Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!
P.T.T.T Profile picture தேவராஜ் Profile picture அன்புரத்தினம்..ANBU RATHINAM. . Profile picture 3 subscribed
Nov 1, 2021 4 tweets 5 min read
வணக்கம்.
ஈழத்தின் நெடுங்கேணி பகுதியில் புராதன சிவன் ஆலயம் கண்டுபிடிப்பு!நெடுங்கேணியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் ஒரு தனியார் காணியில் பாண்டியர் காலத்துக்குரிய ஆவுடையார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

facebook.com/11087461437175…
facebook.com/11087461437175… ImageImageImageImage ஈழத்தின்-2
அதனுடைய புகைப்படங்களை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களுக்கு அனுப்பிய பொழது, அவர் அதனை பாண்டியர் காலத்துக்குரியது என உறுதிப்படுத்தினார்.

இதில் கவலைக்குரிய விடையம் என்னவெனில் அக்காலத்தில் சிவ வழிபாட்டுத் தளம் இன்று மாட்டு பட்டியாக மாறியதுதான். ImageImageImageImage
Jun 16, 2021 4 tweets 4 min read
வணக்கம்.
#அறத்தின்_மண்டல்!

படையோடு படை மோதி அழிந்த பின்னர் இரு அரசர்களும் தனித்து மோதிக்கொள்ளும் போருக்கு #அறத்தின்_மண்டல் என்று பெயர். குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருவிறற்கிள்ளி ஆகிய இரு அரசர்களும் இவ்வாறு அறத்தின் மண்டிப் போரிட்டுப் போர்க்களத்திலேயே மாண்டனர். ImageImageImageImage அறத்தின் மண்டல்-2
நம் முன்னோர்கள்(சங்ககாலம்) முதல்இன்றுவரை(ஈழப்போர்வரை)அறத்தின்வழியே போராடி வீழந்ததார்கள் !!ஆனால்,துரோகத்தால் வீழ்ந்தார்கள்!!

m.facebook.com/story.php?stor… ImageImageImage
Jun 15, 2021 11 tweets 7 min read
வணக்கம்.

உலகின் பழமையான மொழி உண்மையில் தமிழா அல்லது சமஸ்கிருதமா?

சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி இந்த மனித சமுதாயத்தில் நிகழ்கிறது அப்பொழுது தான் மனிதன் மொழியை கண்டுபிடிக்க ஆரம்பிக்கின்றான்!

m.facebook.com/story.php?stor… ImageImageImageImage உலகின்-2

ஒரு மொழி எப்படி தோன்றிறுக்கும் விலங்குகள் , மற்ற உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் மொழி உண்டு . ஒரு குரங்கால் தன் குரங்கு கூட்டத்திற்கு சிங்கம் வருகிறது என்று எச்சரிக்கை செய்ய முடியும் ஆனால் இதே சிங்கம் இந்த வழியா இவ்வளவு தூரத்தில் சிங்கம் வருகிறது என்று சொல்ல முடியாது. ImageImage
May 1, 2021 5 tweets 6 min read
வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!

தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள்.
m.facebook.com/story.php?stor… மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)

நனை - நனைந்த ஈரம் போல இணரில் தோன்றும் பருவம்.

முகை - மொக்கு விடுவதற்கு முந்தைய பருவம்.

m.facebook.com/story.php?stor…
Apr 30, 2021 8 tweets 8 min read
வணக்கம்.
ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.பகுதி-1

m.facebook.com/story.php?stor…

dailythanthi.com/amp/News/Distr…

hindutamil.in/news/tamilnadu… கொற்கையில் சங்கு-2
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரல் அருகே கொற்கையிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
Apr 30, 2021 12 tweets 7 min read
வணக்கம்.
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?என என் நண்பரின் கேள்விற்கு.!?

படத்தில்,சுழற்சி முறை!

m.facebook.com/story.php?stor… சூரியனைச் சுற்றி-2
இருக்கிறது !தமிழ்களின் பொற்கால வாழ்வை ஔியேற்ற அறிகுறியாக நிகழ்வாக சோழர்களின் காலத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அனைத்துகோள்களும் 1543 ஆண்டுகளுக்கு ஒருமுறை , ஒரே நேர்கோட்டில் வந்துகொண்டுதான் இருக்கின்றன .

m.facebook.com/story.php?stor…
Apr 11, 2021 10 tweets 7 min read
வணக்கம்.
1000 வருடங்களுக்கு முன்பே 2020-21 வருடத்தின் நிலையை கணித்த தமிழன்.

