அத்திக்கடவு-அவினாசி திட்டம் காரமடை, அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளுக்கு நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம்.
கல்லணையை கட்டிய ஆர்தர் காட்டன் கோயம்புத்துரின் வறண்ட பகுதிகள் பலன் அடைய 1836யில் போட்ட திட்டம் தற்போது அத்திக்கடவு-அவினாசி திட்டம் என அழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் இந்த திட்டம் மாற்றம் அடைந்தது.
1. பில்லூரில் வாய்க்கால்கள் மூலம் நீர் கொண்டுவருவது
2. பில்லூரில் இருந்து பைலைன் மூலம் நீர் கொண்டுவருவது
3. காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து நீர் கொண்டுவருவது (டெட்பாடி திட்டம்)
அத்திக்கடவு-அவினாசி திட்டம்-1 பில்லூர் அணையில் 5 கிமி Upstream side பவானி ஆற்றிலிருந்து 2 TMC நீரை 2 கால்வாய்கள் (ஆவினாசி & பெருந்துறை) மூலம் கொண்டு வர வேண்டும்.
இதற்காக 6.5 கிமீ சுரங்கம், மெயின் கால்வாய் 35.2 கிமீ, அவினாசி கிளை கால்வாய் 21.6 கிமீ, பெருந்துறை கிளை கால்வாய் 73 கிமீ கணவுக்ககரை கிளை கால்வாய் 5.2 கிமீ அமைக்க வேண்டும்.
கால்வாய்கள் மூலம் வரும் நீர் 71 ஏரிகள் & 538 குளங்களில் நிரப்பப்பட்டு விவசாயம் & குடி நீர் & நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கு பயன்படுத்தப்படும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்-1 நிரைவேற்ற முடியாமல் போனதற்கு காரணம். பணம் பிரச்சனை அல்ல. 2016 யில் திட்ட மதிப்பீடு 3500 கோடி. 2019 யில் தமிழக அரசு பொங்கல் பரிசாக கொடுத்த தொகை.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்-1 தோல்விக்கு காரணம் கால்வாய்கள் அமைக்க 2100 ஏக்கர் பட்டா நிலம் 110 ஏக்கர் புறம்போக்கு, 25 ஏக்கார் காப்புகாடு நிலம் கையகப்படுத்தனும். நிர் தேக்க குளங்கள் & ஏரிகளை தேடிபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றனும்
கொங்கு பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவது ஆட்சிக்கே உலைவைக்கும் என்பதால் யாரும் அத்திக்கடவு-அவினாசி திட்டம்-1 செயல்படுத்தவில்லை.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்-2 பில்லூரில் இருந்து பைலைன் மூலம் நீர் கொண்டுவந்து குளம் & குட்டைகளை நிரப்ப வேண்டும். இது நிலம் கொடுக்க மனம் இல்லாதவர்கள் போட்ட திட்டம். மதிப்பீடு 950 கோடி
அத்திக்கடவு-அவினாசி திட்டம்-3: 1780 கோடி செலவில் டெட்பாடி அரசின் திட்டம். காலிங்கராயன் கால்வாயில் இருந்து குழாய்கள் மூலம் அவினாசி பகுதிகளுக்கு நீர் கொண்டுவரப்படும்.
காலிங்கராயன் கால்வாய் பவானி & நொய்யல் ஆறுகளை இணைக்கிறது. இதற்கு பவானியில் இருந்து நீர் வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம் பில்லூரில் பவானியின் உபரி நீரை பயன்படுத்துவது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 படி பவானி சாகரின் நீரை பயன் படுத்தினால் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் நோக்கம் முறியடிக்கப்படும். ஏன் எனில் பவானி அணையில் உபரி நீர் இல்லை.
பவானி அணையின் நீர் பங்கீடு:
கீழ் பவானி கால்வாய்
தட்டப்பள்ளி, அரக்கன்கோட்டைகால்வாய்கள்
காளிங்கராயன் கால்வாய்
இந்த மூன்று பாசனப் பகுதிகளையும் சேர்த்தால் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
3 லட்சம் ஏக்கர் பவானி பாசனப்பகுதிக்கு தேவையான நீர் 60 TMC. பவானி அணையின் கொள்ளளவு 32 TMC. வருடத்திற்கு 2 முறை பவானி அணை நிரம்பினால் மட்டுமே இவை பாசன வசதி பெறும். பவானி அணை வருடததிற்கு ஒரு முறை நிரம்புவதே அதிசயம்.
காவேரி நடுவர்மன்ற தீர்ப்பின் படி தமிழகம் 6 TMC நீரை பவானியில் இருந்து கேரளாக்கு கொடுக்க வேண்டும்.
தட்டப்பள்ளி & கீழ்பவானி விவசாயிகள் தண்ணீ பிரச்சனையில் தமிழ்நாடு & கர்நாடகாவை விட கேவலமாக அடிச்சிட்டு இருக்காங்க.
ஏற்கனவே நீர் பற்றாக்குறையுள்ள பவானி பேசினில் இருந்து 2 TMC நீரை அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 க்கு எடுத்தால் பவானி & பாசனப்பகுதி இறந்து விடும்.
டெட்பாடியின் அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 யின் படி காளிங்கராயன் கால்வாயில் இருந்து குழாய்கள் மூலம் மோட்டார் வைத்து நீரை பம்ப் பண்ண வேண்டும். நீரை பம்ப் செய்து அன்னுர், திருப்பூர், அவினாசி etc., கொண்டு வரவேண்டும். மின்சார செலவால் திட்டத்தின் Operational cost கூடும்.
காளிங்கராயன் கால்வாயின் கொள்ளளவு 550 கன அடி. இதில் இருந்து எப்படி 2 TMC நீரை அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 க்கு எடுக்க முடியும். காளிங்கராயன் கால்வாயின் 550 கன அடி நீர் இரண்டு நாளைக்கு போனால் அதன் அளவு 1 TMC.
காளிங்கராயன் கால்வாயின் இருந்து நீர் எடுப்பதால் காளிங்கராயன் கால்வாயை நம்பி விவசாயம் செய்யும் கொடுமுடி வரையிலான பசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
டெட்பாடியின் அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 in a nutshell
திருப்பூர், அவினாசி, பெருந்துறை பகுதிகளுக்கான கூட்டு குடி நீர் திட்டம்
விவசாயம் & நிலத்தடி நீர் செறிவுட்டல் முடியாது
இராட்சத மோட்டார்கள் மூலம் நீர் பம்ப் பண்ணப்படுவதால் operational cost அதிகம்
டெட்பாடியின் அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 in a nutshell
2 TMC நீரை கொண்டு வர முடியாது.
காலிங்கராயன் கால்வாயை நம்பியிருக்கும் விவசாயிகள் கடுமையாக எதிப்பார்கள்
அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 = பிறக்காமலே பிணமான திட்டம்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to 10% கோட்டா பிச்சைக்காரன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!