அது நடந்து ஐம்பத்தைந்து வருடம் ஆகி விட்டது. ஒரு இளங்காலை நேரம். நாகர்கோவில் நகரின் முதன்மையான ஒரு தெருவில் வசிக்கும் பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். தண்ணீரெடுக்க தெருமுக்கிற்கு வர வேண்டும்.
அந்த நீண்ட குறுகிய தெருவின்கடைசியில் இடப்பக்கம் ஒரு வளவு.
அந்த வளசலிலிருந்து வந்த பெண்ணிடம் ஒருத்தி கேட்டாள்.
'ஏட்டி தாணம்ம ..
மாமி எப்படியிருக்கா?'
'மாமிக்கென்ன நல்லாத்தான் இருக்கா. உங்கம்ம அதத் தந்தாளா இந்தத் தந்தாளான்னு வந்ததிலயிருந்து ஒரே நொச்சரிப்பு:
போட்டி சவமே ஒங்கத்தையையா கேட்டேன்.
ஒன் வீட்டு தொட்டடுத்த வீடுல்லா. அதாம்ட்டிக் கேட்டேன்'
'மாமிக்கு என்னக்கா ஆச்சிது? ராசம்மக்கா நீதான் சொல்லேன்.'
'ஓங்கத்த ஒண்ணும் சொல்லலியா?'
வெறும் குடத்தை இடுப்பிலிருந்து கையில் பிடித்தவாறு இல்லக்கா.
நம்ம கேட்டா சொல்லமாட்டா
நீ சொல்லேன்.
இன்னைக்கு விடியக்காலம்பற என்னய
வந்து அப்பா விட்டுட்டுப் போனாருக்கா அதுனால ஒண்ணும் தெரியலை 'என்றாள் தாணம்மை.
தெருவின் பாதி தூரத்தில் இன்னொருத்தி சேர்ந்து கொண்டாள்.
'போக்கா. இந்தக் குட்டிக்கு ஒன்னும் தெரியலக்கா' என்றவள் வளவிலிருந்து வேறு யாரேனும் வரார்களா என்று பார்த்துக் கொண்டே குடத்தை நிரப்பி
திரும்பி வீட்டிற்கு வந்தாள்.
தாணம்மை தண்ணீர் கொண்டு வரும் போது அவளுடன் நைசாக வளவினுள் நுழைந்தாள்.
அவள் வளவின் முதல் வீட்டுக் கருகே நின்று ஐந்தாவதாய் இருந்த மாமியின் வீட்டை நோட்டம் விட்டாள். ஒரு அனக்கமும் இல்லை.
நுழைந்தவள் தாணம்மையின் கணவனிடம் யப்போ நீ மீனாச்சிபுரம் போவலையாப்போ . என்று கேட்டாள். செல்வம் பதிலுக்கு 'இன்னா புறப்பட்டமுக்கா. இப்பப் போனாத்தான் சரியாயிருக்கும். பின்ன கேட்கலாம்னு அம்ம சொன்னா. அயிருக்கு. மாமாட்ட நாள பின்ன பேசண்டாமா' என்றபடி
ரொம்ப நேரம் நிக்காதே . சணம் வந்திரு என்ற அம்மாவிடம் சரி என்றான்.
ராசம்மா குண்டணியும் கோளும் சொல்வதில் வல்லவள். அவளை கிட்டவே விட மாட்டார்கள். இப்போது அவளிடமே மருமகளை விட்டு விட்டாள் அத்தை.
சாயுப்பு மாமாக்கு
இரண்டு பொண்டாட்டின்னாவது தெரியுமா ஒனக்கு.?
ஆமாக்கா அத்த சொல்லிருக்கா.
இந்த மாமி மூத்தவடியா
ஆறுமாசமாவுது.
கழியாமாக் கெடந்தா. வயித்துல பயங்கர நொம்பலம். ஜெயசேகரன் ஆசுத்திரிலே ஆப்ரேசன் செய்தும் குணமாவல. நேத்து ராத்திரி
செத்துப் போய்ட்டா என்றவள் சத்தம் குறைத்து தாணம்மையின் காதில் இந்த மாமி இங்க இருக்கும்போ
அவளுக்க உம்மா சொன்னா. குடலு அழுவிட்டாம். பாவம்
அவ்வளவும் இவளைத்தான் சேரும்.
தாணம்மைக்கு அழுகையாய் வந்தது.
