சட்டம்,திட்டமாகக் கூறுகிறது,
“அவர்களுக்கு என்ன ஐயா, குறை!
மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களைப்பற்றி வீணாகப் பிரமாதப்படுத்திப் பேசுகிறாயே, பேயனே! பித்தானே!
சமாசவாதிகள் – எண்ணிக்கையை மட்டும் எண்ணிக் கொண்டு, யார் நம்மை என்ன செய்யமுடியும் என்று இறுமாந்து கிடந்த ஏமாளிகள்! இதோ, கம்யூனல் ஜி.ஓ.சட்டவிரோதம் என்று தீர்ப்பாகி விட்டது.
பின்னணியில் இருக்கிறது – சூழ்நிலை கெட்டுக் கிடக்கிறது –
சட்டப்படி செய்யக்கூடியவை, செய்யவேண்டியதைச் செய்துவிட்டனர் நீதிபதிகள்.
இந்நாட்டிலே உள்ளதுபோன்ற கொடுமையான சமுக அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
மேனாடுகளிலே ஒரு சிறுபான்மைக் கட்சி,பலாத்காரத்தின் மூலம், சர்வாதிகாரம் செலுத்துவது உண்டு சிலகாலம்.பிறகோ, சரியும், ஜனநாயகத்தின் தாக்குதலால்.
இந்தக் கொடுமையை அடக்கி ஒடுக்கிவைத்தனர் நம் தலைவர்கள்,
பார்ப்பனரல்லாதார் சமுதாயம், இனி என்ன செய்வது என்ற கேள்வியே, பொறுப்புள்ளவர்களின் விழிகூறும் மொழி! வகுப்பு எதேச்சாதிகாரம் வெற்றி பெற்றுவிட்டால்,
மறைந்து கிடந்த, மங்கிக் கிடந்த மாச்சரியம், புதுவேட்டையில் ஈடுபடும், சமூகத்தின் அமைதிக்கும் கேடு வரக்கூடும். காங்கிரஸ் வட்டாரத்துத் தலைவர்கள்,
ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தைத் தகர்த்து விட்டதால், மன மகிழ்ச்சி கொள்ளும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த சுயநலக்காரர்கள் வினை விதிக்கிறார்கள் – பலனை இந்தத் தலைமுறையிலேயே காண்பார்கள்.
மாகாண சர்க்காரின் திட்டங்களைப் புது அரசியல் திட்டம் எவ்வளவு எளிதாக உடைத்தெறிகிறது என்பதை விளக்கவேண்டும்.
இப்படிக்கு
அண்ணன்
அண்ணாதுரை