Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

May 1, 2021, 5 tweets

வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!

தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள்.
m.facebook.com/story.php?stor…

மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)

நனை - நனைந்த ஈரம் போல இணரில் தோன்றும் பருவம்.

முகை - மொக்கு விடுவதற்கு முந்தைய பருவம்.

m.facebook.com/story.php?stor…

மொழி என்பது-3
மொக்குள் -- மொக்கு விட்ட பருவம் - "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் மாதர் நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு" - திருக்குறள் 1274

அரும்பு - மொக்குள் அரும்பாகிய பருவம் - "காலை அரும்பிப் பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந் நோய்" - திருக்குறள் 1227

மொழி என்பது-4
மொட்டு - அரும்பியது மொட்டாகிய பருவம்

போது - மொட்டு விரியும் பருவம்

மலர் - விரிந்த மலரின் இளம் பருவம்

பூ - விரிந்த பூவின் நலப் பருவம்

பொம்மல் - விரிந்த பூ மலர்ந்து பொம்மி (முதிர்ந்து) நிற்கும் பருவம்

வீ - இணரிலிருந்து விழவிருக்கும் பருவம்

மொழி என்பது-5

செம்மல் - இணரிலிருந்து உதிர்ந்து நிலத்தில் கிடக்கும் பருவம் - "உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்" - சிலப்பதிகாரம் - காடு காண் காதை

நன்றி.

m.facebook.com/story.php?stor…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling