My Authors
Read all threads
🌺காந்தியை விட உயர்ந்தவர் வீரசாவர்க்கர்...🌺

வீரசாவர்க்கரை கைது செய்து இங்கிலாந்திடம் அளித்ததற்காக பிரான்ஸ் நாடே உலக மக்களிடம் மன்னிப்புகேட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரான வீரசாவர்க்கரை அவமதிக்கும் வகையில் பிறந்து வளர்ந்த நாட்டையே ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல்,
"மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று கூறியிருக்கிறார்.

தங்களின் அரசியல் அடையாளத்திற்காக காந்தி குடும்பத்தின் பெயரையே, பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நேரு குடும்பத்தின் கோமாளிக்கு, சாவர்க்கர் பெயரை சொல்வதற்காவது தகுதி இருக்கிறதா?
மோடியைத் திருடன் என்று பொய் கூறி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட இந்த கோமாளிக்கு, வீரசாவர்க்கர் பற்றி என்ன தெரியும்?

இளமை துள்ளும் 29 வயதில் மனைவி மக்களைப் பிரிந்து, அந்தமான் தனிமைச் சிறையில்
11 வருடம் வீரசாவர்கர் இருந்தது தியாகம் இல்லையாம்.
ஆனால் வாழ்வு முடியும் 79
வயதில், பேரன் பேத்திகளை மறந்து, சபர்மதி ஆசிரமத்தில் இளம் பெண்களோடு பிரம்மச்சர்ய ஆராய்ச்சியில் இருந்த காந்தி தியாகம் செய்தவராம். நல்லா இருக்குப்பா உங்கள்
சுதந்திர போராட்ட வரலாறு...

இந்திய வரலாற்றில் 1857 ம் வருட வரலாற்றைத் தேடிப் படியுங்கள்.
அது ஒரு 'சிப்பாய்க்கலகம்' என்ற பெயரிலேயே இந்திய அளவிலும், இங்கிலாந்து அளவிலும் பதியப் பட்டிருக்கும்.

ஆனால் அதுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் எழுச்சி என்று மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீரசாவர்க்கரே.
இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்த பிறகுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மீது மக்கள் முழு ஈடுபாட்டுடன் இணைய ஆரம்பித்தனர்.

ஆக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியே, வீரசாவர்க்கரால் தான் உருவாக்கப் பட்டது என்று உறுதியாக சொல்லலாம்.
இந்தியாவை அடிமைப்படுத்திய, இங்கிலாந்தில் இருந்து கொண்டு இங்கிலாந்தையே கவிழ்க்க புரட்சிகளைத் தூண்டி, இங்கிலாந்து மண்ணிலேயே வெள்ளைக்கார அதிகாரி கர்சன் வில்லியைப் போட்டுத் தள்ளிய வீரசாவர்க்கரை,

வெள்ளைக்காரனிடம் அடிபணிந்தவர் என்று இங்கிலாந்து சென்று, வெள்ளைகாரனிடம் கைக்குலுக்கி,
அவனோடு டிபன் சாப்பிட்டு, படுத்து உறங்கிய காங்கிரஸ் கூட்டமும், இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவுக்குக் கொடி பிடிக்கும் கம்யூனிஸ்ட்களும் சொல்வது நகைப்பானது.

உலகிலேயே ஒரு நாட்டின் அரசாங்கமே அடுத்த நாட்டை சேர்ந்த ஒருவரின் கைதுக்கு மன்னிப்பு கேட்டு பதவி விலகியது என்றால்...
அந்தத் தனி ஒருவர் வீர சாவர்க்கர் தான். இங்கிலாந்தில் கர்சன் வில்லி என்கிற ஆங்கில அதிகாரியை கொலை செய்த மதன்லால் திங்ராவுக்கு, துப்பாக்கி கொடுத்த குற்றத்திற்காக வீர சாவர்க்கரை கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.

அதே நேரத்தில், நாசிக் நகர கலெக்டர் ஜாக்சனை சுட்டுக் கொன்றதற்காக,
வீர சாவர்க்கரின் அண்ணன் கணேஷ்ராவ் சாவர்க்கர் கைது செய்யப்படுகிறார்.

