2019ல் சோனி லைவில் வெளியான இரு துருவம் வெப் சீரிஸின் அடுத்த சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது.
முதல் சீஸனில், இன்ஸ்பெக்டர் விக்டரின் (நந்தா) மனைவி கீதா (அபிராமி) காணாமல் போய் 6 மாதமாகிறது. ஒரே மகள். இந்த பிரச்னையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. (1/8)
மனைவியை அவரே கொலை செய்துவிட்டு காணாமல்போனதாக நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நகரில் தொடர் கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. தொடர் கொலைகாரன் யார், அவன் ஏன் செய்கிறான், அவனை என்ன செய்தார்கள் என்பதோடு முதல் சீஸன் முடிவுக்கு வந்தது. (2/8)
முதல் சீஸனில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும்கூட, மேலோட்டமாகப் பார்க்கையில் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது.
இந்த இரண்டாவது சீஸனும் முதல் சீஸனைப் போலவேதான் ஆரம்பிக்கிறது. தொடர் கொலைகள் நடக்கின்றன. இந்த முறை காவல்துறையினர் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். (3/8)
விக்டரின் மனைவி இன்னும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் திலக் (லிங்கா) சரியாக விசாரிக்கவில்லை என்பதால், விக்டரை இந்த வழக்கில் ஈடுபடுத்துகிறார் ஆணையர்.
விக்டரும் உதவி ஆய்வாளர் ஒருவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். (4/8)
ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கைப் பேச்சாளர் லங்கேஸ்வரன் (லங்கேஸ்வரன்) மீது சந்தேகம் வருகிறது. உண்மையிலேயே இந்த தொடர் கொலைகளைச் செய்தது யார்? முந்தைய சீஸனில் நடந்த கொலைகளைச் செய்த சீரியல் கில்லரை பிடித்த பிறகும் அதே பாணியில் கொலைகள் நடப்பது எப்படி என்பதுதான் இந்த சீஸனின் கதை. (5/8)
மொத்தம் பத்து எபிசோட்கள். ஆறாவது எபிசோடிலேயே யார் கொலைகாரன் என்பது தெரிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, கொலைகாரனும் விக்டரும் அடுத்த நாலு எபிசோட்களுக்கு தத்துவம் பேசியே நம்மைக் கொல்கிறார்கள்.
முந்தைய சீஸனே சற்று சுமார்தான். இந்த சீஸன் அதைவிட சுமார். (6/8)
சில தருணங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான காட்சிகள் படு அமெச்சூர்தனமாக படமாக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கதைக்கு 10 எபிசோட் என்பது ரொம்பவே அதிகம்.
முதல் சீஸனில் எப்படி ஒரே மாதிரியான முகத்தோடு வந்தாரோ, அதே மாதிரிதான் இந்த சீஸனிலும் திரிகிறார் நந்தா. (7/8)
லங்கேஸ்வரனாக வரும் பிரசன்னாவின் நடிப்பு மட்டும் பரவாயில்லை.
இந்த சீஸனிலும் கதை முடியவில்லை. ஆகவே 3வது சீஸன் வரும் போலிருக்கிறது. நிஜமான 'சீரியல் கில்லர்' இவர்கள்தான் போலிருக்கிறது.
எந்த தொடர் வந்தாலும் 'நான்தான் இருக்கேன்ல' என்று பார்த்தே தீருபவர்கள் இதையும் பார்க்கலாம். (8/8)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.