கோவில்பட்டியிலும் தூத்துக்குடியிலும் கட்சியைத் தொடங்கி வைத்து-
திருச்சியில் அண்ணாவுக்குப் பதிலாகப் பேசி-
திருவையாற்றில் கறுப்புக் கொடி பிடித்து-
கல்லக்குடி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து-
நாகையில் போட்டியிட வலம் வந்து-
சேலம் தொடங்கி பல்வேறு ஊர்களில் உதயசூரியன் நாடகம் போட்டு-
நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராடி-
பரமக்குடி சிவகங்கையில் கட்சியை வளர்த்து-
தேவகோட்டை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து-
அதற்காக அண்ணா அணிவித்த மோதிரத்தை சேலத்தில் தொலைத்து-
அதை திருச்சி காமாட்சி எடுத்துக்கொடுத்து-
சிதம்பரம் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செயல்திட்டக்குழுத் தலைவர் ஆகி-
திருவண்ணாமலை இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்து-
நெல்லை இந்தி எதிர்ப்புப் போராட்டக்
களத்துக்குத் தலைமை வகித்து-
சென்னையில் அன்பகம் கட்டி-
திருப்புமுனை மாநாடாம் விருகம்பாக்கம் தேர்தல் மாநாட்டு இடத்தைச் செம்மைப்படுத்தி-
மூடிய காதுக்குள்ளும் செல்லும் குரல்! அது நூறாண்டுகள் கழித்தும் வெல்லும் சொல்!