My Authors
Read all threads
அறிஞர் அண்ணா Communal G.O ( Law made by Justice party grants reservation in Madras State ) ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அதை எதிர்த்து எழுதியக் கட்டுரையின் ஒரு பகுதி

சட்டம்,திட்டமாகக் கூறுகிறது,
‘ஜாதி காரணமாக,யாரையும்,கல்வித் துறையிலே அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று, இது, பரந்த நோக்கமாம்.ஜனநாயகப் பண்பாம். புதிய இந்தியாவின் இலட்சணமாம். இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக்கிறது.
கம்யூனல் ஜி.ஒ-ரத்தாகி விட்டது – இனி, பார்ப்பன மாணவர் இவ்வளவு எண்ணிக்கைதான் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர், என்ற முறை இராது, ‘மார்க்கு’ என்னும் தகுதியைக் கவனித்து யாரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இதன்படி, கல்வி நிலையங்களிலே, ஒரே வகுப்பு – பார்ப்பன வகுப்பு நிரம்பிவிடும – மற்ற வகுப்பார் ஜாதீய முறையினால் பின்னணிக்குத் தள்ளப்பட்ட வகுப்பினர் ‘மார்க்’ அந்த அளவுக்குப் பெறவில்லை என்ற காரணத்துக்காகக் கல்லூரியில் இடம் கிடைக்காமால், வெளியே வாட வேண்டும்.
“அவர்களுக்கு என்ன ஐயா, குறை!
கம்யூனல் ஜி.ஓ.இருக்கவே இருக்கிறது, கைதூக்கி விட” என்று பொறாமையுடன் பொச்சரிப்புடன் பேசிவந்தோருக்கு அகமும் முகமும் அன்றலர்ந்த செந்தாமரையாகி விட்டது, விழா நாள், வகுப்பு ஆதிக்கக்காரருக்கு – வேதனை தரும் நாள், திராவிடப் பெருங்குடி மக்களுக்கு.
“பையன், என்ன செய்கிறான்?”- நண்பர் கேட்கிறா- “B A.வகுப்பில் சேர்ந்திருக்கிறான்” பூரிப்புடன். அவருடைய குடும்பத்திலேயே முதல் B.A.அரும்புகிறது – இது கம்யூனல் ஜீ.ஓ-வின் பலன்.
இனி, ‘என்ன செய்கிறான்?’ என்ற கேள்விக்கு, டிராம் ஒட்டுகிறான், துறைமுகத்தில் ‘மேஸ்திரியாக வேலை பார்க்கிறான், கல்லூரியில் சேரவில்லை – இவனைவிட அதிக மார்க்கு வாங்கிவிட்ட ‘பிராமணப் பையன்’ சேர்ந்துவிட்டான் – என்று தகப்பனார் கூறுவார்.
அடுத்த ஆண்டு பள்ளிகள் துவக்கத்தின்போது, திராவிடக் குடும்பங் களிலே, ஏற்பட இருக்கும் திகைப்பை முன் கூட்டி எண்ணினாலே, நெஞ்சு ‘பகீர்’ என்கிறது. வந்தது விபத்து அழிந்தது சமூகநீதி!
மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களைப்பற்றி வீணாகப் பிரமாதப்படுத்திப் பேசுகிறாயே, பேயனே! பித்தானே!
– என்று நம்மைக் கேலி பேசி, 153-ம் செக்ஷன் கொண்டு தாக்கி, ‘தேசபக்தர்’ ‘இந்தியா’- என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டு உள்ளவர்களைக் கேட்கிறோம்- பார்த்தீரா!
மாகாணத்திலே முப்பது ஆண்டுகளாக இருந்து வரும் முறை- பலப்பல மந்திரிகளால் ஆதரிக்கப்பட்ட முறை – காங்கிரஸ் மந்திரிகளாலும் ஆதரிக்கப்பட்ட முறை – சட்டசபையிலே வெற்றிக் கொடி நாட்டிய முறை. இதோ அந்தச் சிறு வகுப்பினரே உள்ள சுயநலக்காரரின் வேலையினால், வீழ்ந்துவிட்டது!
இப்போது என்ன சொல்கிறார்கள்.
சமாசவாதிகள் – எண்ணிக்கையை மட்டும் எண்ணிக் கொண்டு, யார் நம்மை என்ன செய்யமுடியும் என்று இறுமாந்து கிடந்த ஏமாளிகள்! இதோ, கம்யூனல் ஜி.ஓ.சட்டவிரோதம் என்று தீர்ப்பாகி விட்டது.