சர்வாரி வருடத்தில் சாதிகள் பதினேட்டும் தீராத நோயினால் திரிவார்கள். மழையில்லாமல் பூமி விளையாது.புத்திரர்களும் மற்றவர்களும் எமனின்றி சாவார்கள்.
-இடைக்காடர் சித்தர்.
காலம்:சங்ககாலம்.
m.facebook.com/story.php?stor… 1000 வருடங்களுக்கு-2
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறந்திருந்தது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,
Dec 5, 2020 12 tweets 11 min read
வணக்கம்.
மனதளவில் நொறுங்கி போய் செயலிழக்கும்போது எவ்வாறு மீண்டு வருவது?!
ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது.பகுதி-1/10

wix.to/pcBmDHE?ref=2_…

m.facebook.com/story.php?stor… மனதளவில்-2/10
எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்!
இந்த 400 மில்லியன் விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது.
Dec 4, 2020 8 tweets 3 min read
வணக்கம்
வரலாற்றில் முதல் முறையாக எந்த இராணுவ மூலோபாயம் அல்லது ஆயுதத்தை எந்த நாடு பயன்படுத்தியது? எந்தப் போரில்?
வரலாறு என்பதே 5000 வருடங்குக்கு முன்பாகத்தான் தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான்,வரலாறும் உண்டு. ஆனால் அதற்கான அத்தாட்சிகள் குறைவு.பகுதி-1/7 வரலாற்றில்-2/7
எழுதப்பட்ட வரலாற்றில் சீனாவில் சன் ஜு அல்லது சன் ஜி என அழைக்கப்பட்ட மிகைத் திறமை வாய்ந்த ராணுவ தளபதி இருந்தார்.அவர் 544 - 496 BC வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அவர் போர்க் கலை என்றொரு மிகச்சிறந்த போர்த் இராணுவ மூலோபாயப் புத்தகம் எழுதியுள்ளார்.
wix.to/UMD0DHA?ref=2_…
Nov 23, 2020 11 tweets 10 min read
வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7) கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
Nov 22, 2020 5 tweets 5 min read
பழந்தமிழரின் சிறந்த தொழில் நுட்பம்!
எனக்கு ஆச்சர்யம் தர கூடியது "வெண்கல சிலை " செய்யும் தொழில் நுட்பம் இதனை"Lost Wax Technique என்பர்
இது சிந்து சமவெளி நாகரிகம் தொற்றே நம்மிடம் இன்றளவும் இருக்கிறது. படத்தில் இருப்பது சிந்து சமவெளி காலத்து சிலை!(பெரிதுபடுத்தி பார்க்கவும்)பகுதி 1/5 பழந்தமிழரின்-2/5
கும்பகோணத்தில் செய்யப்படும் சிலைகள் யாவுமே இந்த முறையை சேர்ந்தவை தான்.
இதனை செய்யும் முறை
1. மெழுகில் (மரம் அல்லது தேன் கூடு ) தேவையான சிற்பத்தை செய்ய வேண்டும்
2. பின்னர் அந்த சிற்பத்தை சுற்றி களிமண் கொண்டு கெட்டியாக பூச வேண்டும் இது காய 2 மாதங்கள் கூட ஆகும்.
Nov 21, 2020 8 tweets 8 min read
வணக்கம்.
ஒரிசா கடற்கரை ஓரங்களில் இன்னனும் தமிழ் பாரம்பரியமாக பேசப்படுகிறது.ஊர்ப் பெரியவர்கள் தாங்கள் தாமிரபரணி(இலங்கை)வந்ததாக இன்னமும் கூறிக் கொள்கிறார்கள்!இதற்கு ஏதும் வரலாற்று ஆதாரம் உள்ளதா அண்ணா என ஒரு சகோதரரின் கேள்வி?உண்மைதான் என் பதில்!இதோ(பகுதி-1/7)
wix.to/4UC7Bzc?ref=2_… ஒரிசா கடற்கரை-2/7
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு.அவனுடைய மகனே தந்தையினால் 700 பேர்களுடன் துரத்தப்பட்டு இலங்கை வந்தடைகிறான்.அங்கு...

wix.to/4UC7Bzc?ref=2_…
Nov 20, 2020 7 tweets 7 min read
வணக்கம்.
அரசமரம் எப்படி மரங்களின் அரசனானது?எங்கிருந்து வந்தது?அரசமரத்தின் கதை என்ன?அரச மரம் மரங்களின் அரசனுமில்லை! அரச மரத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்புமில்லை!ஏனெனில் அதன் உண்மையான,தொன்மையான பெயர் அரை மரம் ஆகும்.பார்க்க:YouTube-ல் அரச மரத்தின் இரைச்சல்.
அரச மரம்-2/5
' அரைமரவியற்றே' - (தொல்காப்பியம்).
அரைமரம் என்றே - அரச மரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

அரை மரம் என்பதே மருவி தற்காலத்தில் அரச மரம் ஆகியுள்ளது.

அரை > அரைசு > அரசு.

