Vignesh Anand Profile picture
Sep 14, 2020 3 tweets 1 min read Read on X
#நீட்என்ற_மனுநீதிதேர்வு

அனிதா முதல் மோதிலால் பல சம்பூகன்களை இழுந்து வருகிறோம். நாமும் இப்போது உத்திரகாண்டத்தில் இருக்கிறோமா?
. 1/n Image
மகாராஜா! நான் நான்காம் வர்ணத்தவன்; சம்பூகனென்று எனக்குப் பெயர். இந்தச் சரீரத்துடன் தேவ பதவியை அடைய விரும்புகிறேன்.
ஆகையால் பொய் சொல்லமாட்டேன். இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி, அவன் தலையை வெட்டினார்.
தேவர்கள் நல்லது நல்லது என்று ராமனை அடிக்கடி புகழ்ந்தார்கள்.

ராமராஜ்ஜியத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் , அனைத்து சாதியனரும் மருத்தவராகலாம் என்று சொல்கின்றவர்களையெல்லாம், ராமன் போன்ற ஒரு சூத்தரனை கொண்டே மற்றொரு சூத்தரனின் தலையை வெட்டுவார்கள் .

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh Anand

Vignesh Anand Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VigneshAnand_Vm

Sep 14
ஆர்.எஸ்.எஸ்
1980 களில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ?

1980-இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான
மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று, சங்கம் மிக வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதோடு சங்கத்தின் சகோதர அமைப்புகள் அனைத்தினது வேலையும் நல்ல முன்னேற்றகரமானதாக உள்ளது. எங்கும் இந்து வேட்கை பற்றிக் கொண்டு வருகிறது. உண்மையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.

(தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை, ஆர்.எஸ்.எஸ். வெளியீடு, பக். 4-5) 1/nImage
தமிழ்நாட்டில் கலவரம் வழியாக வளரலாம் என ஆர்.எஸ்.எஸ் நினைத்தது .

அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் மண்டைகாடு.

1982 மார்ச் மாதம் பிரிக்கப்படாத அன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையில் மதக் கலவரம் வெடித்தது.

அதற்கு முன் ஒரு சின்ன flashback ....

1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 210 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.

ஆதிக்க சாதியினரின் அட்டூழியம் , காவல்துறையின் வன்முறையும் , அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்தன .

25-07-1981 அன்று ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒரு நேர்காணலை எடுத்தார்.

அதில் ஒரு சிறு பகுதி

ஆசிரியர் : இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’!

‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். “இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, “இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டார். 2/nImage
Image
மீனாட்சிபுரம் மத மாற்றம் இந்துவ அமைப்புகளை எரிச்சல் ஊட்டியது

மண்டைகாடு

மத வேறுபாடு இன்றி மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்துக்கள் கிருஸ்துவர்களின் மதஒற்றுமையை பொறுத்துக் கொள்ள RSS மதவெறியர்கள், ஒற்றுமையை குழைக்க 1981 முதல் சூழ்ச்சிகளை செய்ய தொடங்கினது.

மண்டைக்காடு பக்கத்தில் உள்ள மாடத்தட்டுவிளை என்னும் ஊரில் வைக்கப்பட்டிருந்த சிலுவை ஒன்று காணாமல் போனது. அது தொடர்பாக இரு மதத்தினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் வந்தன. பேச்சளவில் அது நின்றது. மக்களிடையே பழைய ஒற்றுமை நிலை மாற தொடங்கியது.

அடுத்து, அந்தப் பகுதி கிறித்துவர்கள், உலக ஜெப வாரம் கொண்டாடினர். பல ஊர்களிலிருந்தும் கிறித்துவ மக்கள் நாகர்கோயில் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு ஒரு சிலுவையையும் வைத்தார்கள். ஆனால் அந்தச் சிலுவை சில நாள்களில் காணாமல் போனதுடன், அங்கு ஒரு பிள்ளையார் சிலையும் RSS மதவெறியர்களால் வைக்கப்பட்டது. அப்போது கலவரம் ஏதும் நடக்கவில்லை.

RSS அமைப்பினர் மதக்கலவரத்தை உருவாக்க தீவிரமாக செயல்பட்டார்கள். 1982ஆம் ஆண்டு பிப் 13, 14 ஆம் நாள்களில், நாகர்கோயிலில் இந்து எழுச்சி மாநாடு நடத்தப்பட்டு இந்து மக்கள் மனதில் மதவெறியை புகுத்தினார்கள்.

பகவதி அம்மன் மாசி விழாவிற்கு வந்த இந்துப் பெண்களைக் கிறித்துவ இளைஞர்கள் கேலி செய்கிறார்கள் என்று போலி செய்திகளை ஊருக்குள் பரப்பிவிட்டு கலவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

காவல்துறை முதலில் தடியடி நடத்தியது. பிறகு துப்பாக்கி சூடு நடத்தியது. 6 பேர் அந்த இடத்த்திலேயே சுட்டு கொன்றது.