பின்னணியில் இருக்கிறது – சூழ்நிலை கெட்டுக் கிடக்கிறது –
ஆகவேதான், அந்தச் சமூகத்துக்குச் சில சலுகைகள் காட்டுவது நியாயம், என்று பேசினர் அமைச்சர்கள் – சட்டமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது, கம்யூனல் ஜி.ஓ. சட்டவிரோதம் என்று கூறிவிட்டது.
சட்டப்படி செய்யக்கூடியவை, செய்யவேண்டியதைச் செய்துவிட்டனர் நீதிபதிகள்.
இதன் பயனாக –இந்தத் தீர்ப்பைச் சாதகமாகக் கொண்டு, வகுப்பு ஆதிக்கக்காரர்கள், சமூக நீதியை அழித்து, சிறுபான்மையினரின் சர்வ ஆதிபத்யத்தை நிலைநாட்டப் போகிறார்கள்.பழைய நிலை – பார்ப்பன ஆதிக்கம்.இதோ வந்து கொண்டிருக்கிறது.
இந்நாட்டிலே உள்ளதுபோன்ற கொடுமையான சமுக அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
இங்கு ‘ஜாதிமுறை’ மக்களைச் சின்னாபின்னமாக்கி, சிறுபான்மையினரை, ஆதிக்கக்காரர் ஆக்கிவிட்டது.
மேனாடுகளிலே ஒரு சிறுபான்மைக் கட்சி,பலாத்காரத்தின் மூலம், சர்வாதிகாரம் செலுத்துவது உண்டு சிலகாலம்.பிறகோ, சரியும், ஜனநாயகத்தின் தாக்குதலால்.
இங்கோ, பழைய ஏடு,மூடநம்பிக்கை எனும் ஆயுதங்களைக் கொண்டு, பெரும்பான்மைக் சமூகத்தை வீழ்ச்சி அடையச் செய்துவிடச் சிறுபான்மை சர்வாதிகாரம் செய்கிறது.
இந்தக் கொடுமையை அடக்கி ஒடுக்கிவைத்தனர் நம் தலைவர்கள்,
டில்லிச் சட்டம் கட்டுண்டு கிடந்த இக்கொடுமையின் தளையை அறுத்துவிட்டு, ‘போ! போ! உன் பசி தீர இரை தேடிக் கொள்’- என்று கூறிவிட்டது.
பார்ப்பனரல்லாதார் சமுதாயம், இனி என்ன செய்வது என்ற கேள்வியே, பொறுப்புள்ளவர்களின் விழிகூறும் மொழி! வகுப்பு எதேச்சாதிகாரம் வெற்றி பெற்றுவிட்டால்,
பெரும்பான்மைச் சமூகம் சகல முனைகளிலும், அடிமைநிலையை அடையும், சமூகத்தின் கட்டுக் கோப்பிலே, ஒரு பயங்கரமான ‘விரிச்சல் ‘ஏற்பட்டுத் தீரும்.
மறைந்து கிடந்த, மங்கிக் கிடந்த மாச்சரியம், புதுவேட்டையில் ஈடுபடும், சமூகத்தின் அமைதிக்கும் கேடு வரக்கூடும். காங்கிரஸ் வட்டாரத்துத் தலைவர்கள்,
திராவிடத் தலைவர்கள் இருக்கும் திக்க நோக்கி, அபாயச் சங்கு ஊதும் நாள் பிறந்தே தீரும்.
ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தைத் தகர்த்து விட்டதால், மன மகிழ்ச்சி கொள்ளும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த சுயநலக்காரர்கள் வினை விதிக்கிறார்கள் – பலனை இந்தத் தலைமுறையிலேயே காண்பார்கள்.
வகுப்புகளுக்குள் விரோதம் மூளவும், அதன் பயனாக மக்கள் மனதிலே குமுறல் ஏற்படவும் போகிறது. அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன.
மாகாண சர்க்காரின் திட்டங்களைப் புது அரசியல் திட்டம் எவ்வளவு எளிதாக உடைத்தெறிகிறது என்பதை விளக்கவேண்டும்.
டில்லியின் ஆதிபத்யத்தையும், அதனுடன் தொடர்பும் பங்கும் கொண்ட, அல்லாடி போன்றாரின் ஆதிபத்யத்தையும் வெட்கமின்றி, விளக்கியாக வேண்டும்.

இப்படிக்கு
அண்ணன்
அண்ணாதுரை
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Arignar Anna | அறிஞர் அண்ணா

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!