பார்த்தீர்களா?? வீர சாவர்க்கரின் உடன் பிறந்த ரத்தங்கள் இந்த தேசத்திற்காக எப்படி துடித்துள்ளார்கள் என்று... மராட்டியத்தில் வெள்ளையர்களை துப்பாக்கி முனையில் போட்டுத் தள்ளிய
சாபேகர் சகோதரர்கள் வழியிலேயே வளர்ந்தவர்கள்
சாவர்க்கர் பிரதர்ஸ்.

அதாவது, அண்ணன் கணேஷ் சாவர்க்கர், விநாயக் சாவர்க்கர் தம்பி நாராயண சாவர்க்கர் என்று மூன்று சாவர்க்கர்களும் இந்த தேசவிடுதலைக்காக போராடியவர்கள், சிறையில் இருந்தவர்கள்.
ஆனால் ராகுல் காந்தி குடும்பம், சாவர்க்கர் மாதிரி எத்தனையோ
குடும்பங்கள் செய்த தியாகத்தினால் கிடைத்த சுதந்திரத்தை வைத்து, இந்தியாவைக் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் கர்சன் லில்லி கொலைக்காக கைது செய்யப்பட்ட வீர சாவர்க்கரை எஸ்.எஸ். மோரியா என்கிற கப்பலில்
இந்தியா கொண்டு வந்த பொழுது தப்பிக்க நினைத்த சாவர்க்கர், 1910 ம் ஆண்டு ஜூலை 8 ம் தேதி பிரான்ஸ் நாட்டின் கடல் பரப்பில் மோரியா கப்பல் நின்றிருந்த பொழுது கப்பலின் கழி வறையில் உள்ள கண்ணாடியை உடைத்து கடலில் குதித்தார்.

ரத்த காயங்களுடன் நீந்தி கரையேறிய வீர சாவர்க்கரை,
பிரான்ஸ் போலீஸ் பிடித்து இங்கிலாந்து போலீசிடம் ஒப்படைத்தது. அடைக்கலம் தேடி வந்த சாவர்க்கரை கைது செய்தது தவறு என்று பிரான்ஸ் நாடே கொந்தளித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதற்கு உலகளவில் மன்னிப்பு கேட்டு பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் தன்னுடைய அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தாரே...
இதற்கு மேல் ஏதாவது ஒரு இந்திய போராளியின் பெயர், உலக சரித்திரத்தில் எங்காவது எழுதப்பட்டுள்ளது என்று யாரவது கூறுங்கள் கேட்போம்...

இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட வீர சாவர்க்கருக்கு 1910 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி இங்கிலாந்தில் நட ந்த கர்சன் வில்லி கொலைக்கு
முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அவரது அனைத்து சொத்துக்களும் அவர் பெற்ற கல்வி பட்டங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அடுத்து 1911 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, நாசிக்கில் நடந்த நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலைக்கு மீண்டுமொரு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
28 வயது வாலிபன் வீரசாவர்க்கருக்கு, 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கிறது ஆங்கிலேய அரசு.

சாவர்க்கர் கழுத்தில் டேஞ்சர் அடையாளத்துடன், 24-12-1910 முதல் 23-12-1960 வரை தண்டனை காலம் அடங்கிய பட்டையைத் தொங்கவிடுகிறார்கள் சிறை அதிகாரிகள்.
1911ம் ஆண்டிலிருந்து 1921ம் ஆண்டு வரை, அந்தமான் சிறையில் இருந்த வீரசாவர்க்கர் அனுபவித்த கொடுமைகள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எந்த ஒரு தனிமனிதனும் அடைந்திடாதவை.

அந்தமானில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்து காசநோய் தீர்க்க, இந்தியாவின் ரத்னகிரி சிறைக்கு வந்து,
தன்னுடைய இலட்சியமான இந்துத்வா என்ற நூலினை எழுதி, இன்று பி.ஜே.பி என்ற கட்சி ஆட்சியில் இருக்கிறதே... அதற்கு விதை விதைத்த வீர சாவர்க்கரை...

