தீ பரவட்டும் Profile picture
நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது - அய்யா பெரியார்.
G Selvadoss JA Profile picture Sundar Vasudevan Profile picture Dravidam trendiest Profile picture சிட்டுக்குருவி Profile picture iNLiNE4 Profile picture 8 subscribed
Nov 13, 2023 48 tweets 6 min read
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப்பட்டது என்ற வரலாற்றை மறுவாசிப்பு.

பெரியாரை எதிர்த்தால் பெரிய ஆளா ஆகலாம் எனும் நோக்கில் இன்னும் பெரியார் சிலையை தொடக் கூட முடியாமல் பிரச்னைக்கு தொடங்கியவன் செத்துட்டான் (தயானந்த சரஸ்வதி சாமி)அதை வைத்து பொழப்பு நடத்தி ஈன வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான் அர்ஜுன் சம்பத்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து சற்று தூரத்தில், காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பிலும் போலீஸ் பாதுகாப்பிலும் இந்த சிலை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ,
Jul 1, 2023 10 tweets 2 min read
#Maamannan
#மாமன்னன்

"அருந்ததியர் தனபாலை சபாநாயகராக நியமித்து,
மாமன்னன் படக் கதையை அப்போதே உண்மையாக்கியவர் அம்மா.!"
#அடிமைகள்பெருமிதம்.

* சபாநாயகர் தனபால் சட்டமன்றத்துக்கு வரும்போது, முதலமைச்சரான தான் எழுந்து நிற்க வேண்டி வருமே என்பதால். தனபால் அவர்கள் சபாநாயகராக இருக்கும்வரை சட்டமன்றத்திற்கு தனபால் அவர்கள் வந்ததற்கு பிறகு லேட் ஆக சபைக்கு வந்தவர்தான் இந்த ஜெயலலிதா...

* டெல்லியில் இருந்து சென்னைக்கு தான் பயணம் செய்யவிருந்த தனி விமானத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் அருணாச்சலம் அவர்கள்
May 29, 2023 13 tweets 2 min read
தமிழ் சைவ மடங்களை ஆரிய மயமாக்கும் முயற்சியை வடவர் செய்கிறார்கள்' என பாலபிரஜாபதி அடிகளார் சொல்வதே அப்பட்டமான உண்மை.
சைவ மடாதிபதிகள் ஆரிய-சனாதன கும்பலுடன் இணைந்து தமிழ் சமய விரோதிகளாகிறார்கள். ஆதீனம் என்றால் என்ன?

சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
May 29, 2023 12 tweets 4 min read
நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல்: அன்று அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி

மடத் தலைவர்கள், தங்கச் செங்கோலை மட்டுமல்ல, தங்களைக் காத்துக் கொள்ள நவரத்தினம் பதித்த செங்கோலையும் தருவார்கள் – பேரறிஞர் அண்ணா Image ஆகஸ்ட் 24, 1947 அன்று திராவிட நாடு இதழில் வெளியான ‘செங்கோல், ஒரு வேண்டுகோள்’ கட்டுரையில், சுதந்திரத் தினத்தன்று நேருவிடம் மடத்தின் தலைவர் தங்கச் செங்கோலை ஒப்படைத்ததன் பின்னணியை அண்ணாதுரை கேள்வி எழுப்பினார் என்று தி ஹிந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
May 24, 2023 4 tweets 1 min read
#திராவிடமாடல்

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர,
May 24, 2023 12 tweets 3 min read
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் Image என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர்
Apr 23, 2023 100 tweets 10 min read
குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?

குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெரியார் என்ன செய்தார்? என அந்த மக்கள் கேட்கிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களுக்கு பெரியார் என்ன செய்தார் அவரது நினைவாக இன்றுவரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,
Mar 12, 2023 12 tweets 4 min read
மீண்டும் ஒரு லட்சுமி காந்தன் 😂😂

எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும், பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றிமிகமிக
Mar 12, 2023 7 tweets 2 min read
கலைஞரை தஞ்சாவூர் தொகுதியில் தோற்கடிக்க ஐந்து ரூபாய் பணமும், உப்புமாவும் லஞ்சமாக கொடுத்தது.
அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க, காஞ்சிபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெங்கடாசலப்பதி படத்தின் மீது சத்தியம் வாங்கியது, தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் வைக்க சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை நிறைவேற்றாமல் அவரை மரணம் அடைய செய்தது.
சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் நட அனுமதி கொடுத்து நிலத்தடி நீர் குறைய காரணம் ஆனது,
Mar 2, 2023 5 tweets 2 min read
எடப்பாடி கொங்கு மண்டலம் வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தில் காடை கூட்டம், கன்னங்கூட்டம், செல்லங்கூட்டம், மணியங்கூட்டம், அழகன்கூட்டம் எனப் பல கூட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி கன்னங்கூட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்தக் கன்னங்கூட்டத்தில் நசியனூர் கண்ணன், காஞ்சிகோவில் கண்ணன், மொடா கண்ணன், பெயர் வைப்பு கண்ணன், காலமங்கலம் கண்ணன், குலநள்ளிகண்ணன், காகம் கண்ணன், பாசூர் கண்ணன் எனப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
Feb 3, 2023 6 tweets 2 min read
#என்றென்றும்அண்ணா

வேறெப்படி அழைப்பது?

