டிலும் நிகழாமல் இருப்பது நம் கையில்.
இனி நாம் என்ன செய்யப் போகிறோம்.?
( ஒரு மரபுவழி #தமிழ்மருத்துவர் மனக் குமுறல் )
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