தான் பார்க்காத அப் பெண்ணின் மரணத்திற்கு அழுதாள்.
சின்னப் பெண். 'இரண்டு பிள்ளய உண்டுன்னு என் மாப்பிள ஒருநா சொல்லிச்சு. ஐயோ பாவம் '.
'ஆமா ..பாவந்தான்.
ஆனா இவ ராச்சசில்லா. ஒப்புக்குக்கூட ஒரு நா பிள்ளகள வச்சிப் பாக்கமாட்டா'.
'ஆமாக்கா . மாமாக்கக் கூட சண்ட போடுத கேட்டிருக்கேன்.
கெட்ட கெட்டதா பேசுவா. தள்ளயில்லாத பிள்ளகள இந்த மாமி பாப்பாளா? தெய்வமே'
'அதுவ அவங்க உம்மும்மாட்டத்தான் இனி வளரும்.
கருவேப்பில கண்ணு மாரி பொத்திப் பொத்தி வளத்தா. இப்ப வாரிக் கொடுத்திட்டு நிக்கா.'
பேசிக்கொண்டே எதிர்வரிசையிலுள்ள
வீட்டின் திண்ணையில்
வாக்காய் அமர்ந்து கொண்டாள்.
மாமி என்ன செய்கிறாள்
ஏது செய்கிறாள் என்று தெரியாதபடி நோட்டமிடலாம்.
.
கூறி ஆறுதல் படுத்துவார்கள்.
அவள்இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களால்
ஏற்றுக் கொள்ள இயலாது கலங்கிப் போயிருந்தனர்.
இளையவளின் இரு குழந்தைகளும் பெரியவளுடன் ஒட்டிப் பழகினர்.
அவள் மலடியில்லை. திருமணமான பத்தாம் மாதம் ஒரு குழந்தை இறந்து பிறந்தது. அதன்பின் அவள் கர்ப்பமடைய வில்லை.
அதைச் சாக்கு வைத்து
இன்னொரு பெண்ணையும் மணமுடித்தாகி விட்டது.
அன்றிலிருந்து அவளுக்கு தீராக் கோபம். காரணமின்றி
எல்லோரிடமும் கோபம்.
வெளியே வாசலுக்கு வந்தாள். பளீரென்ற நிறம். சுருள் முடி. அப்போதுதான் குளித்ததுபோல் தலைமுடி விரிந்து கிடந்தது. பெண்ணுக்குப் பெண்ணே ஆசை கொள்ளும் பேரழகு
துஷ்டி வீட்டிற்குப் போனவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். தெருவின் அந்த அற்றத்திலிருந்து இந்த அற்றம் வரையுள்ள வீடுகளின் வெளியே மக்கள் நின்று கொண்டிருந்தனர். மாமா இங்கே பிள்ளைகளுடன் வருகிறார் என அங்கிருந்து திரும்பிய செல்வம் கூறியிருந்தான்.
வேதனையை அந்த உறவுகள் புரிந்து மனதிற்குள் அழுதன.சில பெண்கள் அண்ணே என்று கதறினர்.
அவன் வீடு இருக்கும் வளவிற்குள் நுழைந்தான். தாணம்மை இப்போதுதான் பிள்ளைகளைப்பார்க்கிறாள்.
நடக்கும் குண்டு பொம்மை போல்
வந்த பெரிய குழந்ததையைப் பார்த்ததும் ஏதோவொரு உணர்வில் வெடித்து அழுதாள்.
வாசலில் குழந்தைகளுடன் அசையாது நின்ற கணவனைக் கண்டதும்
ஆவேசமாய் வந்தாள்.
அவளின் உள்ளேயிருந்த
வெப்ராளத்தை முகம் காட்டியது. சிவந்திருந்த
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் பேசவும் யாரும் துணியவில்லை.
கூட்டம் பதைபதைப்புடன் ஒன்றும் செய்ய இயலாது பார்த்துக் கொண்டிருந்தது
உம்மா இன்னா இரிக்கேன் மக்களே . எதுக்கு கரையிதீங்கோ கரையாதீங்கோ என் செல்லக் கிளியளே' என்றவாறு தன் கைகளை விரித்தாள்.
சுற்றி நின்றவர்களை நனைத்தோடியது.
அந்த ஊற்றின் பிரவாகம் கடலில் சென்று சங்கமிக்கும் வரை அதனுள் ஆனந்தமாய் நீந்தினோம் - நானும் என் தங்கையும்.