திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் Profile picture
என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ! ஐயம் வேண்டாம்! ~ பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

Nov 4, 2022, 7 tweets

#RajaRajaCholan - திருமுறை கண்ட சோழன்!

உலகிலேயே மிகப்பெரிய யானைப்படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் - இப்படி பல சிறப்புக்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட

ராஜராஜசோழனின் தலையாய சிறப்பு என்ன தெரியுமா?!!!

இன்று நாம் படித்து உருகும் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் ராஜ ராஜ சோழனே!

ராஜ ராஜ சோழன் என்கிற மன்னன் ஒருவர் இல்லையென்றால் சைவத் திருமுறைகளே நமக்கு கிடைத்திருக்காது!

திருமுறைகண்ட புராணம்!

திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் உதவியோடு தக்கப்பண்களுடன் திருமுறைகளை மீட்ட ராஜ ராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும்!

நம்பியாண்டார் நம்பி கிடைத்த தேவாரத்
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும்

செய்தியாகும்.

முதல் 7 திருமுறைகளாகத் தேவாரத்தைத் தொகுத்தபின்
அவரால் அறிந்து கொள்ளப் பெற்ற பாடல்களை மேலும்
தொகுக்க ஆரம்பித்தார். அவ்வாறு தொகுக்க முனைந்த
நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவையே பதினோராம்
திருமுறை வரை உள்ள பாடல்கள். இவற்றைத் தொகுத்த காலம்
கி.பி. 9ஆம் நூற்றாண்டின்

இறுதி அல்லது பத்தாம்
நூற்றாண்டின் முற்பகுதியாகும். அதன்பின் பெரியபுராணம்
சேர்க்கப்பட்டுத் திருமுறைகள் பன்னிரண்டு என்ற
எண்ணிக்கையைப் பெற்றன!

உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த
திருமுறைகண்ட புராணம்!

tamilvu.org/ta/library-l41…

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling