ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Aug 12, 2022, 7 tweets

#தமிழ்த்தாயின்_தலைமகன்
பகுதி-1:-

திரூவாரூர் மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தாயின் கருக்குவளையில் பிறந்தவர் தான் தற்போதைய நவீன தமிழகத்தின் சிற்பியும், உலகத் தமிழினத் தலைவருமான தலைவர் கலைஞர் அவர்கள்..அவர் கண்ட தமிழகம் சாதியற்ற சமூகம், சுகாதாரமான சமூகம், எழுத்தறிவு பெற்ற சமூகம்,

உள்கட்டமைப்புடனான சமூகம், பொருளாதார உயர்வுகொண்ட சமூகம், என்று அவரின் உயர்ரக சிறப்பை வானளவு அளந்தாலும் அதில் ஒரு சிறு துரும்பு தான்.. 80 ஆண்டுகால பொது வாழ்வில் அவர் தாண்டிய உயரத்தை இது வரையிலும் சரி, இனிமேலும் சரி எந்த கொம்பனாலும் தாண்ட முடியாது.. தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்கு

உழைத்து அதிகார வர்கத்தினரிடம் அவப்பெயரை மட்டுமே சம்பாதித்த ஒரு சரித்திரப் பெயர் தான் "கருணாநிதி",தாய் பாசம் கொண்ட தமிழ்த்தாயின் தவப்புதல்வன். கொஞ்சும் தமிழில் இவர் கவி பாடினால் தமிழ் இவரிடம் தவழ்ந்தோடும், அழகு தமிழில் இவர் கவிபாடினால் தமிழ் இவரிடப் அசைந்தாடும், எப்பேர்பட்ட தமிழ்

கவிதையும் இவரிடம் சென்றால் காணமல் போகும்.தான் எடுத்துக் கொண்ட பயணத்தில் பார்க்காத துரோகிகளே இல்லை, சேர்க்காத பழிச்சொற்களே இல்லை, கேட்காத வசைமொழியே இல்லை, பேசாத இழி வாய்களே இல்லை.. இருப்பினும் கொண்ட கொள்கை பெரியாரின் கொள்கை, அண்ணாவின் கொள்கை, நீதியின் கொள்கை என்ற உலகின் தத்துவத்தை

உற்றுடன் ஏற்றுக்கொண்ட உலகநாதன்.. செய்த சாதனையை எடுத்துரைக்க இன்னொரு ஜென்மம் வேண்டும்..தமிழரின் வரலாற்றை எழுதும் போது இவர் பெயரில்லாமல் நிறைவு பெறாது. அப்படி, இவர் பெயரை நீக்கி எழுதினால் நிச்சயம் அது தமிழர் வரலாறாக இருக்க முடியாது.. இன்று வரை எதிரிகள் இவரின் மீது எடுத்தெறிவது ஈழம்

என்ற கற்பனையும், சர்க்காரியா கமிஷன் எனும் கட்டுக் கதையும் இதில் ஒன்றைக் கூட நிரூபிக்காத சில ஒட்டுண்ணிகள் இருக்கத்தானே செய்கின்றது..காலம் யார் மீதும் தன் முத்திரையை பதிக்காமல் செல்லாது,ஆனால் தலைவர் கலைஞர் என்ற முத்திரையை காலம் காலான்(எமன்) மீதும் பதித்துவிட்டச் சென்ற வரலாறு தான்

தலைவர் கலைஞரின் வரலாறு. தன் சிந்தனையின் மூலம் பலரின் முன்னேற்றத்திற்கு விதைப் போட்ட விநோதன் தான் அய்யன் கலைஞர் அவர்கள். எப்போதும் ஒருவனின் வரலாறு அவனின் செயலால் நிறைவுப் பெறாது, அவன் கொண்ட கொள்கையினால் மட்டுமே நிறைவு பெறும்!!
- சூரியன் உதிக்கும்🖤❤️🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling