கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம்
கடந்த புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட தரவுகளில் தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கீனி மீனி (#KeenieMeenie)...
1/8
...என்ற நிறுவனம், 1980களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது என்ற ஒப்பந்தமிட்டுருந்தாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றொரு ஆயுதக்குழுவாக அது செயல்பட்டது. இலங்கை ராணுவத்தினரோடு இணைந்து புலிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.
2/8
கீனி மீனி கூலிப்படையினர் ஈவு இரக்கமற்று செயல்பட்டுள்ளனர். அதில் ஒன்றாக, 1986 ஜூன் 7 அன்று, ஒரு பேருந்தில் பொதுமக்களோடு புலிகளும் செல்கின்றனர் என்ற சந்தேகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அப்பேருந்தை சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.
3/8
இந்த தகவல்களை இங்கிலாந்து அரசு தாமதமாக வெளியிட்டுள்ளதால் இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பலர் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பியுள்ளனர். கீனி மீனியின் அப்போதைய தலைவர் ஜிம் ஜான்சன், இலங்கைக்கான மேலாளர் பிரையன் பேட்டி (Brian Baty) ஆகியோர் விசாரிக்கப்படாமலே இறந்துவிட்டனர்.
4/8
இது குறித்த பல்வேறு தகவல்களை திரட்டிய இங்கிலாந்தை சேர்ந்த பில் மில்லர் (@pmillerinfo), "Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் ஆவணப்படம் ஒன்றும் வெளிவர உள்ளது. பில் மில்லர் தமிழீழ இனப்படுகொலையில் ஈடுபட்ட...
5/8
...இங்கிலாந்து அரசை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறவர். இவரது ஆய்வுகளை, மே 17 இயக்கம் வெளியிட்ட "தமிழினப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு" என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளோம். மேலும், 2018-இல் தோழர் @thiruja மீது UAPA வழக்கு பாய்ந்த போது, அறிக்கை வெளியிட்டு ஆதரவளித்தவர்.
6/8
பில் மில்லர் வெளியிட்ட தகவல்களை கொண்டு கூலிப்படையினர் குறித்த ஐநா சிறப்பு பிரிவுக்கு @TamilInfoCentre கடிதம் எழுத, ஐநாவின் 6 சிறப்பு அதிகாரிகள் பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதியுள்ளனர். இங்கிலாந்து அரசு அதிகாரிகளின் நேரடி பங்கு குறித்து கேள்வியெழும்பிய நிலையில்,...
7/8
தற்போது பெருநகர காவல்துறை, தமிழர்களை கொன்ற கூலிப்படையினர் மீது விசாரணையை துவங்கியுள்ளது.
இவ்விசாரணைக்கு தேவையான ஆவணங்களை வழங்கி, விசாரணை முறையாக நடைபெற ஒத்துழைக்க வேண்டுமென நீதி வேண்டி போராடும் தமிழர்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.
இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் கட்டாய இந்தி! அமித்சா தலைமையிலான குழுவின் பரிந்துரை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்! இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை எதிர்த்திடுவோம்! பாஜக இந்துத்துவ இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்!
இந்திய ஒன்றிய அரசின் தொழிற்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும், பள்ளிக்கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிலைகளில் இந்தியை கட்டாயமாக்கும்...
2/
பரிந்துரைகளை அமித்சா தலைமையிலான குழு அளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த கட்டாய இந்தி திணிப்பு முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு கடந்த 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 20 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை...
3/
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கிலிருந்து பாஜக வெளியேற்றப்படாவிடில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் 14-05-2022 கருத்தரங்கில் மே 17 இயக்கம் பங்கேற்காது! - மே பதினேழு இயக்கம்
வரும் 14-05-2022 சனிக்கிழமை மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில்..
1/
நடைபெறவிருக்கும் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல் - கருத்தரங்கில் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலையும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவதற்கு,
2/
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதே வேளை, நிகழ்வில் பங்கேற்கும் பிற அழைப்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை. அழைப்பிதழ் தரப்படாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் அழைப்பிதழின்...
3/
மாஞ்சோலைப் படுகொலை (1999) - அரச பயங்கரவாதத்தின் கொடூரம்!
தமிழகத்தில் நடந்த அரச பயங்கரவாதப் படுகொலைகளில் ஜூலை 23, 1999-இல் நடைபெற்ற திருநெல்வேலி மாஞ்சோலைப் படுகொலை வாரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளி. அன்றைய திமுக அரசின் காவல்துறை நிகழ்த்திய மனித தன்மையற்ற அடக்குமுறையால்...
1/
தங்கள் அடிப்படை உரிமைக்குப் போராடிய பட்டியல் சமூகத்தை சார்ந்த 17 தொழிலாளிகள் படுகொலைக்கு உள்ளானர்கள்.
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசிடம் இருந்து மும்பையை சேர்ந்த ஒரு பனியா மார்வாடி முதலாளியிடம் நியாயமற்ற விலைக்கு குத்தகைக்கு தரப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்த மக்களோ...
2/
பெரும்பாலும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டும், மிகக் குறைந்த கூலி வழங்கப்பட்டும் கொடுமைகளுக்கு உள்ளான தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். ரூபாய் 56 என்றிருந்த தினக்கூலியை உயர்த்தி ரூபாய் 150-ஆக தருமாறும்...
3/
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் நினைவுநாள் - 22.07.1968
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் (நியமனம்), தேவதாசி முறையை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவருமான மருத்துவர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள் இன்று.
1/
தொடக்க கல்வியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும், உயர்நிலைக் கல்வி சேர்வதற்கு அடிப்படைவாத சமூகம் பெரும் தடையாக இருந்தது. இது அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா அவர்கள் அன்னை முத்துலட்சுமி அவர்களுக்கு..
2/
மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் இடம் கொடுத்தது மட்டுமல்லாமல், படிப்பதற்கு நிதி உதவியும் செய்தார்.
அப்பளியில் மட்டுமல்லாமல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் (அறுவை சிகிச்சை பிரிவு) படிக்கும் போதும் அன்னை முத்துலட்சுமி மட்டுமே பெண் மானவியாக இருந்தார்.
3/
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் விதமாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகளில்
பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய உலவுச் செயலியின் மூலம் ஊடுருவி உளவு பார்த்த மோடி அரசினை கண்டித்து, கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாலை 4 மணியளவில், அனைத்துக்கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்
பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி மற்றும் மதிமுக, தமிழ் புலிகள், விசிக , சிபிஎம்(எம்எல்), SDPI உள்ளிட்ட அனைத்து ஜனநாயக முற்போக்கு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள்,
உளவு பார்க்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி! ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- மே பதினேழு இயக்கம்
பெகாசஸ் ஸ்பைவேர் (#Pegasus) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின்..
பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற..
2/
தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி..
3/