“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;

மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு, மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
Feb 3, 2023 6 tweets 2 min read
*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..

அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
Feb 2, 2023 19 tweets 3 min read
#என்றென்றும்_அண்ணா

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969)

அண்ணா ஆட்சியின் சாதனைகள்🙏

சாமானியர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைகளை உருவாக்கினார் அண்ணா. திமுக உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். குறைந்தது 25 பேர் கொண்ட அமைப்புகள் கிளைகளாகப் பதிவுசெய்யப்பட்டன. ஓராண்டுக்குள் 2,035 பொதுக்கூட்டங்களில் பேசினார்கள் திமுக தலைவர்கள். ஆளாளுக்குப் பத்திரிகைகளை உருவாக்கி நடத்தினார்கள்.
Jan 28, 2023 19 tweets 3 min read
பிபிசி ஆவணப்படத்தின் முதல் பகுதியைப் பார்த்தேன். குஜராத் கலவரம் குறித்து நமக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான தகவல்களைச் சீரான முறையில் தக்க சான்றுகளுடன் விவரிக்கிறது. இசுலாமியப் படுகொலைகள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் பயன் அதிலுள்ள Image பதற்றமான உண்மையின் குரலே. காலம் கடந்தும் அது நம்மை உலுக்கத் தவறுவதில்லை. குற்றங்களின் கல்லறைகளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பூதங்கள் எழும், அவை நிரந்தரமாக உறங்குவதில்லை என்பதற்கான சான்று இப்படம்.
Jan 26, 2023 59 tweets 7 min read
தமிழகம் முழுக்க உள்ள அனைத்து பெரிய கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிதம்பரம் நடராசர் கோயில் மட்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சர்ச்சைக்குரியதாக தொடர்ந்து வருகிறது. 1885 ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் கோவில் தொடர்பாக வழக்கு நடந்துள்ளது. 1951 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சிதம்பரம் கோயில் தனிச் சொத்து அல்ல அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராசா, சிதம்பரம் கோயிலை சட்ட வரம்பிற்குள் கொண்டுவர ஆணை பிறப்பித்தார்.
Jan 26, 2023 8 tweets 1 min read
ராபர்ட் கிளைவ்! அன்று சொன்னது! இன்றும் உண்மையாக இருக்கிறது!

"ராபர்ட் கிளைவின் வாழ்வினை படித்த பொழுது ஒரு செய்தி நெஞ்சில் தைத்தது!

அவனை லண்டன் பாராளுமன்றத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்கின்றார்கள்,
இந்திய மக்களை தரக்குறைவாக நடத்தினீர்களாமே..?
அரசர்களிடம் லஞ்சம் பெற்றீர்களா?

கிளைவ் சொல்கின்றார்.

"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,
இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது!
நமது அரசு மக்களுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌
Jan 19, 2023 22 tweets 4 min read
காமராஜர் காலத்தில் குடிப்பதற்கு யாருகிட்ட பணம் இருந்தது. பணம் இருந்தவன் லைசென்சோட குடிச்சிட்டு தான் இருந்தான். இல்லாதவர்கள் அவனவன் சொந்தமாக கள்ளச் சாராயத்தை தானே காய்ச்சி குடிச்சிட்டு இருந்தார்கள். Image பஞ்சம்
சந்தை கஞ்சி
தமிழ்நாடு மாநில உரிமை எல்லாம் சந்தி சிரித்தது யாருடைய ஆட்சியில்

காமராஜரும் ஏழை
மக்களும் ஏழை
சில பண்ணையாளர்களின் கைவசமே ஆட்சி இருந்தது.

திராவிட ஆட்சியில்தான் தமிழ்நாடு உருப்பட்டது.

Jan 17, 2023 38 tweets 5 min read
#சேதுசமுத்திரதிட்டம்

சேது சமுத்திர திட்டம்: பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை நீடிக்கும் 150 ஆண்டுக்கால கனவு

https://www.bbc.com/tamil/a... இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமற்ற பாக் நீரிணை பகுதியைத் தோண்டி, பெரிய கப்பல்கள் செல்ல வழி செய்வதன் மூலம் இந்தியாவின் கிழக்கு - மேற்குக் கடற்கரைகளை இணைக்கும் சேது சமுத்திரத் திட்டம், தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று.
Jan 17, 2023 7 tweets 2 min read
#திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
Nov 10, 2022 19 tweets 4 min read
சனாதன போஸ்ட் மேனுக்கு எச்சரிக்கை !

#Kerala #PinarayiVijayan #MohammadArifKhan #TNGovernor
#Gobackravi

சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்? - விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழக்கறிஞர் ஆர்டிஐ -யில் முறையீடு 🤭 Image சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை, இந்துவின் அர்த்தம், பெரியாரின் கொள்கைகள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசுவது உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் அளிக்கும்படி  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
Nov 10, 2022 5 tweets 1 min read
தலித் என்ற அடையாளம்

இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை தலித் தீண்டா சாதிக்குள் அடைத்து ரசித்தது ஆர். எஸ். எஸ் -பாஜக எனும் இந்துத்துவ காம்போதிகள் எம்.பி. பதவி வழங்குவதற்காக.

நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த