ராஜராஜ சோழன் என்பவன் தேவதாசி முறையினை கொண்டுவந்தவன், அவன் பொறுக்கி பெண் பித்தன் அவன் நல்லவனாக இருக்க முடியாது என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது

யாரென கண்டால் அதே ரஞ்சித் கோஷ்டி

அவனுக்கே 5 அறிவு என்றால் அவன் பின்னால் செல்லும் கூகைகளுக்கு 4 அறிவுதானே இருக்க முடியும்?
ராஜராஜன் மாபெரும் மன்னன், அவனுக்கு பெண்கள் விருப்பம் என்றால் அந்தபுரத்தில் ஆயிரம் பெண்களை குவித்திருக்கலாம்

தமிழகம் தாண்டி ஆந்திர அழகிகள், கலிங்க குயில்கள், வங்கத்து தங்கங்கள், பர்மா பதுமைகள், சயாம் எனும் தாய்லாந்து கிளிகள், கம்போடிய கன்னிகள், மலேசிய மங்கைகள்,
இந்தோனேஷிய இந்திரலோக சுந்தரிகள் என குவித்திருக்கலாம்

ஏன் சிங்களத்து சின்னமயில்கள் கூட அவன் மஞ்சத்தை அலங்கரித்திருக்கும், ஆனால் அவன் அதனையா செய்தான்?

இல்லை, தான் வாழ்வின் மிகபெரும் விஷயமான அந்த தஞ்சை ஆலயத்துக்கு பணிபெண்களை நியமித்தான்.
தாசி என்றால் என்ன? வடமொழியில் அடிமை என பொருள், தேவன் என்றால் கடவுள். கடவுளுக்கு அடிமை ஆண்டாள் எனும் பொருளில்தான் வரும்

அவள்தான் உண்மையான தேவ தாசி, கடவுளின் அடிமை

இது இந்துக்களில் மட்டும் அல்ல, எல்லா மதத்திலும் இருந்தது, பைபிள் சொல்கின்றது
கபிரியேல் தூதர் மரியாளுக்கு செய்தி சொன்னதும் அவள் என்ன சொன்னாள்

இதோ “ஆண்டவரின் அடிமை”, இதனை வடமொழியில் மாற்றிபோடுங்கள் அந்த வார்த்தைதான் வரும்.

ஆத்திரபட ஒன்றுமில்லை வடமொழியில் தேவனுக்கு தாசி என்றுதான் வரும், அது மொழியே அன்றி பழி அல்ல.
கடவுளின் ஆலயத்தில் ஒப்புகொடுக்கபட்ட பெண்கள் பணி செய்வது காலகாலமாக நடந்த விஷயம், இன்றைய சிஸ்டர் கான்வென்டுகளின் முன்னோடி அது

மரியாள் அந்த பணியினைத்தான் செய்தாள், அதனால்தான் தூதன் சொன்னவுடன் நான் ஆண்டவரின் அடிமை என அவளால் சொல்ல முடிந்தது
அப்படி யூத மரபு போல, மன்னர் காலத்திலும் அப்பெண்கள் கடவுளுக்கு பூகட்டுதல், இதர பணிகளை செய்தல் என ஆலயத்திலே இருந்திருக்கின்றாள்

அடிமை முறை உச்சத்தில் இருந்த காலத்தில், அதாவது மனிதன் சக மனிதனை அடிமையாக வைத்த காலத்தில்,
இப்பெண்கள் தேவனின் அடிமைகள், தேவனுக்கு மட்டும் தாசிகள் உன்னத நிலையில் இருந்திருக்கின்றார்கள்

எல்லா அடிமைகளும் எஜமான் தாசன்/ தாசிகள் என உரிமையற்று அடிமையாக இருந்தபொழுது, தேவ தாசன்களுக்கும் தேவதாசிகளுக்கும் சகல உரிமையும், மரியாதையும் இருந்திருக்கின்றது
நாங்கள் கடவுளுக்கு மட்டும் அடிமைகள் என கம்பீரமாய் அவர்கள் வலம் வந்திருக்கின்றார்கள்

கணிகையர் வேறு, பரத்தையர் வேறு, அந்தபுர அழகிகள் வேறு

தேவனுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் வேறு

முன்னிரண்டும் சாக்கடை என்றால் மூன்றாம் ரகம் சந்தணம்

குழப்பம் எங்கு தொடங்கிற்று?
வெள்ளையன் வந்தபின் மன்னர்கள் ஒழிக்கபட்டனர், மன்னர்கள் ஒழிக்கபட்டபின் ஆலயங்கள் அனாதைகளாயின‌

ஆலயமே அனாதையானபின் அப்பெண்களின் வாழ்வு என்னாகும்?

ஆம் பெண்கள் என்பதால் அவர்கள் வாழ்வு திசைமாறி போயிற்று

அந்த புனிதமான நதிகள் சாக்கடையாயின.
ஒரு காலத்தில் கூவம் மிக சுத்தமான நதி, எத்தனையோ பேர் நீராடிய இடம், ஆலயத்திற்கு அங்கு இருந்து புனிதநீர் வரும், எத்தனையோ தெப்பகுளங்களுக்கு அந்நீர் வரும்

இன்று ஒருவன் கூவத்து நீரில் சென்னை தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது என சொன்னால்,
“டேய் எங்கள் தெய்வத்தை சாக்கடையில் குளிப்பாட்டுவார்கள் என சொன்னாயா?” என பொங்கினால் எப்படி இருக்கும்?

இந்த ரஞ்சித் எனும் அரைபயித்தியத்தின் அடிபொடிகள் அப்படித்தான் கிளம்புகின்றன.

அவர் அக்கால மொழியில் புனிதமான வார்த்தையான தேவதாசி, இவர்களால் வேறு பொருளாயிற்று
இவர்களோ இன்று கூவமாகிவிட்ட அந்த வார்த்தையின் பொருள்பட திட்டினாய் என வந்து நிற்கின்றார்கள்

இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

தமிழில் கலந்துவிட்ட வடமொழி குழப்பம், அதுதான் காரணம்

இறைவனின் அடிமை என தமிழில் வந்திருக்க வேண்டிய வார்த்தை தேவதாசி என வடமொழியிலே வந்துவிட்டது
இதுதான் குழப்பம்

தமிழில் வடமொழி கலந்து பேசிவிட்டு அதனையே தமிழ் என சொல்லிவிட்டு, அதற்கு விபச்சாரி என இவர்களே பொருளும் கொண்டுவிட்டு கத்திகொண்டிருக்கின்றார்கள்

தேவதாசிகள் எனும் உயர்வான புனிதமான பெயரை விபச்சாரிகள் என ஒப்புகொள்வது என்பது கண்டிக்கதக்க ஒன்று
தேவதாசி என்றால் விபச்சாரி என இவர்களே ஒப்புகொண்டு அந்த அக்கால புண்ணிவதிகளை கேவலபடுத்த தொடங்கிவிட்டார்கள், அதனைத்தான் செய்கின்றார்கள், அறியாமையில் வரும் பெரும் அவமானம் இது

ராஜராஜன் தன் சுகத்துக்காக பெண்களை அங்கு நியமிக்கவில்லை, அதற்கு அவனுக்கு அவசியமுமில்லை
ஆலயத்தை பராமரிக்கவும் அந்த பெருவுடையாருக்கு பணிசெய்யவுமே கடவுளுக்கு அடிமையான பெண்களை நியமித்தான்

அவர்கள் மிக உன்னதமானவர்களாக கொண்டாடபட்டனர், அவர்களை நெருங்கி நடக்க கூட மற்றவரால் முடியாது.

கத்தோலிக்க கன்னிகாஸ்தீர்க்கள் எனும் புனிதமான கன்னியர் இருக்கின்றார்கள் அல்லவா?,
அப்படி அன்று இந்து ஆலயங்களில் புனிதமாக நின்றவர்கள் தேவதாசிகள்

கத்தோலிக்க சகோதரிகளுக்கு ரோமை பீடமும் ஐரோப்பாவும் இன்றுவரை ஆதரவாக நிற்கின்றன‌

ஆனால் இந்து ஆலய சகோதரிகள் மன்னராட்சி ஒழிக்கபட்டபின் திசைமாறி சென்றுவிட்டனர், அவர்களை காப்பார் யாருமில்லை

வரலாற்று உண்மை என்பது இதுதான்
இந்து ஆலயங்கள் பிரமாண்டமானவை, அவற்றை சுத்தபடுத்தி பராமரிக்க எவ்வளவு ஆட்கள் தேவை?

அதுவும் அங்கேயே இருந்து பணியாற்றுவது எவ்வளவு சிரமம்?

மாலை தொடுத்தல் தீபம் என எவ்வளவு வேலைகள்?

தங்கள் வாழ்வினை அர்பணித்த பெண்கள் சாதி,இன அடையாளமின்றி அங்கு வரவேற்கபட்டார்கள், கொண்டாடபட்டார்கள்
உண்மை இப்படி இருக்க தேவதாசிக்கும் பரத்தைக்கும் கணிகைக்கும் வித்தியாசம் தெரியா கும்பல் ஊளையிடுகின்றது

வெள்ளதனைய மலர்நீட்டம் என்பான் வள்ளுவன், இவர்கள் உள்ளத்தறிய அவர்கள் அறிவு
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to இராவண ராசா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!