"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் 01.02.2017 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன.
மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.
அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 19 மாதங்களாக
சட்டப்பேரவையிலோ வேறு எங்குமோ எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைத்தது அதிமுக அரசு. BJP யினரும் வாயை திறக்கவில்லை
சட்டசபையில் அப்போதே உண்மையை சொல்லியிருந்தால் ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திட முடியும் என 201வது விதி கூறுகிறது.
பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பவரால்
நீட் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று 6 ஜூலை 2019ல்
விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில்தான் சட்டசபை தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்ட விபரத்தை மத்திய அரசு வக்கீல் வெளிட உண்மை வெளியே தெரிந்தது.
கடைசிவரை உண்மையை அதிமுக வெளியே சொல்லவேயில்லை
19 மாதங்களாக உண்மையை மறைத்த அதிமுக அரசின் துரோகத்தை மன்னிக்க முடியுமா?
பச்சை சங்கங்களுக்கும் தும்பிகளுக்கும் தான் இந்த சமூகத்தின் மீது எவ்வளவு அக்கறை?
ஏதாவது கூறி அரசின் மீது கல்லெறிந்து சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டும் இவர்களுக்கு
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்தது அரசல்ல, உயர்நீதிமன்றம்.
அதற்கும் விளக்கம் கேட்டும் கட்டுபாடுகளை
அறிவிக்கவும் சொல்லி வழக்கை 28 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.
ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்றைய நிலை நிலையில் தடை செய்யப்பட்ட் இயக்கமல்ல. இதற்கு முன்பு எடப்பாடி ஆட்சியிலும் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
அதைப்பற்றி எவரும் பேசக்காணோம்
இப்போது அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து பேரணி வழித்தடங்களை கடைபிடிக்க சொல்லலாமே தவிர அனுமதியை சட்டபூர்வமாக மறுக்க முடியாது என்பதே உண்மை.
மை டியர்ஸ்....
ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று அறிவித்த பிறகும் விடுதலைப்புலிகள் பெயரால் பிரபாகரன் படத்தோடு
ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போன்று வடிவமைத்து, அதில் அந்த ஊடகம் சொல்லாத செய்தி ஒன்றை சொல்லி போஸ்டராக ஒட்டி இருக்கிறார்கள்.
வழக்கு பதியப்பட்டு அச்சகத்தை விசாரிக்கிறார்கள். அதை ஒட்டிய பிலிப்ராஜ் என்கிற கொலைக்குற்றவாளி மாட்டுகிறான்.
வீட்டை சோதனை செய்தால் இன்னும் முதல்வரை
அவதூறாக சித்தரிக்கும் பல போஸ்டர்கள் பிடிபடுகிறது.
விசாரணையில் இதை ஒட்ட சொல்லி கொடுத்தது சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சத்யநாதன் என்கிறான். இவன் பல வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறான்.
அவனிடம் நடத்திய விசாரணையில் இதை கொடுத்தது சிவகுருநாதன் என்கிற ஆளின்
பெயரை சொல்லி இருக்கிறான்.. இந்த ஆளும் பல குற்ற வழக்கின் பின்னனியுடன் ஜாதி கலவர வழக்கில் கைதாகி இருக்கிறான்
சிவகுருநாதனை விசாரித்தால் இதை வடிவமைத்து தந்தவன் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்னகுமார் பெயரை சொன்னதும், பிலிப்ராஜ் தொடங்கி கிருஷ்னகுமார் வரை கூண்டோடு தூக்குகிறது காவல்துறை
வன்னிக்காட்டில் இருந்து மூனு பேரும் புறப்பட்டோம்.. பதிரெண்டாயிரம் உயரத்தில் பறக்கறோம் அண்ணா னு தம்பி மொட்டப்பன் சொன்னார்..
திடீன்னு உலங்கு வாகனம் தடுமாறுது... வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கருமேகம். அவை வந்து முட்டும் வேகத்தில் உலங்கு குலுங்குது வாகனம்..
இதனுள் புகுந்து இயக்குவது சிரமம் அண்ணா என்கிறான் தம்பி.
கீழே அடர்ந்த வனம்.. இறக்கவும் முடியாது, தொடர்ந்து இயக்கவும் முடியாது.
அண்ணணை திரும்பி பார்க்கிறேன்.. தம்பி நான் பக்கத்துல இருக்கிறதால கவலையே இல்லாம நல்லா தூங்கறார்.
ஹாஹ்ஹாஹா ப்பே.
இறப்பது உறுதி என்றாகி விட்ட
போது, உயிராவது மயிராவது..
கதவை திறந்து உலங்கு வாகனத்தின் மூக்கில் அமர்ந்து கெட்டியாக இறக்கையை ஒரு கையால் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் கருமேகத்தை விலக்கி விட்டுக் கொண்டே வந்தேன்..
சொன்னா நம்ப மாட்டீங்க, அவ்வளவு குளிர், முகத்துல அறையற மாதிரியான காற்று வேகம்..