வக்கீலு🕴️ Profile picture
Student of Law👨‍⚖️ | Legum baccalaureus | 21 | #Dsf_chennai | மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!

Apr 9, 2021, 7 tweets

#வாரிசுகள்

"அவர்கள் ஊழல்வாதிகள்தான் ; குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வருபவர்கள்தான், நாத்திகர்தான்; ஆனால், என்ன செய்ய? வேறு மாற்று இல்லையே " என்று ஒவ்வொரு முறை வாக்களித்தபின் "உங்களை நீங்களே தேற்றிக்கொண்டிருக்கீறீர்கள் "-இவ்வாறு வாக்காளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல்

செய்து இருக்கிறார் "துக்ளக்"கில் மாலன் என்ற பூணூலார்.

முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை பார்ப்பனர்களுக்கு கிடையவே கிடையாது.

மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் , நாங்கள் மட்டுமே தான் துவிஜாதியினர்- இருபிறப்பாளர்கள் என்று அறிவிக்கும் பூணூலை அணிந்து கொள்வோர் யாராக

இருந்தாலும் பார்ப்பன அல்லாதவர்களுக்கு அறிவுரை கூறவோ வழிக்காட்டவோ யோக்கியதை கிடையாது.

சங்கர மடம் என்ற குறிப்பிட்ட பார்ப்பனர்கள் தான் சங்காரச்சாரியாராக வர முடியும் என்பதை வரிந்துக் கட்டிக் கொண்டு பேசும்-எழுதும் கூட்டத்துக்கு அரசியல் வாரிசு பத்தி பேச கிஞ்சிற்கும் உரிமை கிடையாது.

கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் தான் வர முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று கூக்குரல் போடும் கூட்டம் குடும்ப அரசியல் குறித்துப் பேனா நகர்த்த எந்த வகையிலும் உரிமை படைத்தது அல்ல.

கிரிக்கெட்டில் இப்பொழுது சாதனை படைத்த இளைஞர்கள் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் ;

வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் அல்ல என்று எழுதுகிறார்கள்.

ஜீவா என்ற திரைப்படம் வந்ததே நினைவு இருக்கிறதா? முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப் பார்த்து ஆட்டத்தில் இடம் கொடுப்பது குறித்து முகரையில் அறைவது போன்ற காட்சி இடம் பிடித்ததே - மறந்து போயிற்றா?

கிரிக்கெட் என்றாலே அக்ரகாரவாசிக்கு உரியது என்ற நிலைப்பற்றி மாலன்கள் சிந்திக்கட்டும்.முதலில் மற்றவர்களை சமமானவர்கள் என்ற மதிக்கும் வகையில் பூணூலை அறுத்து எறிந்து விட்டு போனா பிடிக்கட்டும்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling