கலைஞர் : அஸ்தமிக்காத சூரியன்

ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கலைஞர் , தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். Image
கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கலைஞர் .
1963ல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கலைஞர் , 1967ல் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் அண்ணாதுரை மறைந்தவுடன்
புதிய முதல்வராகப் பதவியேற்ற கலைஞர் , தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது,
நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம்,
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில்,
தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கலைஞர் .

இட ஒதுக்கீட்டில் முக்கியப் பங்கு
அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியதில் கலைஞர் யின் பங்கு மிக முக்கியமானது.
தேசிய அரசியலில்

1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கலைஞர் , 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கவை வைத்திருந்தார்.
குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
மாநில உரிமைக்கான குரல்

கலைஞர் முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின்
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கலைஞர் செய்த முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.
காலம் கடந்தும் அனைவரின் வாழ்விலும் நீங்காத இடம் பெற்றிருக்கும் கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்

கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்
•தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார்.
சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.
•சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.
•சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது
•மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
•சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது
•தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது
•தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது
•தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.
•14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கலைஞர் யால் கொண்டுவரப்பட்டதாகும்
•108 ஆம்புலன்ஸ் சேவைகள் கலைஞர் யின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது
•குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம்
தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.
•சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கலைஞர் க்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின்
டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
•மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
•அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்
•அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.
•தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
•மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
•அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கலைஞர் கொண்டுவந்தார்.
•விவசாயிகளுக்காக கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்
•விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்)
•உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கலைஞர் .
•விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது.
•விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது
•கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே
தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது.
•கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
•பெண்களுக்கான திட்டங்கள்
•திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக ஏழைப்
பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்
•கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கலைஞர் .
•அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
•சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
•பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
•33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
•கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
•ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது.
•1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில்
உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.
•தமிழுக்காக கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்
•இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும்
தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை.
•ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கலைஞர் .
•கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி
முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு.
•சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
•தமில் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார்
•சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது
•மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது
•மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது.
•ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர்.
•தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் .
பொதுவுடமை
•அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கலைஞர் .
•பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது. அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.
•பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
•அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன
•இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்
•உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.
•ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது
•கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு
•கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள்
•பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.
•மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.
•அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய
உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார்.
•மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
•தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.
•நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.
•கலைஞர் அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள்
•நில விற்பனை வரையறை சட்டம்
•பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
•தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
•தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கலைஞர்
•பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது
•ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார்
•ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
•மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
•மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
•அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு
திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.
•நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை
•மொழிப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது
•சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது
•ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது.
•சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன.
•போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்
•நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது.
•உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
•இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது
•இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது.
•தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கலைஞர்
•சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
•ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
•மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது.
•காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர்
•420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது
•ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
•மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.
•மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது.
•ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
•இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
•பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது
•இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார்
•உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கலைஞர் .
•10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது
•சுயமரியாதை என்ற பெயருக்கு சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்கும் கலைஞர் சுயமரியாதை தமிழகத்தை தமிழர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
OBC இடஒதுக்கீடு உரிமை மீட்கப்பட்டதில் எஸ்.சி பிரிவினருக்கும் பயன் கிடைக்கிறது!
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதனால் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு, அகில இந்திய கோட்டாவில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இந்த தீர்ப்பினால், தமிழகம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்கள் பயனடைவார்கள்.
OBC பிரிவினரைத் தாண்டி தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி மாணவர்களும் இதில் பயனடைகின்றனர்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மொத்தம் 19% ( எஸ்.சி 18%, எஸ்.டி 1%). ஆனால் மத்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி 15% மற்றும்
எஸ்.டி 7.5% வழங்கப்படுகிறது.
தமிழக இடஒதுக்கீட்டு அளவோடு வைத்து பார்த்தால் எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு கொடுக்கும் இட ஒதுக்கீட்டில் 3% குறைகிறது. அதே நேரம் 1% மட்டுமே உள்ள எஸ்.டி பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுக்கிறது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட
எஸ்.சி பிரிவினருக்கு குறைவாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட எஸ்.டி பிரிவினருக்கு அதிகமாகவும் இடஒதுக்கீடு கொடுக்கிறது.
மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பின் சாரம் கூறுவதால், OBC பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கிடைத்துவிடுகிறது.
அதே போல் மாநில அளவுபடி, எஸ்.சி பிரிவினருக்கும் 18% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றுவிடுகிறோம். அதாவது 3% கூடுதல் இடங்கள். ஆகையால் இந்த வழக்கு OBC பிரிவினருக்கானது மட்டும் அல்ல எஸ்.சி பிரிவினருக்கும் சேர்த்தே பயனளிக்கக் கூடியதாக உள்ளது.
கலைஞர் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் அதையே இப்போது தலைவர் ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய அயராத முயர்ற்சியால் எதிர் கட்சித் தலைவராக இருந்தும் மாநில –தேசிய உரிமைகளுக்காக போராடி வென்று வருகிறார் .
ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம் ! இனமானம் என்றுமே காப்போம் !! கடைசி பிற்படுத்தப்பட்ட –மிகவும் பிற்படுத்தப்பட்டபட்டியலின தோழனுக்கும் சமுக நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!!

