சிரவணம்(கேட்டல்)
நிலையான ஒரு ஆசனத்தில் அமர்ந்து, மனம்-மொழி-வாக்குகளால் ஈசனின் திருவிளையாடல் திருக்கதைகளை மரியாதையுடன் திரும்பத் திரும்பக் கேட்பது.
ஈசனின் திருவிளையாடல்களை, தெய்வீகமானது என்னும் எண்ணத்துடன் இதயத்தில் இருத்தி, வாயார உரக்கப்பாடி மகிழ்வது.
ஸ்மரணம்(நினைத்தல்)
காலத்திற்கு உட்படாது நிற்க்கும் ஈசனை, எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்னும் திட உறுதியோடு, இவ்வுலகில் பயமின்றி இருத்தலே ஆகும்.
அருணோதயம் முதல் இறைவனுக்குகந்த வேளைகளில், புலனடக்கி இதயம் கனிந்து செய்யப்படும் பணிவிடைகளே ஆகும்.
தாஸ்யம்(ஆட்படுதல்)
இறைவனை தன் இதயத்தில் இருத்தி, அவரது அன்பைப் பெறுதலே ஆகும்.
சாஸ்த்திரம் கூறிய விதிமுறைத் தவறாது அர்க்யம்,பாத்யம்,ஆசமணீயம் ஆகிய 16 வகை உபசாரங்கள் செய்து இறைவனை வழிபடுதல்.
வந்தனம்(தொழுதடி வணங்குதல்)
இறைவனது திருநாமங்களை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, தனது எட்டு அங்கங்களும் தரையில் படிந்திருக்க வீழ்ந்து வணங்குதல்.
இறைவனது செயல் நன்மையோ தீமையோ, எதுவானாலும் அது நமது நன்மைக்கே என்னும் உறுதியான நம்பிக்கை வைத்தலே ஆகும்.