ஆங்கிலேய அரசின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று சில தீய சக்திகள் வரலாற்றை மாற்றியதை என்ன சொல்ல முடியும்?
இந்தியாவின் சுதந்திரப்போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆசியுடன், இந்திய சிறையினில் அரசியல் கைதிகளாக காந்தியும், நேருவும், நாட்கணக்கில் இருந்ததைப் பக்கம் பக்கமாக சொல்லும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு...

50 ஆண்டுகள் தண்டனை பெற்று, நாடு கடத்தப்பட்டு,
அந்தமான் செல்லுலார் சிறையில் வீரசாவர்க்கர் இருந்ததையும், உடன் இருந்த நண்பர்களை சிறைக் கொடுமையினால் காலனுக்குப் பறி கொடுத்ததையும், சில வரிகளில் சொல்லிச் சென்றதை நினைத்தால்...

காங்கிரஸ் திருடர்கள் திட்டமிட்டு வீரசாவர்க்கரின் தியாகத்தை மறைத்ததைத் தெரிந்து கொள்ளலாம்.
"எஜமான்... நீங்கள் எங்களுக்கு எப்போது சுதந்திரம் தருவீர்கள்? நாங்கள் எப்போது உங்களை மாதிரி இந்தியாவைக் கொள்ளை அடிக்க முடியும் என லண்டன் சென்று,

வெள்ளைக்கார துரைகளிடம் கைகுலுக்கி, அவர்களுடன் உணவருந்தி, வட்டமேசை மாநாடு என்ற பெயரில் ஆங்கிலேயர்களுடன் சலுகைகள் கேட்டு உறவாடிவிட்டு,
திரும்ப இந்தியா வந்து 'ஆங்கிலேய அரசு எங்களின் உரிமையை பறிக்கிறது, அதனால் போராடுவோம்...' என்று போராடிய காங்கிரஸின் போராட்டம் தியாக வரலாறாம்!

ஆனால், 50 ஆண்டுகள் தண்டனை பெற்று, அந்தமானில் உடன் இருந்தவர்களைக் காலனுக்குப் பறிகொடுத்து, காசநோயினால் பரிதவித்து,
தன்னுடைய லட்சியம் அந்தமான் சிறைக்குள்ளே தன்னோடு அழிந்து விடக்கூடாதே என்ற நினைப்பில், நோய்க்கு சிகிச்சை வேண்டும் என்ற பெயரில், இனி தீவிர அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு வந்த வீரசாவர்க்கரின் வரலாறு, துரோக வரலாறாம்!!
'உண்ணாவிரதம் என்பது அஹிம்சையின் ஆயுதம்' என்று சொல்லி, காந்தி தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்!

ஆனால், உண்ணாவிரதம் என்பது வாழ்வின் நிறைவு என்ற இந்து தர்மத்தை உலகிற்கு உணர்த்தியவர் வீரசாவர்க்கர் தான்.
தன்னுடைய இலட்சியமான இந்துத்வா இந்தியாவில் வேர் விட ஆரம்பித்த மகிழ்ச்சியில், தன்னுடைய நோக்கம் நிறைவேறிய திருப்தியில்,

தன்னுடைய வாழ்வை நீடிக்க விரும்பாமல் 26 நாட்கள் உண்ணா விரதமிருந்து, பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் தன்னுடைய உயிரை போக்கிக்கொண்டார்.
சும்மா உண்ணாவிரதம் என்று ஆங்கிலேயரிடம் சீன் போட்டு, நாடகமாடி வந்த காந்தி
உயர்ந்தவரா? இல்லை.... உண்மையிலேயே
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த வீரசாவர்க்கர் உயர்ந்தவரா? என்று நீங்களே யோசித்து கொள்ளுங்கள்!!

இப்பொழுது வீரசாவர்க்கர் உருவாக்கிய இந்துத்வா ஆட்சியில் இருக்கிறதா?
இல்லை... காந்தி கூறிய மதசார்பின்மை ஆட்சியில்
இருக்கிறதா??

என்பதைக் கோமாளி ராகுல் நினைத்துப் பார்த்து, சாவர்க்கர் பெயரை கூறுவதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்....

நன்றி: வாட்ஸப்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!