இந்த கலவரம் பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. அடுத்த சில நாள்களில் மேலும் மூவர் பலியானார்கள்.

எம்.ஜி.ஆர் அப்போது ஆட்சியில் இருந்தார் .

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ் இன் வாழ்த்து. 3/nImage
Read 10 tweets
Sep 2
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன..

அதை நினைவு கூறும் பொருட்டு ஊடாட்டம் ஆய்வுக்கு குழு பல அறிஞர் பெருமக்கள் , ஆய்வு மாணவர்களை கொண்டு வார இறுதி நாட்களில் கருத்தரங்கங்கள் நடத்தினார்கள் .

அம்பேத்கர் பார்வையில் மாநில சுயாட்சி .

கூட்டாட்சி , அம்பேத்கரும் - அம்பேத்கருக்கு பிறகும் .

மாநில சுயாட்சியும் - முஸ்லீம்கள் , தலித்துகள் பிரதிநிதித்துவம் .

கூட்டாட்சியும் - கம்யூனிஸ்ட்டுகளும்.

நிதிக் கூட்டாட்சி - நிதிப் பகிர்வின் அரசியல்.

மாநில சுயாட்சியும் - இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்

ஒன்றிய அரசியலில் கலைஞரும் மாநிலச் சுயாட்சியும்

போன்ற தலைப்புகளில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஊடாட்டம் குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும் .

காணொளிகள் @Kulukkai YouTube தளத்தில் உள்ளன .

1/n


@SuriyaKML நிதிக் கூட்டாட்சி - நிதிப் பகிர்வின் அரசியல். 2/n
ஒன்றிய அரசியலில் கலைஞரும் மாநில சுயாட்சியும்
A.S Paneerselvam 3/n

Read 8 tweets
Jul 6
கதிரவன் - இவன் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கின் குற்றவாளி. ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பன்.

சின்னா கேசவலு - BSP கட்சி பிரமுகர் தென்னரசுவின் நண்பன்.

சின்னா கேசவலுக்கும் கதிரவனுக்கும் இருந்த முன்பகை காரணமாக கதிரவனை சின்னா கேசவலு கொலை செய்கிறான் .

மே 2010 , புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷ் தனது காதலி அஞ்சலையுடன் சேர்ந்து சின்னா கேசவலுவை தீர்த்துகட்டுகிறார்கள்.
1/nImage
Image
அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து, 2015ல் கதிரவன் கொலைக்கு உடந்தையாயிருந்த சின்னா கேசவலுவின் நண்பனான BSP தென்னரசுவையும் தீர்த்துக் கட்டுகிறான் ஆற்காடு சுரேஷ். 2/n Image
இதன் காரணமாக BSP தென்னரசுவின் தம்பியான ரவுடி பாம் குமார் ஆற்காடு சுரேஷின் மீது வெஞ்சினத்தோடு இருக்கிறான். 3/n
Image
Image
Read 9 tweets
Jun 12, 2022
ஜெயலலிதா ஆட்சிக் காலத் தில் சின்னவாள், ஜெயேந்திர ருக்கு என்ன கதி ஏற்பட்டது ? அந்த மகாகுருவையே சிறைக் கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகி றோம்! 1/n
கைது செய்து சிறைக் கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் எண்ணுகிறோம்! 2/n
இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; "பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்" - என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்! 3/n
Read 6 tweets
Jun 10, 2022
எனக்கும் சிதம்பரத்தின் மீது கோவம் உள்ளது அதற்காக அவரை ராஜாஜிவுடன் ஒப்பிடுமளவெல்லாம் வன்மம் இல்லை.

கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தில் கூட “கருணாநிதி” என்று பல எதிர்ப்புகள் வந்த போதும் பேசிய ”கொம்பன்” சமஸ் ஏன் ராஜாஜி என்று எழுத வேண்டும் சக்ரவர்த்தி இராசகோபாலன் என்று எழுதலாமே ?
1/n
திராவிட இயக்கத்தின் அஸ்தமனம் என்று எழுதி வியாபாரம் பார்த்த பிறகு அடிக்கும் காற்றின் திசை அறிந்து கலைஞர் புகழும் அண்ணா புகழும் பாடினார்.

அடுத்ததாக இந்தியையும் குலக் கல்வியையும் திணித்த சக்ரவர்த்தி இராசகோபாலனை பற்றித்தான் தொகுப்பு தயார் செய்துக் கொண்டிருக்கிறாரா ? சமஸ் ? 2/n
ஒன்றிய அரசியலில் சக்ரவர்த்தி இராசகோபாலன் கிழித்த கிழி தான் என்ன ?

“தமிழ்நாட்டு அரசியலர்களின் தொலைநோக்கின்மை மற்றும் கற்பனை வறட்சி’யையே பேச வேண்டி இருக்கிறது.” என்று எழுதியுள்ளார் … 3/n
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(