Surya Xavier Profile picture
Sep 14, 2020 4 tweets 1 min read Read on X
அதிகாரம் சார்ந்த எந்தவொன்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பார்ப்பனர்களின் நரித்தனம்.

மருத்துவம் என்ற ஒன்றை பண்டுவம் என்ற பெயரில் நாவிதர்கள் தான் ஆரம்ப காலத்தில் செய்து வந்தனர்.
அப்போது பார்ப்பனர்கள் மருத்துவம் செய்வதை சாதி தொழிலாக இழிவாக கருதினர்.
அதன் பிறகு தொழில்நுட்பம் வளர்ந்து நவீன மருத்துவம் உருவானது.

சூத்திரர்களும், பஞ்சமர்களும் அதைக் கற்றனர்.
உடனே விழித்துக் கொண்ட பார்ப்பனர்கள் அதற்குள் தங்களை மட்டும் நிலைநிறுத்த வேண்டுமென்று
சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவர் ஆக முடியும் என்ற விதியை உருவாக்கினர்.
அதை உடைத்தவர் நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசர்.
அதன் பிறகு இட ஒதுக்கீடு உருவாகி
பஞ்சமர்களும், சூத்திரர்களும் டாக்டர்களாக வந்தனர்.

இதைப் பொறுக்க முடியாத பார்ப்பனியம்
தொடர்ந்து தகுதி, திறமை என்றெல்லாம் தேர்வு முறைகளை தொடர்ந்து புகுத்த முயன்றது.
அதையெல்லாம் தகர்த்து, தாண்டி தான் சூத்திரர்களும், பஞ்சமர்களும் உயர்ந்தனர். அதன் வரலாறு நெடியது

அதன் தற்போதைய வடிவம் தான் நீட்.
நீட் எனும் தேர்வையும் தகர்த்துவிட்டால் அடுத்த தகுதியை தீர்மானிப்பார்கள்.

நீட் என்பது மனுநீதி தேர்வு முறை தான்.
நயவஞ்சகப் பார்ப்பனியம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Surya Xavier

Surya Xavier Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @suryaxavier1

Oct 24, 2022
அருப்புக்கோட்டையிலிருந்து பார்த்திபனூர் செல்லும் வழியில் நரிக்குடிக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு
உடையார்சேர்வை- ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கு மகன்களாகப் பிறந்தவர்கள் பெரிய மருது (1748),சின்னமருது (1753) மருது சகோதரர்கள்.

சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத
தேவரிடம் அந்தரங்கப் பணியாளர்களாக இருந்தனர்.1772 ல் முத்துவடுகநாதத்தேவர் காளையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிடும் போது வெள்ளையர்களால்
கொல்லப்பட்டார்.

மருதுசகோதரர்கள் அதன்பிறகு வெள்ளையர்களோடு போரிட்டு 1780 ல் வேலுநாச்சியாரை சிவகங்கை அரசியாக்கினர். வெள்ளையர்களுக்கு ஆதரவாக
பாளையக்காரர்கள் யாரேனும் செயல்பட்டால், அவர்கள்
ஆண்குறி அறுத்து எறியப்படும் என, திருச்சி மலைக் கோட்டையில் சுவரொட்டி ஒட்டினார்கள்.

1801 மே 28 முதல் அக்டோபர் 24வரை 150 நாட்கள் தொடர்ந்த போரிற்கு பிறகு, வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு 24-10-1801 ல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்
Read 4 tweets
Oct 22, 2022
அமித்ஷா யார்?

*2010 ல் போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கியக் குற்றவாளி.

*அதனால்,குஜராத்தில் தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர்.

*காவல்துறை தேடுதலிலிருந்து தப்பிக்க, மாறுவேடத்தில் 20 நாள்கள் தலைமறைவானவர்.

* போலித் துப்பாக்கிச் சூடு வழக்கின் சாட்சிகளைக் Image
கலைத்துவிடுவார் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

*துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும், குற்றவாளியாக
சி பி ஐ யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.

*குஜராத்தை விட்டு வெளியேறி, உத்திரப்பிரதேச மாநிலப் Image
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, முசாபர்நகர் கலவரத்தை நடத்திய புகாருக்கு ஆளானவர்.

*சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டிய பேச்சால், உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம், இவரது பரப்புரைக்குத் தடை விதித்தது.

*2002 ல் குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த Image
Read 4 tweets
Oct 5, 2022
காசும்-வீணையும்.

முதலாம் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரைவையில் (கிமு 340-290) பிரதம அமைச்சராக இருந்தவன் தான் சாணக்யன். இவனது பொருளாதார நூல் தான் அர்த்த சாஸ்திரம்.

இந்நூலில் தான் நாம் இப்போது சொல்லும் ரூபா என்ற சொல் உள்ளது. ரூபம் என்றால் வடிவம் என்றே பொருள்.
அர்த்தசாஸ்திரத்தில் ரூப்யரூபா என்பதற்கு வார்க்கப்பட்ட வெள்ளிக்காசு என்று பொருள் தருகிறது.

தங்கக்காசுகளுக்கு சுவர்ண ரூபா என்றும், செப்புக் காசுகளுக்கு தாமரரூபா என்றும், ஈயக்காசுகளுக்கு சீசரூபா என்றும் உள்ளது. உலகில் முதலில் சிங்க வடிவில் காசுகள் வெளியிட்டது கிமு 700 ல் லிடியா
நாட்டு மன்னன் தான். லிடியா என்பது இன்றைய துருக்கியை ஒட்டிய பகுதி. கி.மு.119 ல் தான் சீனர்கள் பேப்பர் நோட்டு முறையை அறிமுகம் செய்தனர். கி.பி.1661 ல் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் வங்கி தான், ரூபாயை வெளியிட்ட முதல் வங்கி.

கி.பி.17 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட ரகுநாதன் எனும் மன்னன்
Read 5 tweets
Oct 3, 2022
கடந்தகால வரலாற்றின் மீட்டுருவாக்கம் என்ற கதைகளின் மீதே
உலகம் முழுவதும் பாசிசம் கட்டமைக்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஜப்பான் மைஜியின் இராணுவ எதேச்சதிகாரம்,
ஹிண்டோயிசத்தின் மீதும்,மன்னர் வழிபாட்டின் மீதும் உருவானதே.

சீனாவில் 1930ல் சியாங்கே ஷேக்கின் பாசிஸ்டு புதுவாழ்வு இயக்கம்,
பண்டைய கன்பூசியஸ் தத்துவத்தின் மீதுதான் உருவானது.

ஹிட்லரும்-முசோலினியும் கடந்தகால பத்தாம்பசலித் தனமான கோட்பாடுகளின் மீதே பாசிசத்தைக் கட்டி எழுப்பினர்.

ஈரானின் ஷா மக்கள் ஆட்சியை நிறுவுவேன் என்று கூறித்தான், ஆதிகால முடிசூட்டுவிழாவை தனக்கு நடத்திக்கொண்டார்.
இந்திய நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மனு(அ)தர்ம அடிப்படையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திர அடையாளத்திலிருந்து நழுவி அதைத் தலித்துகளுக்கானதாக ஆக்கினர்.

வர்ணாசிரமம் என்ற கடந்தகால அவமானங்களிலிருந்தே,
Read 4 tweets
May 31, 2022
அரைவேக்காடு அண்ணாமலையே!
SC (Scheduled Castes)என்பதன் வரலாறு என்ன?1911 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது,பின்வரும் காரணிகளால் தீண்டத்தகாதவர்கள் எனப் பார்ப்பனியத்தால் கூறப்பட்டவர்களை,ஒரு பட்டியலில் அடங்கும் சாதிகளாக தொகுத்து,1935 சட்டத்தின் மூலம் 1937 அமலுக்கு வந்தது. அதன்படி...1/6
1.Denied the supremacy of the Brahmins,பிராமணர்களின் உயர் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

2.Did not receive the Mantra from Brahmana or other recognized Hindu Guru,பிராமணர்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவினரிடமிருந்து மந்திரங்களைப் பெறாதவர்கள். 2/6
3.Denied the authority of the Vedas,வேதங்களின் சட்ட அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

4.Did not worship the great Hindu Gods,இந்துக்கடவுள்களை வணங்காதவர்கள்.

5.Were not served by good not Brahmanas,பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

6.Have no Bramin3/6
Read 6 tweets
May 29, 2022
குற்றாலச் சிறப்பு.

உலகில் இரண்டு அருவிகள் புகழ் பெற்றதாகக் கூறுவார்கள்.
ஒன்று நயாகரா
மற்றொன்று விக்டோரியா.

பனிக்கட்டியாகிப் போன பிரமாண்டமான தொடர் ஏரிகளின், உருகிய நீரின் பிறப்பே நயாகரா.
37 மைல் ஓடி வந்து ஒரு பகுதி அமெரிக்காவிலும்,
மற்றொரு பகுதி கனடாவிலும் தரையிறங்குகிறது. 1/4 Image
ஆப்பிரிக்காவின் சாம்பசி நதியில் அமைந்த அருவி விக்டோரியா.இந் நதியின் நீளம் 2200 மைல். 400 அடி உயரத்திலிருந்து மலையைப் பிளந்து கொண்டு தரையில் கொட்டுகிறது.
நயாகராவும்,விக்டோரியாவும் காட்சி சுகத்தை மட்டுமே தரும்.

உலகிலேயே தொடும் சுகத்தைத் தரும் ஒரே அருவி குற்றாலம் மட்டுமே.2/4 Image
கேரள ஆரியங்காவு கணவாயில் இருந்து படிப்படியாக 5000 அடிவரை உயர்ந்து, அங்கிருந்து பொதிகை மலையை திரும்பிப் பார்க்கிறது ஒரு மலைத்தொடர். இது உயரமான சிகரம்.இதற்குப் பஞ்சந்தாங்கி மலை எனப்பெயர்.

இம்மலையிலிருந்து தான்
குற்றாலம் எனும் குழந்தையைப் பெற்றெடுத்த
சித்திரநதி பிறக்கிறது.3/4 Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(