தமிழக செயல் முதல்வர் ஸ்டாலின் !

2021 ல் அவர் தான் இனி தமிழகமுதல்வர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Nov 13, 2023
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப்பட்டது என்ற வரலாற்றை மறுவாசிப்பு.

பெரியாரை எதிர்த்தால் பெரிய ஆளா ஆகலாம் எனும் நோக்கில் இன்னும் பெரியார் சிலையை தொடக் கூட முடியாமல் பிரச்னைக்கு தொடங்கியவன் செத்துட்டான் (தயானந்த சரஸ்வதி சாமி)அதை வைத்து பொழப்பு
நடத்தி ஈன வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான் அர்ஜுன் சம்பத்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து சற்று தூரத்தில், காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பிலும் போலீஸ் பாதுகாப்பிலும் இந்த சிலை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ,
நிறைவேற்றி வழங்கப்பட்ட இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் தனி நகராட்சியாக இருந்தது. அப்போது (1970-ஆம் ஆண்டு) நகராட்சி தலைவராகச் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த Y.வேங்கடேச தீட்சிதர் இருந்தார். அவரது தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில், பெரியார் சுயமரியாதை
Read 48 tweets
Jul 1, 2023
#Maamannan
#மாமன்னன்

"அருந்ததியர் தனபாலை சபாநாயகராக நியமித்து,
மாமன்னன் படக் கதையை அப்போதே உண்மையாக்கியவர் அம்மா.!"
#அடிமைகள்பெருமிதம்.

* சபாநாயகர் தனபால் சட்டமன்றத்துக்கு வரும்போது, முதலமைச்சரான தான் எழுந்து நிற்க வேண்டி வருமே என்பதால். தனபால் அவர்கள் சபாநாயகராக இருக்கும்வரை
சட்டமன்றத்திற்கு தனபால் அவர்கள் வந்ததற்கு பிறகு லேட் ஆக சபைக்கு வந்தவர்தான் இந்த ஜெயலலிதா...

* டெல்லியில் இருந்து சென்னைக்கு தான் பயணம் செய்யவிருந்த தனி விமானத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் அருணாச்சலம் அவர்கள்
தனக்கு சமமாக தனி விமானத்தில் வரக்கூடாது என்பதற்காக விமானத்தில் இருந்த அந்த அமைச்சரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தனியாக விமானத்தில் பயணம் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா...

* சட்டசபையில் தாழ்த்தப்பட்ட சமுதாய உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சாதியின் பெயரை சொல்லி
Read 10 tweets
May 29, 2023
தமிழ் சைவ மடங்களை ஆரிய மயமாக்கும் முயற்சியை வடவர் செய்கிறார்கள்' என பாலபிரஜாபதி அடிகளார் சொல்வதே அப்பட்டமான உண்மை.
சைவ மடாதிபதிகள் ஆரிய-சனாதன கும்பலுடன் இணைந்து தமிழ் சமய விரோதிகளாகிறார்கள்.
ஆதீனம் என்றால் என்ன?

சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
"சைவ சித்தாந்தத்தில் இந்த மடங்களை தோற்றுவித்ததற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது."
Read 13 tweets
May 29, 2023
நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல்: அன்று அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி

மடத் தலைவர்கள், தங்கச் செங்கோலை மட்டுமல்ல, தங்களைக் காத்துக் கொள்ள நவரத்தினம் பதித்த செங்கோலையும் தருவார்கள் – பேரறிஞர் அண்ணா Image
ஆகஸ்ட் 24, 1947 அன்று திராவிட நாடு இதழில் வெளியான ‘செங்கோல், ஒரு வேண்டுகோள்’ கட்டுரையில், சுதந்திரத் தினத்தன்று நேருவிடம் மடத்தின் தலைவர் தங்கச் செங்கோலை ஒப்படைத்ததன் பின்னணியை அண்ணாதுரை கேள்வி எழுப்பினார் என்று தி ஹிந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“இது எதிர்பாராதது மற்றும் தேவையற்றது. இது தேவையற்றது மட்டுமல்ல. இதன் பின்னணியில் உள்ள ஆழமான அர்த்தத்தை சிந்தித்தால், அது ஆபத்தானது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்” என்று, அப்போது திராவிடர் கழகத்தில் அங்கம் வகித்த அண்ணா எழுதினார். கட்டுரை வெளியானபோது
Read 12 tweets
May 24, 2023
#திராவிடமாடல்

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால்,
பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர,
ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
Read 4 tweets
May 24, 2023
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் Image
என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர்
பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(