Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

May 16, 2022, 24 tweets

💖 #செந்தூரபூவே செந்தூர பூவே...

சுதந்திர இந்திய வரலாற்றில் மே மாதம் 16 ஆம் தேதியான இன்று மிக முக்கியமானதொரு நாள். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நந்நாளில் தான் #திரு_நரேந்திரமோதியின் தலைமையில், முதன் முதலில் தனிப்பெரும்பாண்மையுடன் இந்திய மத்திய அரசின் பொறுப்பை ஏற்றது.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் தலைமுறை தலைவர்.

முதல் தலைமுறை தலைவராக திரு.வாஜ்பாய் தலைமையில் அமைந்தது.

எத்தனையோ இடர்பாடுகள்...... எத்தெத்தனையோ எதிர்ப்புகள்..... இன்றுவரை சுணங்கவில்லை அவர். தலை தாழ்ந்து நின்ற இந்தியாவை பல துறைகளில் தலை நிமிர செய்தவர் இவர்.

அதில் மிக முக்கியமான ஒன்று நமது இந்திய ராணுவம்.
இந்த அவனியில் அதற்கு நிகர் எவருமே இல்லை. 1962 களிலேயே சீனாவை கதிகலங்க செய்தவர்கள் அவர்கள். மேஜர் ஷைத்தன் சிங் ஒருவர் போதும் நமது எல்லையில் உள்ள ராணுவத்தினரின் பெருமையை பறைசாற்ற....

இந்தியாவில் சீக்கியர்கள் இருக்கலாம், இஸ்லாமியர்கள் இருக்கலாம் கிருஸ்துவர்கள் இருக்கலாம் இந்துக்கள் இருக்கலாம் ஆனால் இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் மாத்திரமே இருக்க முடியும். இப்படி முழங்கியவர் தான் ஜெனரல் K M காரியப்பா.

இந்தியாவின் முதல் ஆர்மி மேஜர் ஜெனரல். #கொடந்தேரா_மாடப்பா_கரியப்பா.
நேற்று மே மாதம் 15 ஆம் தேதி இவரது நினைவு நாள்.
#சிம்மா என்கிற சிறப்பு பெயர் ராணுவ வட்டாரங்களில் இவருக்கு உண்டு. சொல்லும் செயலும் அதை ஒத்ததாகவே இருந்த காரணத்தால் இவருக்கு அந்த பெயர்.

இரண்டாம் உலகப் போரின் போதும், இந்திய பாகிஸ்தான் யுத்த காலக் கட்டத்திலும் இவரது தலைமையில் இந்திய ராணுவத்தினர் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்திய விடுதலை பெற்ற சமயத்தில் இந்திய ராணுவ தலைமையை ஏதேனும்

பிரிட்டிஷ் ராணுவ தளபதிக்கு கொடுப்போம் எனக் கூடி பேசிய நேருவின் வழிவந்தவர்கள்..... ஏன் அந்த பதவியினை நம் இந்தியர் ஒருவருக்கு கொடுத்தால் என்ன என்று கேட்டதற்கு அனுபவம் இல்லை அல்லவா என்று எகத்தாளமாக பதில் சொல்லி இருக்கிறார் நேரு அந்த சமயத்தில்.....

உடனேயே உங்களுக்கு கூடத்தான் பிரதமராக வழி நடத்திய முன் அனுபவம் இல்லை, அதனால் வேறு யாரையாவது அந்த பதவியில் அமர்ந்தலாமா என்கிற கேள்வி எழுப்பப்பட்ட பிறகே வழிக்கு வந்திருக்கிறார் அவர். மேற்படி தகவல்... பதிவு செய்யப்பட்ட ஆவணங்களாக இன்றும் காணக்கிடைக்கிறது.

இது என்ன பிரமாதம்....... எனும் சொல்லடவுக்கு ஏற்ப 1949 ஆம் ஆண்டு வரை அதாவது நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும்... இந்திய வரவு செலவு கணக்குகள் வரை...... நம் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்க படும் அத்தனையும்

His excellency...... என்று குறிப்பிட்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்து கொண்டு இருந்தார் தான் இந்த நேரு.

பிறகு எதற்கு சுதந்திரம்.????

1999 களில் மலை உச்சியில் அதாவது சியாச்சின் பனிமலையின் அந்த குளிர் கால இரவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றிட.....

நான் முன் செல்கிறேன் ஏற்றிவிட்டுத்தான் திரும்ப வருவேன், இல்லை என்றால் இந்திய கொடி போர்த்தப்பட்ட என் சடலம் வரும்..... இந்த இரண்டை தவிர வேறு ஒன்று நிகழ இங்கு வாய்ப்பே இல்லை என்று கர்ஜித்துவிட்டு தன் படையை வழிநடத்தி முன் சென்ற நம்மவர்களின் வீரம் தான்

#கார்கில்_லை வெற்றி கொண்டது. இது தான் நமது ராணுவம்.