அரை மரம் என்ற பெயர்த் தோற்றம் குறித்து விளங்குவோம்.

wix.to/nUDdBzU?ref=2_… ImageImageImageImage
Nov 9, 2020 6 tweets 7 min read
வணக்கம்
இராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வெற்றியுடன் திருப்பியதை,இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பு செய்து வெற்றி வீரத்திருளாக தீப ஔியாக(தீபாவளி) கொண்டாடிய திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு வர்ணம் பூசி அழிக்கப்பட்டது!இராஜேந்திர சோழன் வெற்றித் திருநாளே தீபாவளி!1/6 இராஜேந்திர சோழன்-2/6
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது நாம் அறிந்தததே!
wix.to/40BCByY?ref=2_…
Nov 9, 2020 7 tweets 5 min read
வணக்கம்.
'நன்றி" என்ற வார்த்தைக்கு சிறந்த தமிழ் பதில் வார்த்தைகள் எவை? வள்ளுவரே உதவிக்கு நன்றியை எதிர்பார்ப்பது வேண்டாதது என்று கூறி விட்டார்?பின் எதற்கு பதில் வார்த்தையை கூறுவது!?

நன்றி எனும் சொல்லிற்கான சிறந்த தமிழ் பதில் வார்த்தை நம் முன்னோர்கள் பயனபடுத்தவில்லை! 1/5 நன்றி என்ற-2/5
தலையை சற்று குனிந்து மரியாதை செலுத்தினார்கள்!தற்போதுள்ளவர்கள் செய்வார்களா?
ஆனால் ஒருவர் நன்றி கூறினால் ,'இருக்கட்டும்' , 'நன்றி எல்லாம் சொல்லாதீங்க' என்று கூற நம் பண்பாடு கற்றுத் தந்திருக்கிறதே!
வணக்கம் என்று சொன்னால் உதவி செய்தவருக்கு சற்று அந்நியமாக உணர்வோம்.
Nov 8, 2020 15 tweets 15 min read
வணக்கம்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்!அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது.பகுதி-1/15
wix.to/Q0AHByQ?ref=2_… இராேஐந்திர சோழனின்-2/15
வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது.
Nov 7, 2020 6 tweets 6 min read
மாவீீரர்களின் மாதம்,கார்த்திகை மாதம்!

ஈழத்தில் புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)!
எண்ணிக்கை: கீழே நீங்கள் பார்க்கும் வகையைச் சேர்ந்த கவசவூர்தியகள் புலிகளிடம் மொத்தம் 4 இருந்தன.பகுதி-1/5

wix.to/I0DxByI?ref=2_… மாவீரரர்களின்-2/5
இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்த்தைக் கொண்டிருந்தன.. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது..
கீழே,இலங்கை இராணுவத்தால் வாகனத்தின் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

wix.to/I0DxByI?ref=2_…
Nov 6, 2020 16 tweets 16 min read
வணக்கம்.
சீமான் சொல்வது போல் ராஜராஜனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததா?

ஆமாம் … முற்றிலும் உண்மை !

தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துகொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தை திரட்டினர்.பகுதி-1/15 சீமான் சொல்வது-2/15
ஆனால் இங்கே மக்களுக்கும் அரசுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக ராணுவத்தை மாற்றினார் ராஜராஜன், மெள்ள மெள்ள போர்ப்படையை வலுப்படுத்தினார். நெஞ்சு முழுக்க கனவுகள்.தேசம் முழுக்க சோழர் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமென்றால் அது போர்ப்படையின் திறனால்..
Nov 6, 2020 10 tweets 8 min read
வணக்கம்.
உலகில் நடந்த நகைச்சுவையான போர்!போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.வீர வரலாற்றில் நாம் மறந்த பழமொழிகளில் இதுவும் ஒன்று!!பகுதி-1/10

wix.to/AUBQByE?ref=2_… உலகில் நடந்த-2/10
யுத்தம் என்றாலே உயிரிழப்பு அல்லது உறுப்பு இழப்பு போன்றவை நடக்க வாய்ப்பு உண்டு என்பதால், அங்கு நகைச்சுவை என்பது போய்விடுகிறது.

உலகில் சாவு, வரி இவை இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நாம் நகைச்சுவையாக பார்க்க முடியும் - கிரேசி மோகன்.

wix.to/AUBQByE?ref=2_…
Nov 5, 2020 19 tweets 10 min read
வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10 சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.

இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
Nov 5, 2020 5 tweets 4 min read
வணக்கம்.
கரப்பான் பூச்சியின் பால் பசுவின் பாலை விட நான்கு மடங்கு சத்தானது என்பது உண்மையா?
கரப்பான் பால்...குடிச்சு பார் !
Diploptera p(f)unctata(பசிபிக் பீட்டில்-Pacific Beetle)வகை கரப்பான் பூச்சிகள் இந்தியா, மியான்மார், சீனா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் ஹவாய் தீவுகளில்-பகுதி-1/5 கரப்பான் பூச்சி-2/5
பரவலாக காணப்படுகின்றன.
இந்த இன வகை கரப்பான் பூச்சி, குஞ்சு பொரிக்க முட்டை இடாது. பாலூட்டிகளை போல தனது சந்ததிகளைப் பெற்றெடுக்க வல்லது

இவ்வகை கரப்பான், புரோட்டீன் படிகங்களைக் (crystals) கொண்ட ஒரு பொருளின் வடிவத்தில் பாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.