இப்படி பட்ட வீரர்களை கொண்டிருக்கும் படை தான் நமது ராணுவம்......... அதனை மிகச் சரியாக மீள் கட்டமைப்பு செய்த பெருமை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியையே சாரும். அதன் வெளிப்பாடு தான் லடாக்கில்

இந்திய சீன எல்லை பிரச்சினையில் நம் வெற்றியாக அது பரிமளித்தது. உலகம் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து நின்ற தருணங்களில் ஒன்று அது.

இன்று வரை உலகம் கொண்டாடும் அற்புதமான ராணுவ நகர்வு அது. ராஜதந்திர நடவடிக்கையின் ஆகச் சிறந்த போர் தந்திர ஒத்திகை அது.

ஒரு நாடு போருக்கு செல்லாமல் போரில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பாடம் சொன்ன வரலாறு அது. இது நிச்சயம் நம் பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமானது.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் போர் மேகம் சூழ்ந்த சமயத்தில் பிரச்சினைக்குரிய ராணுவம் நிலை கொண்டுள்ள இடத்திற்கு அந்நாட்டின்

பிரதமரோ அல்லது அதிபரோ சென்றது இல்லை. அப்படி ஒரு வழக்கமே கிடையாது. ஆனால் இவர் சென்று ராணுவ வீரர்களின் மத்தியில் உரையாற்றி திரும்பியிருக்கிறார்.
இது எத்தகைய உத்வேகத்தை அங்கு நிலைக் கொண்டிருந்த ராணுவத்தினருக்கு தரும் என்பது வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

இது எத்தகையதொரு கௌரவம் அந்த ராணுவத்தினருக்கு.... என்பது மற்றவர்களுக்கு புரியாது. சம்பளத்திற்கு வேலை பார்க்கும் விஷயம் அல்ல ராணுவம். உங்களின் பின்னால் இந்த தேசம் இருக்கிறது. உங்களின் கைகளில் நம் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது.

நமது தேசத்தின் மானம் இருக்கிறது என்பதனை சொல்லாமல் சொல்லும் செயல் இது.

இதனால் தான்..... இத்தகையதொரு ஆத்ம சுத்தியுடனான உத்வேகத்தால் சீனாவை வெற்றிக்கொண்டது சாத்தியமானது. இத்தனைக்கும் இந்திய ராணுவத்தினர் 1962 ஆம் ஆண்டு போரின் போது கூட தோற்றதில்லை.ஆனாலும் கறை படிந்த வரலாற்றில்.....

இந்திய ராணுவத்தினரின் பல நாளைய புழுக்கம் மறைந்தது....... ஆறாத ரணமாக உறுத்திய வடு மறைந்தது. இது காசு பணத்தால் கிடைக்கக்கூடிய விஷயங்கள் அல்ல.....

அதற்கு காரணம் இவர்.

பலருக்கும் இது ஊடகங்களில் வரும் செய்திக்காக செய்த விஷயம் என்பார்கள்..... என்றார்கள்.

காரணம் கடந்த காலத்தில் அவர்கள் கடந்து வந்த பாதை அப்படி பட்டது. செய்திகளில் மாத்திரம் வாழ்ந்த அரசை கண்ட பலன் இது.

ஆனால்........ இது அத்தகையது அன்று. நம் நரேந்திர மோதிக்கும் கடந்த கால சம்பவம் ஒன்று இருக்கிறது.

இந்திய காஷ்மீர் பகுதியில் சுதந்திர பொன் விழாவினை ஒட்டி ஒருத்தரும்

இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றிட கூடாது. மீறினால்....... என்று எச்சரிக்கை செய்து இருந்தார்கள் காஷ்மீர் தீவிரவாதிகள். எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் இன்றி இருவர் மட்டுமே செல்கிறார்கள். அத்தனைக்கும் மத்தியில் இந்திய தேசிய கொடியை

இருவர் மாத்திரம் அந்த கம்பத்தில் கட்டி ஏற்றி மரியாதை செலுத்தி விட்டு திரும்புகிறார்கள்.அந்த இருவரில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி, மற்றொருவர் தான் நம்மவர்...... தாமோதரதாஸ் நரேந்திர மோடி.

நாட்டை நேசிக்க வேண்டும், எவ்விதமென்றால் அதனை நமது சுவாசம் போல் சுவாசிக்க வேண்டும் என்று சொன்னவர் இந்த மோடி.

இந்த ஒரு சொல்லுக்காகவே நாம் அவரை ஆதரிக்கின்றோம், என்ன நடந்தாலும்,எது வரினும் நாம் நிச்சயமாக அவர் பக்கமே நிற்போம்.

நாம் அவரை ஆதரிப்பது நமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் அல்ல..... அது தேசத்தின் மீதான அபிமானம் கொண்டவர்களின் சாஸ்வதமான மரணசாஸனம் .
ஓர் வகையில் இது நம் செந்தூர சொந்தம்.

இம்மாதம் இறுதி வாக்கில் நம் தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தாராளமாக வாழ்த்தி வரவேற்போம் அவரை.....

பாரதத்தை நேசிக்கும் அனைவருக்கும் இதை பகிர்வோம்

வாழ்க பாரதம்....
ஓங்குக அதன் புகழ்.💞

💓 ஜெய் ஹிந்த்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling